0117 818181

யூனியன் வங்கியின் தவிசாளராக நிர்வாணா சௌத்ரி நியமனம்

யூனியன் வங்கியின் தவிசாளராக நிர்வாணா சௌத்ரி நியமனம்

யூனியன் வங்கியின் தவிசாளராக நிர்வாணா சௌத்ரி 2023 டிசம்பர் 21ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் நியமிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 2023 ஒக்டோபர் மாதம் யூனியன் வங்கியின் பணிப்பாளர் சபையில் நிறைவேற்று அதிகாரமற்ற, சுயாதீனமற்ற பணிப்பாளராக சௌத்ரி நியமிக்கப்பட்டிருந்தார். வியாபார முன்னோடி எனும் வகையில் ஆழமான அனுபவத்தை சௌத்ரி கொண்டுள்ளதுடன், CG கெப்பிட்டல் பார்ட்னர்ஸ் குளோபல் Pte Ltd இன் முகாமைத்துவ பணிப்பாளராகவும், நேபாளத்தின் CG Corp Group இன் கீழ் இயங்கும் பல்வேறு நிறுவனங்களின் தவிசாளராகவும் சௌத்ரி திகழ்கின்றார். நேபாளம், காத்மண்டு பல்கலைக்கழகத்திடமிருந்து வியாபார நிர்வாகத்தில் இளமானிப் பட்டத்தை கொண்டுள்ளதுடன், வியாபார நிர்வாகத்தில் முதுமானிப் பட்டத்தையும் பெற்றுள்ளார். அத்துடன், ஐக்கிய இராஜ்ஜியத்தின் லண்டன் பிஸ்னஸ் ஸ்கூல் மற்றும் ஐக்கிய அமெரிக்காவின் Massachusetts Institute of Technology ஆகியவற்றில் தொழில்முயற்சியாண்மை முதுகலைக் கற்கையை பூர்த்தி செய்துள்ளார்.

பணிப்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ள மலே முக்கர்ஜி மற்றும் சஞ்ஜய் போக்ரேல் ஆகியோரையும் யூனியன் வங்கி வரவேற்றுள்ளது.

கணக்காய்வு, இடர் மற்றும் தகவல் தொழில்நுட்பம் ஆகிய பிரிவுகளில் 42 வருடங்களுக்கு மேலான அனுபவத்தை கொண்ட வங்கித்துறையைச் சேர்ந்தவராக மலே முக்கர்ஜி திகழ்வதுடன், 2023 ஒக்டோபர் மாதத்தில் யூனியன் வங்கியின் நிறைவேற்று அதிகாரமற்ற, சுயாதீனமற்ற பணிப்பாளராக இவர் நியமிக்கப்பட்டார். இந்தியாவின் வங்கித் துறையில் பல முக்கிய பதவிகளை முகர்ஜி வகித்துள்ளதுடன், தற்போது நேபாளத்தில் CG Corp Global பெருமளவு பங்குகளை தம் வசம் கொண்டுள்ள நபில் பாங்க் லிமிடெட்டின் பணிப்பாளராகவும் திகழ்கின்றார். இந்தியாவின், பனாராஸ் இந்து பல்கலைக்கழகத்தில் பௌதீகவியலில் விஞ்ஞானவியல் முதுமானிப் பட்டத்தை (MSc) இவர் கொண்டுள்ளதுடன், இந்தியாவின், வங்கியியல் மற்றும் நிதியியல் இந்திய நிறுவகத்திடமிருந்து வங்கியியல் மற்றும் நிதியியலுக்கான உயர் கௌரவமும் வழங்கப்பட்டிருந்தது.

2023 நவம்பர் மாதம் யூனியன் வங்கியின் நிறைவேற்று அதிகாரமற்ற, சுயாதீனமற்ற பணிப்பாளராக சஞ்ஜய போக்ரேல் நியமிக்கப்பட்டார். நிதியியல் துறையில் பெருமளவு அனுபவத்தைக் கொண்டுள்ள போக்ரெல் ஒரு பட்டயக் கணக்காளர் என்பதுடன், முதலீட்டு நிர்வாகம், ஒன்றிணைப்புகள் மற்றும் கையகப்படுத்தல்கள் மற்றும் சொத்துகள் முகாமைத்துவம் போன்றவற்றில் பெருமளவு அனுபவத்தையும் கொண்டுள்ளார். இவர் தற்போது, துபாய் CG Corp Global இன் ஒன்றிணைப்புகள் மற்றும் கையகப்படுத்தல்களின் தலைமை அதிகாரியாக இயங்குகின்றார்.

இந்த நியமனங்களினூடாக யூனியன் வங்கிக்கு பெருமளவு அனுபவமும் நிபுணத்துவமும் ஏற்படுத்தப்பட்டுள்ளதுடன், வங்கியின் தலைமைத்துவத்தை பன்முகப்படுத்தவும், வலிமைப்படுத்தவும் மூலோபாய நகர்வாக அமைந்துள்ளது. வங்கிச் சேவைகளின் வளர்ச்சி, புத்தாக்கம் மற்றும் சிறப்பு ஆகியவற்றை மேம்படுத்துவதில் வங்கி காண்பிக்கும் அர்ப்பணிப்பை பிரதிபலிப்பதாகவும் அமைந்துள்ளது.

யூனியன் வங்கியின் பெரும்பாண்மை பங்காண்மையை CG Capital Partners Global Pte. Ltd. கையகப்படுத்தியுள்ளது

யூனியன் வங்கியின் பெரும்பாண்மை பங்காண்மையை CG Capital Partners Global Pte. Ltd. கையகப்படுத்தியுள்ளது

யூனியன் வங்கியின் பெரும்பாண்மை பங்குகளை Culture Financial Holdings கையகப்படுத்துவது தொடர்பில் 2022 டிசம்பர் மாதம் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், 2023 ஒக்டோபர் 24 ஆம் திகதி துணை நிறுவனமான CG Capital Partners Global Pte. Ltd. இனால் குறித்த கையகப்படுத்தல் கொடுக்கல் வாங்கல்கள் முற்றுப் பெற்றுள்ளமை தொடர்பான அறிவித்தல் கொழும்பு பங்குப் பரிவர்த்தனைக்கு வங்கியின் பணிப்பாளர் சபையினால் அறிவிக்கப்பட்டுள்ளது.

Culture Financial Holdings ஆனது CG Capital Partners Pte Ltd. இல் கொண்டுள்ள உரிமையாண்மையினூடாக, யூனியன் வங்கியின் பெரும்பாண்மை பங்குதாரராக திகழ்கின்றது. 160 க்கு மேற்பட்ட நிறுவனங்கள் மற்றும் 123 வர்த்தக நாமங்களை சர்வதேச மட்டத்தில் கொண்டுள்ள முன்னணி பன்முகப்படுத்தப்பட்ட நிறுவனமாகவும், ஆசியாவில் உறுதியான பிரசன்னத்தைக் கொண்டுள்ளதையிட்டும் CG Corp Global (CG) பெருமை கொள்கின்றது. தன்வசம் 15000 க்கும் அதிகமான ஊழியர்களையும் கொண்டிருக்கின்றமையும் குறிப்பிடத்தக்கது. வங்கியியல் மற்றும் நிதியியல், விருந்தோம்பல், சீமெந்து, நீர்மின் உற்பத்தி, தொலைத்தொடர்பாடல் மற்றும் கல்வி ஆகிய பல துறைகளில் பிரதான செயற்பாட்டாளராகவும் திகழ்கின்றது. நேபாளத்தின் நிதிச் சேவைகள் துறையில் பாரிய செயற்பாட்டாளராக இந்நிறுவனம் திகழ்வதுடன், நபில் வங்கியின் பெரும்பாண்மை பங்குதாரராகவும் திகழ்கின்றது. நேபாள பங்குப்பரிவர்த்தனையில் பட்டியலிடப்பட்ட மாபெரும் தனியார் வங்கியாகவும் நபில் வங்கி திகழ்கின்றது.

இலங்கையில் முதலீடு செய்வது தொடர்பில் CG தனது அவதானத்தை செலுத்தியிருந்த முதலாவது சந்தர்ப்பமாக இது அமைந்திருக்கவில்லை. நாடு முழுவதிலும் காணப்படும் பல உயர்மட்ட சொத்துகள், சொகுசு ஹோட்டல்கள் மற்றும் ரிசோர்ட்களில் பிரதான பங்குதாாராக திகழ்கின்ற நிலையில், நிதிச் சேவைகள் துறையிலும் தனது முதலீடுகளை வியாபித்துள்ளது. இலங்கைக்காக கொண்டுள்ள தனது அர்ப்பணிப்பை மீள உறுதி செய்யும் வகையில் இது அமைந்துள்ளதுடன், இந்த சவால்கள் நிறைந்த காலப்பகுதியில் ஆதரவளிப்பது மற்றும் வலிமையூட்டுவதற்கான மூலமாக திகழ்கின்றதுடன், இலங்கையில் வெளிநாட்டு முதலீட்டாளர் நம்பிக்கையை மீள உறுதி செய்வதாகவும் அமைந்துள்ளது. தனது பிரதான பங்குதாரராக இவ்வாறான சர்வதேச அதிகார மையத்தைக் கொண்டிருப்பது என்பது யூனியன் வங்கியைப் பொறுத்தமட்டில் மாபெரும் மைல்கல்லாக அமைந்துள்ளது.

CG Corp Global இன் தவிசாளர் கலாநிதி. பினோத் கே. சௌத்ரி கருத்துத் தெரிவிக்கையில், “இலங்கையின் நிதிச் சேவைகள் துறையிலும், யூனியன் வங்கியிலும் மேற்கொள்ளப்படும் மாபெரும் முதலீடாக இது அமைந்துள்ளது. வங்கி உறுதியான பதிவுகளைக் கொண்டுள்ளதுடன், வங்கித்துறையில் மேலும் உயர்ந்த ஸ்தானத்துக்கு செல்லவும், பல சாதனை மைல்கல்களை எய்தவும் அதிகளவு வாய்ப்புகளைக் கொண்டுள்ளது. இலங்கையில் முன்னணி தனியார் வர்த்தக வங்கிகளில் ஒன்றாக யூனியன் வங்கியைத் திகழச் செய்வதற்கு மூலோபாய வளர்ச்சி வழிமுறையை நாம் முன்னெடுக்கின்றோம். இந்த வளர்ச்சி என்பது மேலும் விஸ்தீரணப்படுத்தல்களையும், கையகப்படுத்தல்களையும் எதிர்கொள்ளலாம். நேபாளத்தின் மாபெரும் வங்கியாக நபில் வங்கியை திகழச் செய்வதற்காக மேற்கொள்ளப்பட்டிருந்த கையகப்படுத்தல் மற்றும் மறுசீரமைப்பு செயற்பாடுகள் போன்றன இதற்கு சிறந்த உதாரணமாகும். CG இன் பிரதான உள்ளம்சங்கள் மற்றும் நிபுணத்துவம் போன்றவற்றின் அடிப்படையில், ஆபிரிக்கா, நேபாளம் மற்றும் பூட்டான் ஆகிய முன்னிலை சந்தைகளில் யூனியன் வங்கியின் விரிவாக்கம் தொடர்பில் காணப்படும் வாய்ப்புகள் தொடர்பில் கவனம் செலுத்த நாம் எதிர்பார்க்கின்றோம். இலங்கையில் காணப்படும் நன்மதிப்பை பெற்ற மற்றும் சிறந்த மூலதன இருப்பை கொண்ட வங்கியுடன் இணைந்துள்ளதையிட்டு மகிழ்ச்சியடைகின்றோம். இணைந்து நாம் முன்நோக்கி பயணிக்கையில் மேலும் பல விடயங்களை எம்மால் மேற்கொள்ளக்கூடியதாக இருக்கும் என்பதில் நான் நம்பிக்கை கொண்டுள்ளேன்.” என்றார்.

யூனியன் வங்கியின் பிரதம நிறைவேற்று அதிகாரி இந்திரஜித் விக்ரமசிங்க கருத்துத் தெரிவிக்கையில், “நாட்டில் முன்னணி மற்றும் நம்பிக்கையை வென்ற வங்கியாக யூனியன் வங்கி தன்னை கட்டியெழுப்பியுள்ளது. CG Capital Partners Pte Ltd. உடன் கொண்டுள்ள பங்காண்மை என்பது, வங்கியினதும், அதன் ஊழியர்களினதும் மற்றும் அதன் வாடிக்கையாளர்களினதும் அடுத்த கட்ட வளர்ச்சிக்கான மாபெரும் தூண்டுதலாக அமைந்துள்ளது. உயர் மூலதன போதுமை விகிதத்தை கொண்டுள்ள வங்கிகள் வரிசையில் காணப்படுவதனூடாகவும், இந்தப் பங்காண்மையினூடாகவும், வங்கியின் நிதிசார் உறுதித் தன்மை மீள உறுதி செய்யப்பட்டுள்ளதுடன், எதிர்கால தந்திரோபாய விரிவாக்கத்துக்கு ஆதரவளிப்பதாகவும் அமைந்துள்ளது. வங்கியின் வளர்ச்சிப் பயணத்துக்கு முக்கிய பங்களிப்பாளராகவும் அமைந்துள்ளது.” என்றார்.

யூனியன் வங்கி பற்றி

28 வருடங்களுக்கு மேலாக இலங்கையின் நிதிச் சேவைகள் துறையில் அனுபவத்தைக் கொண்டுள்ள யூனியன் வங்கி, நாடு முழுவதிலும் பரந்து காணப்படும் தனது கிளை வலையமைப்பினூடாக, தனிநபர், கூட்டாண்மை மற்றும் சிறிய, நடுத்தரளவு தொழில்முயற்சியாளர் வங்கியியல் துறைகளில் பரிபூரண தீர்வுகளையும் சேவைகளையும் வழங்குகின்றது. 2011 ஆம் ஆண்டு முதல் யூனியன் வங்கி கொழும்பு பங்குப் பரிவர்த்தனையில் பட்டியலிடப்பட்டுள்ளதுடன், ஒழுங்குபடுத்தல் தேவைப்பாடுகளை பூர்த்தி செய்து, உறுதியான உயர்ந்த ஸ்தானத்தில் திகழ்கின்றது. வங்கியின் மூலோபாய ரீதியான துணை நிறுவனங்களில் இலங்கையின் முன்னணி சொத்துகள் முகாமைத்துவ நிறுவனமான National Asset Management Limited (NAMAL) மற்றும் UB ஃபினான்ஸ் கம்பனி லிமிடெட் ஆகியன அடங்கியுள்ளன. 2012 ஆம் ஆண்டு முதல் இலங்கையின் மிகவும் பெறுமதி வாய்ந்த நூறு வர்த்தக நாமங்களின் வரிசையில் யூனியன் வங்கியையும், பிரான்ட் ஃபினான்ஸ் தரப்படுத்தியுள்ளது. மேலதிக தகவல்களுக்கு, பார்வையிட: www.unionb.com.

CG Capital Partners பற்றி

CG Capital Partners Global Pte Ltd என்பது CG Corp Global.இன் துணை நிறுவனமாகும். 1935 இல் நிறுவப்பட்ட, CG Corp Global பல் வியாபார பன்முகப்படுத்தப்பட்ட வியாபாரக் குழுமமாக திகழ்வதுடன், ஆசியாவில் Global Growth Company எனவும் அறியப்படுகின்றது. ஐக்கிய அரபு இராஜ்ஜியத்தின் துபாயில் தலைமையகத்தைக் கொண்டுள்ளதுடன், 35 நாடுகளில் உறுதியான பிரசன்னத்தைக் கொண்டுள்ளது. இதன் பிரதான பிரிவுகளில் உணவு மற்றும் பானங்கள், நிதிச் சேவைகள், உட்கட்டமைப்பு, ரியல் எஸ்டேட் மற்றும் விருந்தோம்பல் ஆகியன அடங்கியுள்ளன. மேலதிக தகவல்களுக்கு விஜயம் செய்யவும்: www.cgcorpglobal.com

ஊடக தொடர்புகளுக்கு

யூனியன் வங்கி: Thishani Dissanayake, Vice President, Marketing
CG Corp: Ajani Wijesiriwardana, Head of Operations – Sri Lanka +94777370227

“கப்ருக்க ஆயோஜன” ஊடாக தென்னை பயிர்ச் செய்கையை ஊக்குவிக்க யூனியன் வங்கி கைகொடுக்கின்றது

“கப்ருக்க ஆயோஜன” ஊடாக தென்னை பயிர்ச் செய்கையை ஊக்குவிக்க யூனியன் வங்கி கைகொடுக்கின்றது

உலகின் நான்காவது மாபெரும் தெங்கு உற்பத்தி நாடாகத் திகழும் இலங்கையின் தெங்கு உற்பத்தித்துறையினூடாக, நாட்டின் பொருளாதாரத்துக்கு முக்கிய பங்களிப்பு வழங்கப்படுகின்றது.

சிறிய மற்றும் நடுத்தரளவு தொழில்முயற்சியாளர்களை (SME) கட்டியெழுப்புவது மற்றும் நிலைபேறான வியாபாரங்களை கட்டியெழுப்பும் முயற்சிகளின் அங்கமாக, கப்ருக்க ஆயோஜன கடன் திட்டம் முன்னெடுக்கப்படுகின்றது. இதனூடாக, தென்னை பயிர்ச் செய்கையாளர்களுக்கு ஆதரவளித்து கைகொடுக்கப்படுவதுடன், நிதியளிப்புடன் ஆலோசனை வழங்கல்களும் மேற்கொள்ளப்படுகின்றன. இந்தத் திட்டத்தினூடாக சிறிய நடுத்தரளவு தொழில்முயற்சியாளர்கள்/தென்னை பயிர்ச் செய்கையாளர்களுக்கு பல்வேறு அபிவிருத்திச் செயற்பாடுகளுக்காக ரூ. 3.0 மில்லியன் வரை கடன்களைப் பெற்றுக் கொள்ள முடியும்.

யூனியன் வங்கியின் நிதியளிப்பு அபிவிருத்தி மற்றும் வியாபார மீட்சி/மறுசீரமைப்பு பிரதம முகாமையாளர் ஜனக எதிரிசிங்க கருத்துத் தெரிவிக்கையில், “தென்னைச் செய்கை என்பது பல்நோக்குடைய நீண்ட கால செய்கையாகும். விவசாயிகளுக்கு முறையான விளைச்சலைப் பெறுவதற்கு ஆகக்குறைந்தது ஐந்து முதல் ஏழு வருடங்கள் வரை காத்திருக்க வேண்டும். எனவே, இந்த பயிர்ச்செய்கைக்காக கடன்களைப் பெற்றுக் கொள்வதில் விவசாயிகள் தயக்கம் காண்பிக்கின்றனர். எனவே, கப்ருக்க ஆயோஜன கடன் திட்டத்தினூடாக, விவசாயிகளுக்கு ரூ. 3.0 மில்லியன் வரை கடன்களை கவர்ச்சிகரமான நிரந்தர வருடாந்த வட்டியான 8% இல்பெற்றுக் கொள்ள முடியும்.” என்றார்.

கப்ருக்க கடன் திட்டத்தினூடாக நிதிசார் வழிகாட்டல் வழங்கப்படுவதுடன், காணியின் தன்மைக்கமைய தயாரிக்கப்பட்ட திட்டமிடலினூடாக, காணியில் காணப்படும் வளங்களைப் பயன்படுத்தி உச்ச பயனை பெற்றுக் கொள்வது, அதனூடாக நிலையான வருமானமீட்டுவது, உயர் உற்பத்தித் திறனைக் கொண்டிருப்பது போன்றனவும் வழங்கப்படுகின்றன.

தென்னந்தோப்புகளில் பல அபிவிருத்தி செயற்பாடுகளுக்காக வங்கியிடமிருந்து கடன்கள் வழங்கப்படுகின்றன. அவற்றில், புதிய பயிரிடல், மீள்பயிரிடல் மற்றும் மறுசீரமைப்பு, இடையீட்டு செய்கை, விலங்கு வேளாண்மைத் திட்டங்கள் மற்றும் இயந்திர/சாதனங்கள் கொள்வனவு போன்றன அடங்குகின்றன. கடன்களை மீளச் செலுத்துவதற்கு ஐந்து வருட கால அவகாசம் வழங்கப்படுவதுடன், இதில் 12 மாதங்கள் சலுகைக் காலமும் அடங்கியுள்ளது. மேலும், தென்னைப் பயிர்ச் செய்கையில் ஈடுபடுவோருக்கு, பகுதியளவு வட்டி மீளளிப்பை தென்னை பயிர்ச்செய்கை சபையிடமிருந்து பெற்றுக் கொள்ளும் வசதி காணப்படுவதால், அவர்களின் நிதிச் செலவுகள் மேலும் குறைவடையும்.

25 வருடங்களுக்கு மேலாக யூனியன் வங்கி நாட்டின் சிறிய நடுத்தரளவு தொழில்முயற்சியாண்மை வியாபாரங்களின் வளர்ச்சிக்கு ஆதரவளிப்பதுடன், நிதியளிப்பு மற்றும் சிறு தோட்ட தேயிலை செய்கையாளர்களுக்கான கடன் வசதி (TSHCL) மற்றும் பெண் தொழில்முயற்சியாளர்களுக்கான விசேட கடன் திட்டங்கள் அடங்கலாக விசேட மானியத் திட்டங்களையும் வழங்குகின்றது.

யூனியன் வங்கி, பெண் தொழில் முயற்சியாளர்களுக்கான தனது ஆதரவை விஸ்தரித்துள்ளது

யூனியன் வங்கி, பெண் தொழில் முயற்சியாளர்களுக்கான தனது ஆதரவை விஸ்தரித்துள்ளது

நாட்டின் பொருளாதாரத்தின் முதுகெலும்பாக சிறிய மற்றும் நடுத்தரளவு தொழில்முயற்சியாண்மைத் துறை (SME) கருதப்படுவதுடன், இது பன்முகப்படுத்தப்பட்ட துறையாகவும் அமைந்துள்ளது. நாட்டின் சமூகப் பொருளாதார அபிவிருத்திக்கு பெருமளவான ஆதரவை இந்தத் துறை வழங்குகின்றது. நாட்டின் மொத்தத் தேசிய உற்பத்திக்கு இந்தத் துறை பெருமளவில் பங்களிப்பு வழங்குவதுடன், பிரதான தொழில் வாய்ப்பு வழங்குநராக இயங்குகின்றது.

25 வருடங்களுக்கு மேலாக, நாட்டின் சிறிய நடுத்தரளவு தொழில்முயற்சியாண்மைத் துறைக்கு ஆதரவளித்து மேம்படுத்துவதற்கான சேவைகளை யூனியன் வங்கி வழங்கியுள்ளது. சிறிய நடுத்தரளவு தொழில்முயற்சியாண்மை வியாபாரங்களின் அபிவிருத்தி மற்றும் வளர்ச்சிக்கு ஆதரவளிப்பதற்கு மேலதிகமாக, பெண் தொழில்முயற்சியாளர்களுக்கு ஆதரவளிப்பதிலும் வங்கி பெருமை கொள்கின்றது. பெண் தலைமைத்துவ வியாபாரங்கள் மற்றும் பெண் தொழில்முயற்சியாளர்களை கட்டியெழுப்புவதில் தனது சேவைகளை தொடர்ச்சியாக வழங்குவதில் முக்கிய பங்காற்றுகின்றது. இந்தத் துறைக்கான நிதித் தீர்வுகளை வழங்குவதற்கு மேலதிகமாக, சிறிய நடுத்தரளவு தொழில்முயற்சியாண்மை கடன் வசதியினூடாக, பெண் தொழில் முயற்சியாளர்களுக்கு மானியங்களைப் பெற்றுக் கொடுப்பதில் கவனம் செலுத்துகின்றது. இந்த கடன் வசதியினூடாக, பெண் தொழில் முயற்சியாளர்களுக்கு 10% மேலதிக கடன் பெறுமதிக் கொடுப்பனவுகள் வழங்கப்படுவதுடன், தெரிவு செய்யப்பட்ட துறைகளைச் சேர்ந்தவர்களுக்கு 25% மேலதிக கடன் பெறுமதிகள் வழங்கப்படுகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

யூனியன் வங்கியின் அபிவிருத்தி நிதியளிப்பு மற்றும் வியாபார மீட்சி/மறுசீரமைப்பு பிரதம முகாமையாளர் ஜனக எதிரிசிங்க கருத்துத் தெரிவிக்கையில், “பெண் தொழில்முயற்சியாண்மைகளுக்கு ஆதரவளித்து வலுவூட்டுகின்றமை தொடர்பில் யூனியன் வங்கி பெருமை கொள்கின்றது. நிதியளிப்பு, ஆலோசனை சேவைகள் மற்றும் திறன் விருத்தி போன்றன அடங்கலாக பல்வேறு ஆதரவுகளை வங்கி வழங்கியுள்ளது. சிறிய நடுத்தரளவு தொழில்முயற்சியாளர்களுக்காக முன்னெடுக்கப்பட்ட பயிற்சிப்பட்டறைகளில் பங்கேற்றிருந்தவர்களில் 60%க்கு அதிகமானவர்கள் பெண் தொழில்முயற்சியாளர்களாக இருந்ததையிட்டு நாம் மகிழ்ச்சியடைகின்றோம். மானியங்களுக்கு மேலதிகமாக, பெண் தொழில்முயற்சியாளர்களுக்கு தமது அறிவை மேம்படுத்தவும் திறன்களை விருத்தி செய்து கொள்வதற்கும் மற்றும் வியாபார நிலைபேறாண்மை தொடர்பில் அறிந்து கொள்வதற்கும் வங்கியினால் வசதிகள் ஏற்படுத்திக் கொடுக்கப்படுகின்றன. நிதிவசதிகளைப் பெற்றுக் கொள்வதில் நிலவும் சிக்கல் நிலைகள் காரணமாக இந்தத் துறை பல்வேறு சவால்களுக்கு முகங்கொடுத்த வண்ணமுள்ளது. பெண் தொழில்முயற்சியாளர்களுக்கு தொடர்ச்சியாக பெருமளவு நிதிவசதிகளை ஏற்படுத்திக் கொடுத்துள்ளதுடன், அவர்களை ஊக்குவிப்பதற்கு ஆதரவளிப்பது தொடர்பில் இதர செயற்பாடுகளை முன்னெடுக்கவும் திட்டமிட்டுள்ளது. கடந்த வருடத்தில் ரூ. 350 இலட்சத்துக்கும் அதிகமான தொகையை பெண் தொழில்முயற்சியாளர்கள்/பெண் தலைமைத்துவத்தில் இயங்கும் வியாபாரங்களுக்காக வழங்கியுள்ளதுடன், அதனூடாக பெண் தொழில்முயற்சியாண்மையை ஊக்குவிப்பது மற்றும் பெண் தலைமைத்துவத்திலமைந்த சிறிய நடுத்தரளவு தொழில்முயற்சியாண்மையை கட்டியெழுப்பவும் ஊக்குவித்துள்ளது.” என்றார்.

படம்: யூனியன் வங்கியின் அபிவிருத்தி நிதியளிப்பு மற்றும் வியாபார மீட்சி/மறுசீரமைப்பு பிரதம முகாமையாளர் ஜனக எதிரிசிங்க.

சிறிய நடுத்தரளவு தொழில்முயற்சியாண்மைகளுக்கான ஆதரவை யூனியன் வங்கி விஸ்தரித்துள்ளது

சிறிய நடுத்தரளவு தொழில்முயற்சியாண்மைகளுக்கான ஆதரவை யூனியன் வங்கி விஸ்தரித்துள்ளது

உள்ளடக்கமான பொருளாதார வளர்ச்சி, பிராந்திய அபிவிருத்தி, தொழில் உருவாக்கம் மற்றும் வறுமை தணிப்பு போன்றவற்றுடன், இலங்கையின் பொருளாதாரத்தின் முதுகெலும்பாக சிறிய நடுத்தரளவு தொழில்முயற்சியாண்மைத் துறை அமைந்துள்ளது. துறையின் வளர்ச்சிக்கும், தேசிய நிகழ்ச்சிநிரலுக்கும் 25 வருடங்களுக்கு மேலாக ஆதரவளிக்கும் யூனியன் வங்கி, சிறிய நடுத்தரளவு தொழில்முயற்சியாண்மைத் துறையின் மேம்படுத்தலுக்காக பரந்தளவு நிதித் தீர்வுகளையும், ஆலோசனை சேவைகளையும் வழங்குகின்றது. உற்பத்தி, வலு மற்றும் மின், போக்குவரத்து முதல் நிபுணத்துவ சேவைகள் வரை பரந்தளவு துறைகளின் அதிகரித்துச் செல்லும் தேவைகளை நிவர்த்தி செய்து கொள்வதற்கு யூனியன் வங்கியின் நிதித்தீர்வுகள் வழங்கப்படுகின்றன. மேலும், விவசாயம், விவசாய-பதப்படுத்தல், உற்பத்தி, கடற்றொழில், சுற்றுலா, விலங்கு வேளாண்மை மற்றும் ஏற்றுமதி வியாபாரங்களுக்கு சிறிய நடுத்தரளவு தொழில்முயற்சியாண்மைத் துறை கடன் வசதியினூடாகவும் ஆதரவளிக்க யூனியன் வங்கி தன்னை அர்ப்பணித்துள்ளது.

யூனியன் வங்கியின் சிறிய நடுத்தரளவு தொழில் முயற்சியாளர்களுக்கான கடன் வசதி என்பது, வியாபாரங்களின் நீண்ட கால நிலைபேறாண்மைக்கு ஆதரவளிக்கும் வகையில் அமைந்துள்ளது. தொழிற்படு மூலதனத்துடன் நீண்ட கால முதலீட்டுக் கடன்கள் மற்றும் இணைந்த முதலீட்டுக் கடன்கள் ஆகிய நிதி வசதித் தெரிவுகள் வழங்கப்படுகின்றன. சிறிய நடுத்தரளவு தொழில் முயற்சியாளர்களின் பல்வேறு முதலீட்டுத் திட்டங்களுக்கு ரூ 50 மில்லியன் வரை மூலதன முதலீடுகளுக்கு இந்தத் திட்டத்தினூடாக ஆதரவளிக்கப்படுகின்றது. புதிய இயந்திரங்கள், சாதனங்கள் கொள்வனவு மற்றும் பொருத்தல்கள், தளபாடங்கள் மற்றும் பொருத்துகைகள் கொள்வனவு, கட்டடங்களின் மறுசீரமைப்புகள்/புதுப்பித்தல்கள் மற்றும் தொழிற்படு மூலதன நிதியளிப்புகளுக்கு இவை வழங்கப்படுகின்றன. 300க்கு குறைவான ஊழியர்களைக் கொண்ட, வருடாந்தம் 750 மில்லியன் ரூபாய்க்கு குறைந்த புரள்வைக் கொண்டுள்ள சிறிய நடுத்தரளவு வியாபாரங்களுக்கு இந்த நிதிவசதிக்காக விண்ணப்பிக்க முடியும்.

பெண் தொழில்முயற்சியாண்மையின் முக்கியத்துவத்தை உணர்ந்து, யூனியன் வங்கியின் கடன் வசதியினூடாக, பெண் தொழில்முயற்சியாளர்களுக்கு 10% மானியம் வழங்கப்படுகின்றது. வளர்ந்துவரும் இந்தத் துறையை நிலைபேறான வியாபாரங்களாக கட்டியெழுப்பிக் கொள்வதற்கு உதவுவதாக இந்தத் திட்டம் அமைந்துள்ளது. பெண் தலைமைத்துவத்தில் இயங்கும் சிறிய நடுத்தரளவு தொழில்முயற்சியாண்மைகளுக்கு குறிப்பிடத்தக்களவு நிதி வசதியை யூனியன் வங்கி ஏற்கனவே பகிர்ந்தளித்துள்ளது. உயர் மட்ட நிபுணர்கள் மற்றும் பல்வேறு துறைகளைச் சேர்ந்த தலைவர்களின் பங்கேற்புடன் பல்வேறு ஆலோசனை வழங்கல் நடவடிக்கைகளை வங்கி முன்னெடுக்கின்றது. இந்த பயிற்சியைப் பூர்த்தி செய்தவர்களுக்கு, ஆரம்ப கடன் தொகையில் மேலும் 10% மானியத்தை அனுபவிக்கும் தகைமை வழங்கப்படும். ஊவா, சப்ரகமுவ மற்றும் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களைச் சேர்ந்த பெண் தொழில் முயற்சியாளர்களுக்கு இந்த கடன் தொகை மீதான மேலதிக 5% மானியத்தை பெற்றுக் கொள்வதற்கான தகைமை வழங்கப்படுகின்றது. பயிற்சியைப் பெற்றிருந்தால், அவர்களுக்கு கடன் தொகையில் 25% வரை மானியமாகப் பெற்றுக் கொள்ள முடியும்.

சிறிய நடுத்தரளவு தொழில்முயற்சியாண்மை மற்றும் கொடுக்கல் வாங்கல் வங்கியியல் சிரேஷ்ட உப தலைவர், அசங்க ரன்ஹொட்டி கருத்துத் தெரிவிக்கையில், “இலங்கையில் நிலைபேறான வியாபாரங்களை கட்டியெழுப்பும் பயணத்தை மேற்கொண்டு, நீண்ட காலமாக இயங்கும் தொழில்முயற்சியாளர்களுக்கு உதவும் வகையில் யூனியன் வங்கியின் கடன் வசதி அமைந்துள்ளது. பெண் தொழில் முயற்சியாளர்கள் மீது வங்கி காண்பிக்கும் கவனத்தினூடாக, பெண்களுக்கு தமது தொழில்முயற்சியாண்மை கனவை தொடர்வதற்கு நிதி வசதியுடன் வாய்ப்பு வழங்கப்படுவதுடன், தமது வியாபார வளர்ச்சிக்கு அவசியமான அறிவு மற்றும் திறனை மேம்படுத்திக் கொள்வதற்கு அவசியமான மேலதிக அனுகூலங்களைப் பெற்றுக் கொள்ளவும் உதவியாக அமைந்துள்ளது.” என்றார்.

படம்: சிறிய நடுத்தரளவு தொழில்முயற்சியாண்மை மற்றும் கொடுக்கல் வாங்கல் வங்கியியல் சிரேஷ்ட உப தலைவர், அசங்க ரன்ஹொட்டி

பாரிய பொருளாதார சவால்களுக்கு மத்தியில் 2022 முதல் காலாண்டில் யூனியன் வங்கி மீண்டெழும் பெறுபேறுகளைப் பதிவு செய்துள்ளது

பாரிய பொருளாதார சவால்களுக்கு மத்தியில் 2022 முதல் காலாண்டில் யூனியன் வங்கி மீண்டெழும் பெறுபேறுகளைப் பதிவு செய்துள்ளது

கொவிட்-19 தொற்றுப் பரவலின் 3ஆம் அலைத் தாக்கத்தினால் ஏற்பட்டிருந்த பின்னடைவுகளிலிருந்து பொருளாதார செயற்பாடுகள் படிப்படியாக மீட்சியை பதிவு செய்திருந்ததைத் தொடர்ந்து 2022ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் யூனியன் வங்கியின் நிதிப் பெறுபேறுகள் மீட்சியை பதிவு செய்திருந்தமையை அவதானிக்க முடிந்தது. எவ்வாறாயினும் இக்காலப் பகுதியில் நிலவிய அரசியல் உறுதியற்ற தன்மை காரணமாக, வழமையான செயற்பாடுகள் பெருமளவில் பாதித்திருந்தது. எரிபொருள் மற்றும் எரிவாயு தட்டுப்பாடு, அதிகரித்துச் சென்றிருந்த பண வீக்கம், அந்நியச் செலாவணி இருப்பு சரிவு, ரூபாயின் மதிப்பிறக்கம் மற்றும் இறக்குமதிக் கட்டுப்பாடு போன்றன காரணமாக பொது மக்களும் வியாபாரங்களும் பெருமளவு சவால்களுக்கு முகங்கொடுக்க நேரிட்டிருந்தது. 2021 டிசம்பர் மாதத்துடன் கொவிட்-19 உடன் தொடர்புடைய வாடிக்கையாளர் நிவாரணங்கள் நிறைவடைந்திருந்தமையால், வங்கியியல் துறை தொடர்ச்சியாக சொத்துக்கள் தரம் தொடர்பான அழுத்தங்களுக்கு முகங் கொடுத்திருந்தது. முதல் காலாண்டு பகுதியில் பல நாணய மற்றும் இதர கொள்கை சார் செயற்பாடுகள் நடைமுறைப்படுத்தப்பட்டிருந்ததுடன், அதனூடாக பெரும் தேவைப்பாடாக அமைந்திருந்த பொருளாதார மீட்சி மற்றும் உறுதிப்பாட்டை எய்துவதற்கு பங்களிப்பு வழங்கப்பட்டிருந்தது.

இதன் பின்புலத்தில், யூனியன் வங்கியின் பிரதான நோக்கம் மீட்சியுடன் திகழ்வது மற்றும் உறுதியான மூலதன நிலையினூடாக, கடுமையான இடர் முகாமைத்துவ வழிமுறையை பின்பற்றி, செலவுக் கட்டுப்பாடுகளுடன், தனது செயற்பாடுகள் மற்றும் வாடிக்கையாளர்கள் மீது வெளியக தாக்கங்கள் ஏற்படுவதை குறைத்துக் கொள்ளும் பணிகள் முன்னெடுக்கப்பட்டிருந்தன.

பிரதான வங்கியியல் வினைத்திறன் மற்றும் இலாபகரத்தன்மை

கடினமான தொழிற்பாட்டு சூழலினால் காணப்பட்ட சவால்களுக்கு மத்தியில் வங்கி மேம்படுத்தப்பட்ட பிரதான வங்கியியல் பெறுபேறுகளை பதிவு செய்து, ஒட்டு மொத்த வருமானமாக ரூ. 3,148 மில்லியனை இந்தக் காலாண்டில் பதிவு செய்திருந்தது. ஒப்பீட்டு காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில் இது 10% அதிகரிப்பாகும். சொத்துக்கள் இலாகாவனி மீள் விலையிடல் மற்றும் வட்டி செலவீனங்களை அவதானமாக நிர்வகித்திருந்தமை போன்றவற்றினால் தேறிய வட்டி எல்லைப் பெறுமதி (NIM) 33 bps இனால் அதிகரித்திருந்தது. இதனூடாக, தேறிய வட்டி வருமானம் (NII) 11% இனால் அதிகரித்துக் காணப்பட்டது. கடன் மற்றும் பற்று அட்டைகளினூடாக அதிகளவு பங்களிப்பு வழங்கப்பட்டிருந்தமை மற்றும் வியாபார வணிகத்தில் அதிகளவு செயற்பாடுகள் காரணமாக கட்டணம் மற்றும் தரகு வருமானம் 17% இனால் அதிகரித்திருந்தது. போதியளவு திரள்வு தன்மை இன்மை மற்றும் அரச முறிகள் சந்தையில் நிலவிய தளம்பல் நிலை காரணமாக இதர தொழிற்பாட்டு வருமானம் 4% இனால் வீழ்ச்சியடைந்திருந்தது.

வங்கியின் தொழிற்பாட்டு செலவீனங்கள் ரூ. 983 மில்லியனாக அதிகரித்திருந்தது. ஒப்பீட்டு காலப்பகுதியுடன் கருதுகையில் இது 8% அதிகரிப்பாகும். ரூபாயின் மதிப்பிறக்கம் மற்றும் இதர செலவீனங்களில் ஏற்பட்ட அதிகரிப்பு போன்றன பிரதானமாக இதில் தாக்கம் செலுத்தியிருந்தன.

பாரியபொருளாதார சூழலினால் எழுந்திருந்த அழுத்த நிலையை கவனத்தில் கொள்ளும் போது, வங்கியினால் மதிப்பிறக்கங்களுக்கு குறிப்பிட்ட தொகை ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது. மீளாய்வுக்குட்படுத்தப்பட்ட காலப்பகுதிக்கான மதிப்பிறக்க கட்டணம் ரூ. 288 மில்லியனாக காணப்பட்டது, 2021ஆம் ஆண்டின் முதல் காலாண்டுடன் ஒப்பிடுகையில் இது 47% அதிகரிப்பாகும்.

அதுபோன்று மீளாய்வுக்குட்படுத்தப்பட்ட காலப்பகுதியில் துணை நிறுவனங்களின் பங்குப் பெறுமதிகளின் பங்களிப்புடன், வங்கியின் வரிக்கு முந்திய இலாபம் (PBT) ரூ. 316 மில்லியனாக காணப்பட்டது. வலுவிழந்த தொழிற்பாட்டு சூழல் மற்றும் நிதிச் சேவைகளின் மீதான பெறுமதி சேர் வரி (VAT) 15% இலிருந்து 18% ஆக அதிகரிகரிக்கப்பட்டமை இதில் தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தன. 2021 முதல் காலாண்டுடன் ஒப்பிடுகையில், வங்கியின் வரிக்குப் பிந்திய இலாபம் (PAT) பின்னடைவை எதிர்நோக்கியிருந்ததுடன், முன்னைய ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட அளவுக்கதிகமான ஒதுக்கீட்டை ஒரு தடவை அடிப்படையிலான மீளத்திரும்பியிருந்தமை காரணமாக மோசமான தாக்கம் பதிவாகியிருந்தது.

வங்கியின் மொத்த சொத்துக்களின் பெறுமதி 2022 மார்ச் 31 ஆம் திகதியன்று 10% இனால் அதிகரித்து ரூ. 129,878 மில்லியனாக பதிவாகியிருந்தது. கடன்கள் மற்றும் முற்பணங்கள் ஆகியன 11%இனால் அதிகரித்து ரூ. 75,479 மில்லியனாக பதிவாகியிருந்தது. சகல பிரிவுகளிலும் CASA மீதிப் பிரிவுகளின் மீது அதிகளவு கவனம் செலுத்தியிருந்தமையினால், வாடிக்கையாளர்கள் வைப்புகள் 9%இனால் அதிகரித்து ரூ. 91,226 மில்லியனாக பதிவாகியிருந்தது. 2022 மார்ச் 31 ஆம் திகதியன்று CASA விகிதம் 30.4% எனும் ஆரோக்கியமான நிலையில் காணப்பட்டது. உறுதியான மீட்சி ஆற்றல்கள் மற்றும் மாற்றியமைத்துக் கொள்ளத் தக்க மீளச் செலுத்தல் திட்டங்களினூடாக, வங்கியின் 3ஆம் கட்ட கடன் விகிதம் 4.8% எனும் மட்டத்தில் கட்டுப்படுத்தப்பட்டிருந்தது.

வங்கி ஆரோக்கியமான நிதி மூலதன போதுமை விகித நிலையை பேணியிருந்ததுடன், இது ஒழுங்குபடுத்தல் தேவைப்பாட்டை விட உயர்ந்த நிலையில் காணப்பட்டது. வங்கியின் மொத்த மூலதன போதுமை விகிதம் 2022 மார்ச் 31 ஆம் திகதியன்று 14.45% ஆக காணப்பட்டது.

UB ஃபினான்ஸ் கம்பனி லிமிடெட் மற்றும் நஷனல் அசெட் மனேஜ்மன்ட் லிமிடெட் ஆகியவற்றைக் கொண்ட யூனியன் வங்கிக் குழுமம் மீளாய்வுக்குட்படுத்தப்பட்ட காலப்பகுதியில் வரிக்கு முந்தைய இலாபமாக ரூ. 398 மில்லியனைப் பதிவு செய்திருந்தது. இது ஒப்பீட்டளவில் 5% சரிவாகும். குழுமத்தின் மொத்த சொத்துக்கள் பெறுமதி 10% இனால் அதிகரித்து ரூ. 136,132 மில்லியனாக பதிவாகியிருந்தது. இதில் வங்கியின் பங்கு 95% ஐ விட உயர்வாக காணப்பட்டது.

தொழிற்பாட்டு பெறுபேறுகள்

தனியார் துறைக்கான கடன் வளர்ச்சி மற்றும் உரிய காலப்பகுதியில் நிலவிய வாய்ப்புகளை கையகப்படுத்தும் வகையிலமைந்த உறவு பேணல் செயற்பாடுகள் போன்றவற்றினூடாக, கூட்டாண்மை வங்கியியல் பிரிவினால் குறிப்பிடத்தக்களவு பெறுபேறுகள் வளர்ச்சி பதிவு செய்யப்பட்டிருந்தது. கடன்கள் மற்றும் முற்பணங்கள் பிரிவில் 27% வளர்ச்சியையும், வைப்புகள் பிரிவில் 29% வளர்ச்சியையும், தரகு மற்றும் கட்டண வருமானத்தில் 13% அதிகரிப்பையும் பதிவு செய்திருந்தது. நாணய மதிப்பிறக்கம் காரணமாக அந்நிய நாணய புத்தகப் பெறுமதி மீள் மதிப்பீடு செய்யப்பட்டிருந்தமை காரணமாக, கடன் மற்றும் வைப்பு இருப்புகள் அதிகரிப்பை பதிவு செய்திருந்தன.

அந்நிய நாணய வைப்புகளை அதிகரிக்கச் செய்வது மற்றும் நுகர்வோர் வங்கியியல் பிரிவில் எல்லைப் பெறுமதிகளை தந்திரோபாய ரீதியில் பேணியிருந்தமை காரணமாக வைப்புகளில் 6% வளர்ச்சியும் CASA விகிதத்தில் 28% வளர்ச்சியும் பதிவாகியிருந்தன. மீளாய்வுக்குட்படுத்தப்பட்ட காலப்பகுதியில் கடன் அட்டை பிரிவு தொடர்ந்தும் உறுதியான வளர்ச்சியை பதிவு செய்திருந்தன.

பெண் தொழில் முயற்சியாளர்கள் மற்றும் சிறு தேயிலை செய்கையாளர்களுக்கு பிரதானமான வகையில் கடன் உதவி வழங்குவதற்கு ஆசிய அபிவிருத்தி வங்கியின் ஆதரவைப் பெற்றிருந்தமையினூடாக சிறிய நடுத்தரளவு தொழில்முயற்சியாண்மை வங்கியியல் பிரிவு உறுதியான நிலையில் காணப்பட்டது. மீளாய்வுக்குட்படுத்தப்பட்ட காலப்பகுதியில் சிறிய நடுத்தரளவு தொழில்முயற்சியாண்மை வங்கியியல் பிரிவு வைப்புகள் மற்றும் CASA இல் அதிகரிப்பை பதிவு செய்திருந்தது. வங்கியின் விருதை வென்ற பண முகாமைத்துவ தீர்வான Union Bank Biz-Direct இனூடாக CASA பிரதானமாக வழிநடத்தப்பட்டிருந்ததுடன், கூட்டாண்மை மற்றும் சிறிய நடுத்தரளவு தொழில்முயற்சியாண்மை துறைகளில் புதிய வாடிக்கையாளர்களை எய்துவதிலும் பங்களிப்பு செலுத்தியிருந்தது.

2022ஆம் ஆண்டுக்கான பிரான்ட் ஃபினான்ஸினால் மிக அண்மையில் வெளியிடப்பட்ட தரப்படுத்தல்களில் இலங்கையின் சிறந்த 100 வர்த்தக நாமங்களில் ஒன்று எனும் தனது நிலையை யூனியன் வங்கி வர்த்தக நாமம் தொடர்ந்தும் பேணியிருந்தது. 2021 ஆம் ஆண்டுக்கான வங்கியின் வருடாந்த பொது ஒன்று கூடல், 2021 மார்ச் 31ஆம் திகதி முன்னெடுக்கப்பட்டிருந்ததுடன், “Persist, Persevere” எனும் தொனிப்பொருளின் கீழ் 2021 ஆம் ஆண்டுக்கான வங்கியின் வருடாந்த நிதி அறிக்கை வெளியிடப்பட்டிருந்தது.

சவால்களுக்கு மத்தியிலும் 2021 நிதியாண்டில் யூனியன் வங்கி உறுதியான வளர்ச்சியயப் பதிவிட்டுள்ளது

சவால்களுக்கு மத்தியிலும் 2021 நிதியாண்டில் யூனியன் வங்கி உறுதியான வளர்ச்சியயப் பதிவிட்டுள்ளது

வியாபார தந்திரராபாயத்தத பின்பற்றி செயலாற்றுவது மற்றும் 2021 ஆம் ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் பதிவு செய்திருந்த பிரதான வங்கியியல் விதனத்திறனான செயற்பாடுகளின் அடிப்பதையில், யூனியன் வங்கி உறுதியான வளர்ச்சிதய பதிவு செய்திருந்தது. வியாபார செயற்பாடுகளினுள் இைர்கதளகவனமானமுதறயில் நிர்வகித்திருந்ததுைன், சதாற்றுப் பரவல் காரணமாக பாதிக்கப்பட்டிருந்த வாடிக்தகயாளர்களுக்கு, இலங்தக மத்திய வங்கியின் வழிகாட்ைல்களின் பிரகாரம், கைன் மீளச் செலுத்தும் ெலுதகக் காலத்தில் நீடிப்தப வழங்கி வங்கி சதாைர்ச்சியாக ஆதரவளித்திருந்தது. ஆண்டு முழுவதிலும் வங்கி உறுதியான திரள்வு மற்றும் மூலதன நிதலதய ரபணியிருந்ததுைன், 2021 ஆம் ஆண்டில் சவளியிைப்பட்ை ஃபிட்ச் தரப்படுத்தலில், யூனியன் வங்கி தரப்படுத்ததல BBB(-) உறுதியான புறத்ரதாற்றத்தத உறுதி செய்திருந்தது. உயர் திரள்வுத் தன்தம, குறிப்பிைத்தக்களவு உயர்ந்த மூலதனவாக்கம் மற்றும் ரமம்படுத்தப்பட்ை சதாழிற்படு சூழலில் வளர்ச்சிக்கான வாய்ப்பு ரபான்ற பிரதான காரணிகள் இததன வழிநைத்தியிருந்தன.
வங்கியின் ரதறிய வட்டி வருமானம் (NII) 2021 ஆம் ஆண்டில் ரூ. 387 மில்லியனினால் அதிகரித்து ரூ. 4,257 மில்லியனாகபதிவாகியிருந்தது. முன்தனய ஆண்டுைன் ஒப்பிடுதகயில்10% வளர்ச்சியாகும். வங்கியின் வட்டி வருமானத்தில் ஆண்டில் நிலவியிருந்த குதறந்த AWPLR சபறுமதி தாக்கம் செலுத்தியிருந்ததுைன், பாதிக்கப்பட்ை கைன் சபறுநர்களுக்காக இலங்தக மத்திய வங்கியின் புதிய கைன் நிவாரணத் திட்ைங்களின் நீடிப்பும் தாக்கம் செலுத்தியிருந்தது. எவ்வாறாயினும், முன்தனய ஆண்டுைன் ஒப்பிடுதகயில் கைப்பாட்டு வட்டிச் செலவீனத்தில் ஏற்பட்ை 33.1% எனும் ரவகமான வீழ்ச்சி காரணமாக NII பயன்சபற்றிருந்தது. ரதறிய வட்டி எல்தலப் சபறுமதி (NIM) 2020 ஆம் ஆண்டில் பதிவாகியிருந்த 3.2% என்பதிலிருந்து 2021 ஆம் ஆண்டில் 3.5% ஆக உயர்வதைந்திருந்தது. அலகு முதலீட்டின் மீதான வருமதி, வட்டி வருமானத்தின் அங்கமாக கருதப்பட்டிருந்தால், தற்ரபாததய காலப்பகுதிக்கான NIM சபறுமதி 3.7% ஆக பதிவாகியிருக்கலாம். அலகு முதலீட்டின் மீதான வருமதி ரூ. 261 மில்லியனாக பதிவாகியிருந்ததுைன், இலாபம் மற்றும் நஷ்ைம் ரபான்றவற்றினூைான ரநர்த்தியான சபறுமதி அடிப்பதையிலான நிதிச் ொதனங்களிலிருந்தான ரதறிய ரநர்ப் சபறுமதி வருமதிகள்/இழப்புகள் என்பதற்கதமய பதிவாகியிருந்தது.
வங்கியின் கைன்கள்மற்றும்முற்பணங்கள்என்பது வருைநிதறவில் ரூ. 67,835 மில்லியனாகபதிவாகியிருந்தது. முன்தனய ஆண்டுைன் ஒப்பிடுதகயில் எல்தலயளவில் உயர்வானதாகும். இலாகா வளர்ச்சி என்பது பிரதானமாக கூட்ைாண்தம, சிறிய நடுத்தரளவு சதாழில் முயற்சியாண்தம மற்றும் கைன் அட்தைகள் ரபான்றவற்றினூைாக வளர்ச்சிதய பதிவு செய்திருந்தது. ஆழமான கைன் வளர்ச்சி மற்றும் இலாகா சபறுமதிகள் ரபான்றன வருைம் முழுவதிலும் சில்லதற, சிறிய நடுத்தரளவு சதாழில் முயற்சியாண்தமகள் மற்றும் கூட்ைாண்தம வங்கியியல் பிரிவுகளில் பதிவாகியிருந்தன. கைன் அட்தை வியாபார வளர்ச்சியில் பல்ரவறு தகயகப்படுத்தல் தந்திரராபாயங்கள் மற்றும் கவர்ச்சிகரமான ெலுதககள் ரபான்றன பங்களிப்பு வழங்கியிருந்தன. இவற்றில் 0% தவதணமுதற மீளச் செலுத்தும் திட்ைங்கள், மீதி மாற்றிக் சகாள்ளும் சதரிவுகள் மற்றும் புதிய வாடிக்தகயாளர்கதள எய்தும் ரநாக்குைன் அறிமுகம் செய்யப்பட்ை 100 க்கும் அதிகமான விற்பதன பங்காளர் பிரிவுகளில் விரெை பருவகால விதலக்கழிவுத் திட்ைங்கள் மற்றும் ஏற்கனரவ

காணப்படும் வாடிக்தகயாளர்களின் நம்பிக்தகதய ரமலும் தக்க தவத்துக் சகாள்வதாகவும் அதமந்திருந்தது. சிறிய நடுத்தரளவு சதாழில்முயற்சியாண்தம கைன் பிரிவும் ஆண்டில் உறுதியான வளர்ச்சிதய பதிவு செய்திருந்தது. சிறிய நடுத்தரளவு சதாழில் முயற்சியாண்தமகளின் மீட்சிக்கு தகசகாடுப்பது எனும் ரதசிய நிகழ்ச்சி நிரலுக்கதமய, சதரிவு செய்யப்பட்ை சதாழிற்துதறகள் மற்றும் வியாபாரங்களில் கவனம் செலுத்தியிருந்ததமயினூைாக இந்த வளர்ச்சிதயப் பதிவு செய்யக்கூடியதாக இருந்தது.
வருை நிதறவில் தவப்பு இருப்பு ரூ. 83,416 மில்லியனாக பதிவாகியிருந்தது. குதறந்த வட்டி வீதச் சூழலிலும், வங்கி ஆரராக்கியமான நதைமுதறக் கணக்குகள் மற்றும் ரெமிப்புக் கணக்குகள் (CASA) வீதத்தத 30%ஆக ரபணியிருந்தது. வங்கி கடுதமயான தவப்பு பரம்பல் தந்திரராபாயத்தத ரபணியிருந்ததுைன், இததன குதறந்த கட்ைணங்களிலதமந்த கைன் வளர்ச்சியில் அவதானிக்க முடிந்தது. வருைம் முழுவதிலும் உறுதியான திரள்வு நிதலதய வங்கி ரபணியிருந்தது.
இலங்தக மத்திய வங்கியின் வழிகாட்டுதல்களுக்கதமய கட்ைண விலக்கழிப்புகதள வழங்கியிருந்த ரபாதிலும், 2021ஆம் ஆண்டில் வங்கியின் கட்ைண மற்றும் தரகு வருமானம் என்பது முன்தனய ஆண்டுைன் ஒப்பிடுதகயில் 21% இனால் வளர்ச்சியதைந்து ரூ. 1,054 மில்லியனாக பதிவாகியிருந்தது. கைன் மற்றும் பற்று அட்தைகளினூைாகவும், வர்த்தக மற்றும் சவளிநாட்டு பண அனுப்புதககளினூைாக சபறப்பட்ை கட்ைண வருமானங்கள் இதில் பங்களிப்புச் செய்திருந்தன.
ரதறிய வர்த்தக மற்றும் இதர வருமானங்கள் 2021 ஆம் ஆண்டில் 41% இனால் வீழ்ச்சியதைந்து ரூ. 778 மில்லியனாக பதிவாகியிருந்தது. இதில் 2020 ஆம் ஆண்டில் திதறரெரிப் பிரிவின் சிறந்த செயற்பாடுகள் பங்களிப்புச் செய்திருந்தது. வியாபார வாய்ப்புகளில் ஏற்பட்ை வீழ்ச்சி, அந்நியச் செலாவணியில் ஏற்பட்ை வீழ்ச்சி மற்றும் நாணயப் பரிமாற்று வீதத்தில் ஏற்பட்ை தளம்பல்கள் ரபான்றவற்றினால் திதறரெரி செயற்பாடுகளும் 2021 ஆம் ஆண்டில் பாதிக்கப்பட்டிருந்தன. 2021 ஆம் ஆண்டில் முதலீடுகளிலிருந்தான வருமானம் என்பது ரூ. 321 மில்லியனிலிருந்து ரூ. 261 மில்லியனாக குதறந்திருந்தது. அததனப் ரபான்று, 2020 ஆம் ஆண்டில் ரூ. 1,153 மில்லியனாக பதிவாகியிருந்த நம்பிக்தக அலகுகளிலிருந்த வருமதிகள் அைங்கலாக சமாத்த மூலதன வருமதிகள் 2021ஆம் ஆண்டில் ரூ. 421 மில்லியனாக பதிவாகியிருந்தது. எவ்வாறாயினும், வங்கியின் இதர சதாழிற்படு வருமானம் அந்நியச் செலாவணி வருமதிகளில் அதிகரிப்பு பதிவாகியிருந்தததத் சதாைர்ந்து, முன்தனய ஆண்டுைன் ஒப்பிடுதகயில் 94.7% இனால் அதிகரித்து ரூ. 339 மில்லியனாக உயர்வதைந்திருந்தது.
வங்கியின் சமாத்த சதாழிற்பாட்டு வருமானம் என்பது 2021 ஆம் ஆண்டில் ரூ. 5,895 மில்லியனாக பதிவாகியிருந்தது. முன்தனய ஆண்டுைன் ஒப்பிடுதகயில் சமாத்த சதாழிற்பாட்டு செலவீனம் 2.4% இனால் குதறந்து ரூ. 3,680 மில்லியனாக பதிவாகியிருந்தது. முன்தனய ஆண்டுகளில் வங்கியினால் பிற்பற்றப்பட்டிருந்த பரந்தளவு செலவு நிர்வகிப்பு நைவடிக்தககளின் பயனாக இந்தப் சபறுரபதற எய்த முடிந்திருந்தது.
வங்கியின் நிகர NPL விகிதம் 2021 டிெம்பர் மாதத்தில் 5.65%ஆக உயர்ந்திருந்தது. 2020 டிெம்பர் மாதத்தில் இந்தப் சபறுமதி 6.05% ஆக காணப்பட்ைது. இதில் வீழ்ச்சியதைந்து செல்லும் பாரிய சபாருளாதார சூழ்நிதலகளுக்கு மத்தியிலும் இந்த பிரிவின் தரத்தத ரபணுவதில் சதாைர்ந்தும் கவனம் செலுத்தியிருந்ததம தாக்கம் செலுத்தியிருந்தது.
மீளாய்வுக்குட்படுத்தப்பட்ை ஆண்டில் மதிப்பிறக்கக் கட்ைணம் என்பது ரூ. 933 மில்லியனாகும். இது முன்தனய ஆண்டுப் சபறுமதியுைன் ஒப்பிடுதகயில் 26.8% அதிகரிப்பாகும். நிலவியிருந்த ெவால்கள் நிதறந்த பாரிய சபாருளாதாரச் சூழல் காரணமாக, கைன் தர முகாதமத்துவத்தில் ரமலும் ெவால்கள் நிதறந்த சூழதல ஏற்படுத்தியிருந்ததுைன், வங்கியினால் இைர்கள் நிதறந்த பிரிவுகளில் ரமலதிக மதிப்பிறக்கத்ததயும் ரதாற்றுவித்திருந்தன. மதிப்பிறக்க கட்ைணங்கள் என்பது இலங்தக அபிவிருத்தி முறிகளிலும் (SLDBs) மதிப்பிறக்க கட்ைணங்கள் தாக்கம் செலுத்தியிருந்ததுைன், தரப்படுத்தல் முகவர் நிறுவனங்களினால் இதறதயாண்தம தரப்படுத்தல் குதறக்கப்பட்டிருந்ததன் விதளவாக இந்த நிதல எழுந்திருந்தது.
2021 ஆம் ஆண்டில் யூனியன் வங்கியின் வரிக்குப் பிந்திய இலாபம் ரூ. 765 மில்லியனாக பதிவாகியிருந்தது. இந்தப் சபறுமதி முன்தனய ஆண்டுைன் ஒப்பிடுதகயில் 32.7% ஆக உயர்ந்துள்ளது. கூட்ைாண்தம வருமான வரி விகிதம் 4% இனால் வீழ்ச்சியதைந்திருந்ததமயினூைாக ஆண்டில் வருமான வரிக் கட்ைணத்தில் ரநர்த்தியான தாக்கத்தத ஏற்படுத்தியிருந்தது. முதலீட்ைாளர்களின் பங்கிலாப வருமானம் என்பது ரூ. 66 மில்லியனாகும். வங்கியின் துதண நிறுவனமான UB ஃபினான்ஸ் லிமிசைட்டினூைாக இந்தப் பங்களிப்பு பிரதானமாக பதிவாகியிருந்தது.

வங்கி சதாைர்ந்தும் மூலதன ரபாதுதம விகிதங்கள் ஒழுங்குபடுத்தல் ரததவப்பாடுகதள விை உயர்வாக அதமந்துள்ளதுைன், அறிக்தகயிைல் திகதியன்று ஆரராக்கியமான சமாத்த மூலதன விகிதமாக 16.47% என்பதத பதிவு செய்திருந்தது. நிதல 1 மூலதனவிகிதம்ஆகக்குதறந்த ரததவப்பாடு என்பதத விை உயர்வாக 15.51% ஆக காணப்பட்ைது.
குழுமத்தில் வங்கியும் அதன் இரு துதணநிறுவனங்களான UB ஃபினான்ஸ்கம்பனிலிமிசைட் மற்றும் நஷனல் அசெட் மரனஜ்மன்ட் லிமிசைட் ஆகியன அைங்கியுள்ளதுைன், இந்தக் குழுமம் வரிக்குப் பிந்திய இலாபமாக ரூ. 850 மில்லியதன பதிவு செய்திருந்தது. இது முன்தனய ஆண்டுைன் ஒப்பிடுதகயில் 37% வளர்ச்சியாகும். குழுமத்தின் சமாத்த சொத்துகள் ரூ. 124 பில்லியனாகும். குழுமத்தின் ஐந்சதாதகயில் வங்கி 95% பங்தக சகாண்டிருந்ததால், குழுமத்தின் விதனத்திறன் என்பதில் வங்கியின் பங்களிப்பு உயர்வாக அதமந்திருந்தது.
2021 ஆம் ஆண்டு முழுவதிலும், ெவால்கள் நிதறந்த சூழலில், ஆரராக்கியமான திரள்வு நிதலகள் மற்றும் தைங்கலில்லாத செயற்பாடுகதள ரபணுவதுைன் ஊழியர் மற்றும் வாடிக்தகயாளர் பாதுகாப்பு என்பது யூனியன் வங்கியின் பிரதான முகாதமத்துவ முன்னுரிதமகளாக அதமந்திருந்தன. கட்டுப்பாடுகள் மற்றும் வதரயதறகள் காணப்பட்ை நிதலயில், சில்லதற, சிறிய நடுத்தரளவு சதாழில் முயற்சியாளர்கள் மற்றும் கூட்ைாண்தம வாடிக்தகயாளர்களுைன் சநருக்கமான ஈடுபாட்தை வங்கி சதாைர்ந்து ரபணியிருந்தது.
டிஜிட்ைல் வங்கியியல் செயற்பாடுகளில் தந்திரராபாய ரீதியில் கவனம் செலுத்துவதற்கதமய மற்றும் ஆண்டில்டிஜிட்ைல்செயன்முதறகதள ரமம்படுத்தும் வதகயில், வங்கி அதன் ரமம்படுத்தப்பட்ை சமாதபல் app ஆன ‘UBgo’ என்பதத மீள அறிமுகம் செய்திருந்தது. JustPay ஊைாக ஏதனய வங்கிகளிலிருந்து QR சகாடுப்பனவுகள் மற்றும் உைனடி மீள் நிரப்புதககள் ரபான்றவற்தற சகாண்டுள்ளது. இதனூைாக வங்கியியல் செயற்பாடுகள் அதனத்து வாடிக்தகயாளர்களுக்கும் இலகுவாக அணுகக்கூடியதாகவும், எளிதமப்படுத்தப்பட்ைதாகவும் அதமந்துள்ளது. டிஜிட்ைல் வங்கியியல் நாளிதககளில் வங்கி சதாைர்ந்தும் முதலீடுகதள ரமற்சகாள்ளத் திட்ைமிட்டுள்ள நிதலயில், அதன் வாடிக்தகயாளர்களின் டிஜிட்ைல் வங்கியியல் அனுபவத்தத ரமம்படுத்துவதில் புரட்சிகரமான நைவடிக்தககதள ரமற்சகாள்ளும் பணிகளில் முதல் படிமுதறயாக இது அதமந்துள்ளது. வங்கியின் விருது சவன்ற, புரட்சிகரமான பண முகாதமத்துவ தீர்வான BizDirect இனால் சதாைர்ச்சியாக கூட்ைாண்தம மற்றும் சிறிய நடுத்தரளவு சதாழில்முயற்சியாண்தம வாடிக்தகயாளர்களுக்கு சபறுமதி ரெர்க்கப்பட்டுள்ளது. இந்த ெவால்கள் நிதறந்த காலப்பகுதியில் வியாபாரங்களுக்கு விதனத்திறனான திரள்வு முகாதமத்துவத்துக்கும் விதனத்திறனான செயற்பாடுகளுக்கும் பிரதான டிஜிட்ைல் செயற்படுத்துதகயாக இது அதமந்துள்ளது. 2022 மற்றும் அதற்கு அப்பால் டிஜிட்ைல் மாற்றியதமப்பு நைவடிக்தககளுக்கதமய, 2021 ஆம் ஆண்டில் தனது ரைட்ைா நிதலயத்தில் பாரிய ரமம்படுத்தலில் யூனியன் வங்கி முதலீட்தை ரமற்சகாண்டிருந்தது. நவீன வெதிகள் பதைத்த IT உட்கட்ைதமப்பு வெதியுைன், நவீன சதாழில்நுட்பங்களினூைாக, சிறந்த மாற்றியதமப்பு மற்றும் புத்தாக்கத் திறன்கள் ரபான்றவற்றுைன், பாதுகாப்பு நியமங்கதள ரமம்படுத்தி, கட்ைதமப்புகளின் தங்கியிருக்கும் திறன் மற்றும் சிறந்த இைர் மீட்பு ஆற்றல்கள் ரபான்றவற்தற வழங்கக்கூடியதாக இருக்கும் என எதிர்பார்க்கின்றது.
வங்கியின் நிதிப் பபறுபபறுகள் ப ாடர்பில் பணிப்பாளர் /பிர ம நியைபவற்று அதிகாரி இந்திரஜித்விக்ரமசிங்க கருத்துத் ப ரிவிக்யகயில், “தளம்பல்களுைனான பாரிய சபாருளாதாரச் சூழலில் இயங்கிய ரபாதிலும், தைங்கலில்லாத ரெதவ வழங்கல் மற்றும் சதாைர்ச்சியான வியாபார வளர்ச்சி ரபான்றவற்றுக்கு வங்கி முக்கியத்துவமளித்திருந்தது. துரித வியாபார சதாைர்ச்சித் திட்ைத்துைனான, உறுதியான இைர் முகாதமத்துவ தந்திரராபாயங்களினூைாக, வங்கி சதாைர்ந்தும் வாடிக்தகயாளர்கள், ஊழியர்கள் மற்றும் இதர பங்காளர்களுக்கு 2021 சதாற்றுப் பரவல் காலப்பகுதியிலும் ஆதரவளிப்பதில் தன்தன உறுதியாக அர்ப்பணித்திருந்தது. முதறயான திட்ைமிடும் நைவடிக்தககளினூைாக, யூனியன் வங்கி ெவால்கள் நிதறந்த ஆண்தை, உறுதியான திரள்வுத் தன்தம, உறுதியான மூலதன இருப்பு மற்றும் ஆரராக்கியமான விதனத்திறன் ரபான்றவற்றினூைாக தாங்கிக் சகாண்ைது. 2022 ஆம் ஆண்டு என்பது அதிகளவு வாய்ப்புகதளக் சகாண்டுள்ளதுைன், தடுப்பூசி முன்சனடுப்பினூைாக, சகாவிட்-19 சதாற்றுப் பரவல் காரணமாக எழுந்துள்ள ெவால்களினூைாக உலகம் மீண்டு வருகின்றது. ெந்ததயினுள் வளர்ந்து வரும் வாய்ப்புகதளப் பயன்படுத்தி இயங்க எதிர்பார்ப்பதுைன், 2022 ஆம் ஆண்டு என்பது இந்த தந்திரராபாய வளர்ச்சியின் சதாைர்ச்சித் தன்தமயாக அதமந்திருக்கும் என்பதுைன், எமது வாடிக்தகயாளர்கள் மற்றும் ஊழிய அங்கத்தவர்களின் பாதுகாப்பு மற்றும் நலதன உறுதி செய்வதாகவும் அதமந்திருக்கும்.” என்றார்.

யூனியன் வங்கி நவீன டேட்டா சென்ரர் முதலீட்டுடன் டிஜிட்டல் செயற்பாடுகளின் அடுத்த கட்டத்துக்கு தன்னை தயார்ப்படுத்தியுள்ளது

யூனியன் வங்கி நவீன டேட்டா சென்ரர் முதலீட்டுடன் டிஜிட்டல் செயற்பாடுகளின் அடுத்த கட்டத்துக்கு தன்னை தயார்ப்படுத்தியுள்ளது

யூனியன் வங்கி தனது பிரதான மற்றும் இடர் மீட்பு டேட்டா நிலையங்களில் பாரிய மெருகேற்றத்தை அண்மையில் மேற்கொண்டிருந்தது. அதன் உட்கட்டமைப்பு, வன்பொருள், பெக்-அப் தீர்வுகள், பாதுகாப்பு உட்கட்டமைப்பு, நிறுவனசார் களஞ்சியப்படுத்தல் மற்றும் கண்காணிப்பு தீர்வுகள் போன்றவற்றில் மேம்படுத்தல்கள் இவ்வாறு மேற்கொள்ளப்பட்டுள்ளன.

டேட்டா நிலையத்துக்கு இந்த பிந்திய மெருகேற்ற அமலாக்கத்தினூடாக, வங்கி தற்போது நவீன வசதிகள் படைத்த தகவல் தொழில்நுட்ப உட்கட்டமைப்பு வசதிகளை கொண்டுள்ளத. இதில் Software Defined Network (SDN) மற்றும் Application Centric Infrastructure (ACI) போன்ற பிந்திய தொழில்நுட்பங்கள் காணப்படுகின்றன. இந்த புதிய தொழில்நுட்பங்கள் கட்டமைப்புகளின் தங்கியிருக்கும் திறனை மேம்படுத்துவதாக அமைந்திருப்பதுடன், உயர் கிடைப்பனவு மற்றும் சிறந்த இடர் மீட்சித் திறன்களை வழங்குவதாக அமைந்திருக்கும். குறைந்தளவு சேவை தடங்கல்களை உறுதி செய்யும் வகையில் இந்த டேட்டா சென்ரரில் மேற்கொள்ளப்பட்டுள்ள முதலீடு அமைந்திருப்பதுடன், மேலும் அதிகளவு மாற்றியமைப்பு மற்றும் புத்தாக்க ஆற்றல்களை உருவாக்கி, வங்கியின் தூர நோக்குடனான, துரிதப்படுத்தப்பட்ட டிஜிட்டல் மாற்றியமைப்பு செயற்பாடுகளை வெளிப்படுத்துவதாக அமைந்துள்ளது.

இந்த டேட்டா நிலைய மெருகேற்றம் தொடர்பில் யூனியன் வங்கி பிரதம தகவல் அதிகாரி நிசல கொடிப்பிலி கருத்துத் தெரிவிக்கையில், “துரித கதியில் தொழில்நுட்பம் மாற்றமடையும் யுகத்தில் நாம் இயங்குவது மாத்திரமன்றி, தொழில்நுட்பத்தினூடாக மக்களின் வாழ்க்கையும், நாம் வியாபாரத்தை முன்னெடுக்கும் முறையும் துரிதமாக மாற்றமடைந்த வண்ணமுள்ளது. எமது டேட்டா நிலையத்துக்கான இந்த பாரிய மெருகேற்றம் என்பது, அடுத்த கட்ட டிஜிட்டல் மாற்றத்துக்கு வங்கியை தயார்ப்படுத்தும் காலப்பகுதியில் தோற்றம் பெற்றுள்ளது, இதனூடாக, பிரத்தியேகமான தீர்வுகள் பிரயோகம் இடம்பெறுவதுடன், ஒன்றிணைக்கப்பட்ட, பரிபூரண பாவனையாளர் அனுபவம் எமது சகல பங்காளர்களையும் சென்றடைகின்றது. புதிய டேட்டா நிலைய மேம்படுத்தல் என்பது, 360 பாகை சேவை விரிவாக்கலுக்கு வலுச் சேர்ப்பதுடன், பாவனையாளர் அனுபவம், வாடிக்கையாளர் அனுபவம், பல அனுபவ மற்றும் ஊழியர் அனுபவ மேம்பாட்டை உறுதி செய்யும்.” என்றார்.

டேட்டா சென்ரர் மெருகேற்றம் தொடர்பான பிரதான அனுகூலங்கள் பற்றி கொடிப்பிலி மேலும் தெரிவிக்கையில், “அண்மைய மெருகேற்றத்தினூடாக, எமது கட்டமைப்பு தற்போது Tier III டேட்டா சென்ரராக திகழ்வதுடன், 99.98% இயங்கு நேரத்தையும், பராமரிப்பு ஆற்றல்களையும் உறுதி செய்திருந்தது. அதாவது எமது வாடிக்கையாளர்களுக்கு தற்போது துரித வங்கியியல் சௌகரியங்களுடன், மேம்படுத்தப்பட்ட டேட்டா பாதுகாப்பு லேயர்களை கொண்டிருக்கும் தகைமையை பெற்றுள்ளனர்.  புதிய டேட்டா நிலையத்தின் மேம்படுத்தப்பட்ட பாதுகாப்பு நிலைகள் பிரதான உள்ளம்சமாக அமைந்துள்ளதுடன், அதிகரித்துச் செல்லும் இடர்களின் போது தரவுகளின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டிய தற்போதைய சூழல்களில் சிறந்த செயற்படுத்துநராகவும் உள்ளது. டேட்டா சென்ரரின் மெருகேற்றத்தினூடாக, திட்டமிடப்படாத மீட்சி செயற்பாடுகள் எவ்விதமான தடங்கல்களுமின்றி இடம்பெறுவதுடன், அதிகரித்துச் செல்லும் உறுதியற்ற தன்மைகளின் போது வியாபாரங்கள் தொடர்ச்சித் தன்மையை உறுதி செய்ய வேண்டிய தேவையாகவும் அமைந்துள்ளது. எமது உற்பத்தித் திறனை இது அதிகரித்துள்ளதுடன், புதிய செயற்திட்டங்களை வேகமாக பிரயோகிக்கும் எமது ஆற்றலை மேம்படுத்துவதாகவும் அமைந்துள்ளதுடன், உட்கட்டமைப்பு செலவுகளை சீர்ப்படுத்துவதுடன், வங்கியின் கட்டமைக்கப்பட்ட திட்டங்களுடன் டிஜிட்டல் மாற்றியமைப்புக்கு ஏதுவாக அமைந்திருக்கும்.” என்றார்.

வாடிக்கையாளர் அனுபவங்களை தொடர்ச்சியாக மேம்படுத்துவது என்பது இந்த தந்திரோபாயத்தின் ஒரு அங்கமாக அமைந்துள்ளதுடன், மேம்படுத்தப்பட்ட தகவல் தொழில்நுட்ப உட்கட்டமைப்பு வசதிகளில் யூனியன் வங்கி தொடர்ச்சியான முதலீடுகளை மேற்கொள்வதுடன், வங்கி பிரத்தியேகமான மற்றும் உரிய காலத்துக்கான நிதித் தீர்வுகளில் முதலீடுகளை மேற்கொண்டு, வளர்ந்து வரும் பரந்தளவிலான வாடிக்கையாளர்களை தேவைகளை நிவர்த்தி செய்வதில் கவனம் செலுத்துகின்றது. வங்கியின் தந்திரோபாயமான வழிமுறையில், மாற்றியமைத்துக் கொள்ளக்கூடிய தீர்வுகள், நீடித்த அணுகல் பகுதிகள் மற்றும் தொழில்நுட்பம் செயற்படுத்தப்பட்ட சௌகரியங்கள் போன்றன வாடிக்கையாளர்களுக்கு நேர்த்தியான வங்கியியல் அனுபவத்தை வழங்கும் வகையில் அமைந்துள்ளது.

அமெரிக்காவை தளமாகக் கொண்டியங்கும் சர்வதேச தனியார் முதலீட்டு நிறுவனமான TPG இன் உறுதித் தன்மையுடன் யூனியன் வங்கி இயங்குவதுடன், US$85 க்கு அதிகமான மூலதனத்தை முகாமைத்துவத்தின் கீழ் கொண்டுள்ளது. ஆசியா மற்றும் ஐரோப்பாவில் நீடித்த சர்வதேச வலையமைப்பையும் கொண்டுள்ளது. உறுதியான அடித்தளத்துடன், நிதி உறுதித் தன்மை மற்றும் சர்வதேச அறிவாற்றல் போன்றவற்றினூடாக, இலங்கையில் காணப்படும் அதிகளவு மூலதனவாக்கத்தைக் கொண்ட தனியார் வணிக வங்கிகளில் ஒன்றாக யூனியன் வங்கி அமைந்துள்ளது. இதனூடாக முழுமையான தயாரிப்புகள் மற்றும் சேவைகள் போன்றன தனிநபர்கள் மற்றும் வணிகங்களுக்கு வழங்கப்படுகின்றன.

JustPay உடன் யூனியன் வங்கி மொபைல் App தற்போது மேம்படுத்தப்பட்டுள்ளது

JustPay உடன் யூனியன் வங்கி மொபைல் App தற்போது மேம்படுத்தப்பட்டுள்ளது

யூனியன் வங்கி தனது மொபைல் app ஆன UBgo, தற்போது LankaPay இன் JustPay கொடுப்பனவு தீர்வினூடாக மேலும் வரையறைகளற்ற கொடுப்பனவுகளை மேற்கொள்ளக்கூடிய வகையில் மேம்படுத்தப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளது.

JustPay ஒன்றிணைப்பினூடாக, UBgo பாவனையாளர்களுக்கு வேறெந்தவொரு வங்கியிலிருந்தும் பணத்தைப் பெற்றுக் கொள்ளும் சௌகரியம் வழங்கப்படும் என்பதுடன், தமது யூனியன் வங்கி சேமிப்பு அல்லது நடைமுறைக் கணக்குகளை உடனடியாக ‘Top up’ செய்து கொள்ளும் வசதியையும் வழங்கும். JustPay உடனான ஒன்றிணைப்பினூடாக, UBgo app பாவனையாளர்களுக்கு கொடுப்பனவுகள், பண மாற்றங்கள் மற்றும் கொடுக்கல் வாங்கல்களை மேற்கொள்வது போன்ற அனைத்தையும் ஒரு app இல் மேற்கொள்ளும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதனூடாக, பல்வேறு வங்கிகளின் app களினூடாக மாற்றிக் கொள்ளாமல், ஏனைய வங்கிக் கணக்குகளிலிருந்து பணத்தை இலகுவாகப் பெற்று தமது வாழ்க்கைத்தர கொடுப்பனவுகளை இலகுவாக நிர்வகித்துக் கொள்ள முடியும். இது UBgo app பாவனையாளர்களுக்கு தமது கொடுப்பனவுகள் மற்றும் செலவுகளை முறையாக கண்டறிவதற்கு உதவியாக அமைந்திருக்கும் என்பதுடன், UBgo app ஊடாக யூனியன் வங்கி கணக்கினூடாக சகல கொடுப்பனவுகளும் மேற்கொள்ளப்படுவது உறுதி செய்யப்படும். UBgo இல் JustPay ஒன்றிணைவு என்பது அவசர தேவைகளின் போது பாவனையாளர்களுக்கு அனுகூலமளிப்பதாக அமைந்திருக்கும் என்பதுடன், அவசர கொடுப்பனவு தேவைகளை உடனடியாக நிவர்த்தி செய்வதற்கு ஒன்றுக்கு, கிளைக்கு விஜயம் செய்யாமல் மற்றும் appகளிடையே மாறி மாறி கொடுப்பனவுகளை மேற்கொள்ளாமல், ஏனைய வங்கிக் கணக்குகளிலிருந்து பணத்தைப் பெற்றுக் கொள்வதற்கு உதவியாக அமைந்திருக்கும்.

இந்த app இன் பிந்திய மெருகேற்றம் தொடர்பில் யூனியன் வங்கியின் நுகர்வோர் பொறுப்புக்கூறல் தயாரிப்பு மற்றும் மாற்று நாளிகைகள் உதவி பிரதித் தலைவர் மனிஷா பெர்னான்டோ தெரிவிக்கையில், “தேசிய கொடுப்பனவு சேவைகள் வழங்குநரான LankaClear (Pvt) Ltd உடன் நாம் தொடர்ந்து கைகோர்த்து செயலாற்றுவதுடன், அதனூடாக UBgo இல் பாவனையாளர் அனுபவத்தை மேம்படுத்தியுள்ளோம். JustPay வசதியின் ஒன்றிணைப்பினூடாக, UBgo பாவனையாளர்களுக்கு வேறெந்தவொரு வங்கியிலிருந்தும் தமது கணக்குகளை இலகுவாக top up செய்து கொள்ள முடியும். இவ்வாறு மேற்கொள்வதனூடாக, அவர்களுக்கு தமது சகல வங்கிக் கணக்குகளையும் ஒரே app இல் கொண்டிருக்க முடியும். UBgo app ஐப் பயன்படுத்தி மற்றும் Lanka QR வசதியினூடாக கொடுப்பனவுகளை மேற்கொள்ள உதவியாக அமைந்திருக்கும் என்பதுடன், தமது யூனியன் வங்கி கணக்குகளில் போதியளவு மீதி காணப்படுவதை உறுதி செய்வதனூடாக உடனுக்குடனான நிதி மாற்றங்கள் அல்லது ஒன்லைன் கொடுப்பனவுகளை மேற்கொள்வதற்கு வசதியளிப்பதாக அமைந்திருக்கும். இந்த பிரதான டிஜிட்டல் வங்கியியல் நாளிகையை மேம்படுத்துவதற்காக மேற்கொள்ளப்பட்ட மற்றுமொரு முக்கிய படிமுறையாக இது அமைந்திருப்பதுடன், எமது வாடிக்கையாளர்களுக்கு இந்த சமூகத் தனிமைப்படுத்தல் அவசியமான காலப்பகுதியில் சஞ்சரிப்புகளை குறைத்து, சௌகரியமாக தொடுகைகளற்ற வங்கியியல் அனுபவத்தை பெற்றுக் கொள்வதற்கு உதவும் வகையில் இந்த முறை அமைந்துள்ளது. எதிர்வரும் மாதங்களில் UBgo மேலும் மேம்படுத்தப்படும் என்பதுடன், வாடிக்கையாளர்களுக்கு குறைந்த செலவில், ஒப்பற்ற கொடுப்பனவு மற்றும் கொடுக்கல் வாங்கல் சௌகரியங்களை தமது வங்கிக் கொடுக்கல் வாங்கல்களுக்கு பெற்றுக் கொள்ளக்கூடிய வசதி வழங்கப்படும். என்றார்.

UBgo இல் JustPay வசதியைப் பயன்படுத்தி பணத்தைப் பெற்றுக் கொள்வதற்கு, பாவனையாளர்கள் app இனுள் login செய்து, பணத்தைப் பெற்றுக் கொள்ள எதிர்பார்க்கும் தமது இதர வங்கி கணக்கு இலக்கத்தைப் பதிவு செய்து, தேவையான பெறுமதியை பதிவு செய்து தெரிவு செய்த யூனியன் வங்கிக் கணக்கை top-up செய்து கொள்ளலாம். app ஊடாக யூனியன் வங்கிக் கணக்கு தகவல்களில் மாற்றம் செய்யப்பட்ட பணத்தின் தகவல்களை உடனுக்குடன் அறிந்து கொள்ளலாம்.

இந்த app மற்றும் JustPay உள்ளம்சம் என்பது சகல யூனியன் வங்கி கணக்குதாரர்களுக்கும் கிடைக்கும். ஏற்கனவே UBgo ஐ பயன்படுத்தும் பாவனையாளர்கள், Top Up and go வசதியை பயன்படுத்த, தமது app ஐ மேம்படுத்திக் (upgrade) கொள்ள வேண்டும். இந்த உள்ளம்சம் தொடர்பில் மேலதிக விவரங்களை அறிந்து கொள்ள அல்லது யூனியன் வங்கி மொபைல app க்கு பதிவு செய்து கொள்ள, யூனியன் வங்கி கணக்குதாரர்கள் வங்கியின் 24 மணி நேர வாடிக்கையாளர் சேவை ஹொட்லைன் இலக்கமான 0115 800 800 ஊடாக தொடர்பு கொள்ளலாம் அல்லது வங்கியின் கூட்டாண்மை இணையத்தளமான www.unionb.com ஊடாக தொடர்பு கொள்ளலாம்.

புதிய பிரதித் தவிசாளர் நியமனம் மற்றும் பணிப்பாளர் சபையில் மாற்றங்கள் தொடர்பில் யூனியன் வங்கியின் நிர்வாக சபை அறிவிப்பு

புதிய பிரதித் தவிசாளர் நியமனம் மற்றும் பணிப்பாளர் சபையில் மாற்றங்கள் தொடர்பில் யூனியன் வங்கியின் நிர்வாக சபை அறிவிப்பு

ட்ரெவின் பெர்னான்டோபுள்ளே – பிரதித் தவிசாளர்

ஏ. எஸ். இப்ரஹிம் – சுயாதீன, நிறைவேற்று அதிகாரமற்ற பணிப்பாளர்

 
 
 
யூனியன் வங்கியின் பிரதித் தவிசாளராக ட்ரெவின் பெர்னான்டோபுள்ளே, 2021 ஆகஸ்ட் 30 ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளதாக வங்கியின் பணிப்பாளர் சபை அறிவித்துள்ளது. வங்கியின் பணிப்பாளர் சபையில் 9 வருடங்களாக சேவையாற்றியிருந்ததைத் தொடர்ந்து, இலங்கை மத்திய வங்கியின் ஒழுங்குபடுத்தல் விதிமுறைகளின் பிரகாரம், 2021 ஆகஸ்ட் 29 ஆம் திகதி முதல் வங்கியின் தற்போதைய பிரதித் தவிசாளரான சப்ரி கௌஸ் ஓய்வு பெறவுள்ளதைத் தொடர்ந்து, அந்தப் பதவிக்கு பெர்னான்டோபுள்ளே நியமிக்கப்பட்டுள்ளார்.

2021 ஆகஸ்ட் 15 ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில், யூனியன் வங்கியின் பணிப்பாளர் சபையில் சுயாதீன, நிறைவேற்று அதிகாரமற்ற பணிப்பாளராக ஏ.எஸ். இப்ரஹிம் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் வங்கியின் பணிப்பாளர் சபை மேலும் அறிவித்துள்ளது.

பிரதி தவிசாளராக நியமிக்கப்பட்டுள்ள ட்ரெவின் ஃபெர்னான்டோபுள்ளே, 2017 ஆம் ஆண்டு முதல் யூனியன் வங்கியின் பணிப்பாளர் சபையில் சுயாதீன, நிறைவேற்று அதிகாரமற்ற பணிப்பாளராக பணியாற்றியுள்ளதுடன், வங்கியின் பல்வேறு அமைப்புகளில் சேவையாற்றியுள்ளார். வங்கியின் செயற்பாடுகளை முன்னெடுத்துச் செல்வதற்கு அவசியமான வழிகாட்டல்களை இவர் வழங்கியிருந்தார். நிதிச் சேவைகள் துறையில் 40 வருடங்களுக்கு மேலான அனுபவத்தைக் கொண்டுள்ள வங்கியாளராக இவர் திகழ்கின்றார். யூனியன் வங்கியின் பணிப்பாளர் சபையில் இணைந்து கொள்வதற்கு முன்னதாக, DFCC குழுமத்தின் பிரதம இடர் அதிகாரி/நிறைவேற்று உப தலைவர் – இடர் மற்றும் இலங்கை வங்கியின் பிரதம இடர் அதிகாரியாக பணியாற்றியிருந்தார். HSBC ஸ்ரீ லங்காவின் பிரதி பிரதம நிறைவேற்று அதிகாரியாக பணியாற்றியதுடன், 30 வருடங்களாக இந்நிறுவனத்தில் பணியாற்றிய பரந்த அறிவையும், சர்வதேச வங்கிச் சேவைகளுக்கான வெளிப்படுத்தல் மற்றும் இடர் முகாமைத்துவம் பற்றிய நுணுக்கங்களையும் அறிந்துள்ளார். இடர் முகாமைத்துவம், அந்நியச் செலாவணி மற்றும் திறைசேரி, சர்வதேச வியாபாரம், கூட்டாண்மை வங்கியியல் மற்றும் கொடுக்கல் வாங்கல் செயற்பாடுகள் போன்ற பலவற்றுக்கு தலைமைத்துவத்தை வழங்கியுள்ளார்.

AMW கெப்பிட்டல் லீசிங் அன்ட் ஃபினான்ஸ் பிஎல்சி (Al Futtaim Group Dubai உரிமையாண்மையில் இயங்கும் நிறுவனம்) தவிசாளராக ஃபெர்னான்டோபுள்ளே திகழ்வதுடன், ஜோசப் ஃபிரேசர் ஞாபகார்த்த வைத்தியசாலையின் பணிப்பாளர் சபை காப்பாளராகவும் திகழ்கின்றார். கொன்டினென்டல் இன்சூரன்ஸ் லங்கா லிமிடெட், என்டர்பிரைஸ் சிலோன் கெப்பிட்டல் (பிரைவட்) லிமிடெட் மற்றும் தேசிய காப்புறுதி நம்பிக்கை நிதியம் ஆகியவற்றின் பணிப்பாளர் சபை அங்கத்தவராகவும் இவர் திகழ்கின்றார். வங்கியியலாளர்களின் பட்டய கல்வியகத்தின் (இலங்கைக் கிளை) முன்னாள் தலைவர் என்பதுடன், இலங்கை வங்கியியல் இடர் நிபுணர்கள் சம்மேளனத்தின் ஸ்தாபக அங்கத்தவர் / முன்னாள் உப தலைவராகவும் திகழ்ந்தார். இம்பீரியல் கல்லூரி, லண்டன் பல்கலைக்கழகத்திடமிருந்து (கணிதம்) BSc. பட்டத்தை ஃபெர்னான்டோபுள்ளே பெற்றுள்ளதுடன், லண்டன் ஸ்கூல் ஒஃவ் இகொனமிக்ஸ் இல் MSc (Statistics) பட்டத்தையும் பெற்றுள்ளார். அத்துடன், லண்டன், வங்கியியலாளர்கள் பட்டய கல்வியகத்தின் அங்கத்தவராகவும் திகழ்கின்றார்.

பிரதானமாக கூட்டாண்மை வங்கியியல், திறைசேரி முகாமைத்துவம் மற்றும் இடர் முகாமைத்துவம் ஆகியவற்றில் 37 வருடங்களுக்கு மேலாக வங்கியியல் அனுபவத்தை ஏ.எஸ்.இப்ரஹிம் கொண்டுள்ளார். 2017 ஜுலை முதல் 2020 நவம்பர் மாதம் வரையில் பீப்பள்ஸ் லீசிங் அன்ட் ஃபினான்ஸ் பிஎல்சியின் பிரதம நிறைவேற்று அதிகாரியாக பணியாற்றியிருந்தார். உள்நாட்டிலும், வெளிநாடுகளிலும் பல சிரேஷ்ட பதவிகளை இப்ரஹிம் வகித்திருந்ததுடன், இவற்றில் சிரேஷ்ட பிரதி பொது முகாமையாளர், மொத்த வங்கியியல் மற்றும் சிரேஷ்ட பிரதி பொது முகாமையாளர், மக்கள் வங்கியின் இடர் முகாமைத்துவம், பிரதி பொது முகாமையாளர், திறைசேரி தலைமை அதிகாரி, கூட்டாண்மை வங்கியியல் மற்றும் வசூலிப்புகள், ஹற்றன் நஷனல் வங்கியின் பிரதம இடர் அதிகாரி மற்றும் பிரதம கடன் அதிகாரி மற்றும் ஸ்டான்டர்ட் சார்ட்டட் வங்கியின் கடன் வழங்கல் பிரிவு மற்றும் GSAM இன் தலைமை அதிகாரியாக பணியாற்றியுள்ளார்.

இப்ரஹிம், பீப்பள்ஸ் இன்சூரன்ஸ் பிஎல்சி, பீப்பள்ஸ் மேர்ச்சன்ட் ஃபினான்ஸ் பிஎல்சி, பீப்பள்ஸ் லீசிங் ஃபலீட் மனேஜ்மன்ட் லிமிடெட், பீப்பள்ஸ் லீசிங் ஹவ்லொக் புரொப்பர்டீஸ் லிமிடெட், பீப்பள்ஸ் மைக்குரோ கொமர்ஸ் லிமிடெட், பீப்பள்ஸ் லீசிங் புரொப்பர்டி டிவலப்மன்ட் லிமிடெட் மற்றும் பங்களாதேஷின் லங்கன் அலியான்ஸ் ஃபினான்ஸ் லிமிடெட் பணிப்பாளராக கடமையாற்றியிருந்ததுடன், தற்போது ஃபின்ட்ரெக்ஸ் ஃபினான்ஸ் லிமிடெட் பணிப்பாளர் சபையில் அங்கம் வகிக்கின்றார். கொழும்பு பல்கலைக்கழகத்திடமிருந்து Honours Degree (BSc) பட்டத்தைப் பெற்றுள்ளதுடன், Chartered Institute of Bankers – UK (FCIB)இன் அங்கத்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நியமனங்களினூடாக யூனியன் வங்கியின் பணிப்பாளர் சபை மேலும் வலிமைப்படுத்தப்பட்டுள்ளதுடன், வங்கியின் தந்திரோபாய பயணத்துக்கு பெருமளவு பெறுமதி மற்றும் வழிகாட்டல்களை வழங்குவதாக அமைந்திருக்கும். கடந்த காலங்களில் வங்கியின் செயற்பாடுகளுக்கு பெறுமதி வாய்ந்த பங்காற்றி, பணியிலிருந்து ஓய்வு பெறும் பிரதி தவிசாளர் சப்ரி கௌஸுக்கு தமது நன்றி மற்றும் வாழ்த்துகளையும் பணிப்பாளர் சபை தெரிவித்துக் கொள்கின்றது.

யூனியன் வங்கி அனுபவம் வாய்ந்த பொருளாதார நிபுணரும் பொதுக் கொள்கை தேர்ச்சியாளரை தனது புதிய பணிப்பாளராக நியமித்துள்ளது

யூனியன் வங்கி அனுபவம் வாய்ந்த பொருளாதார நிபுணரும் பொதுக் கொள்கை தேர்ச்சியாளரை தனது புதிய பணிப்பாளராக நியமித்துள்ளது

அனுபவம் வாய்ந்த பொருளாதார நிபுணரும் பொதுக் கொள்கை தேர்ச்சியாளருமான கலாநிதி. (திருமதி) ரொஷன் ஆன் பெரேராவை யூனியன் வங்கியின் சுயாதீன நிறைவேற்று அதிகாரமற்ற பணிப்பாளராக நியமித்துள்ளதாக யூனியன் வங்கியின் பணிப்பாளர் சபை அறிவித்துள்ளது. 2021 ஜுலை 5 ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

பொதுக் கொள்கை தேர்ச்சியாளராக 20 வருடங்களுக்கு மேலான அனுபவத்தைக் கொண்டுள்ள கலாநிதி. பெரேரா, நாணயக் கொள்கை மற்றும் நிதிக் கொள்கை தொடர்பான பிரச்சனைகள் பற்றி ஆலோசனை வழங்குவதில் பொறுப்பாளராக செயலாற்றியுள்ளார். இவரின் பரந்தளவு அனுபவத்தில் நிதிச் சேவைகளை வழங்கும் நிறுவனங்களை ஒழுங்குபடுத்தல் மற்றும் கண்காணித்தல் மற்றும் இடர் முகாமைத்துவ கட்டமைப்புகளை மேம்படுத்துவதற்கு உதவுதல் போன்றனவும் அடங்கியுள்ளன. இலங்கை மத்திய வங்கியின் பணிப்பாளராகவும் கலாநிதி. பெரேரா பணியாற்றியுள்ளதுடன், தற்போது இலங்கையிலும் வெளிநாடுகளிலும் பல்துறை முகவர் அமைப்புகளில் சுயாதீன ஆலோசகராகவும் பணியாற்றுகின்றார். Institute of Policy Studies மற்றும் Sri Lanka Institute of Directors ஆகிய அமைப்புகள் அடங்கலாக பல நிறுவனங்களில் பணிப்பாளர் சபை அங்கத்தவராக கடமையாற்றியுள்ளார். செங்கடகல ஃபினான்ஸ் பிஎல்சியின் பணிப்பாளர் சபை அங்கத்தவராகவும் இவர் திகழ்கின்றார்.

அமெரிக்காவின் ஹாவார்ட் பல்கலைக்கழகத்தின் ஜோன் எஃவ் கென்னடி பாடசாலையின் எட்வர்ட் எஸ் மேசன் அங்கத்தவராக பொது நிர்வாகத்தில் முதுமானிப் பட்டத்தை அண்மையில் பூர்த்தி செய்திருந்தார். அவுஸ்திரேலியாவின் மெல்பேர்ன் பல்கலைக்கழகத்தில் பொருளாதாரத்தில் PhD.பட்டத்தையும் பெற்றுள்ளதுடன், அமெரிக்காவின் சிக்காகோ இலினொயிஸ் பல்கலைக்கழகத்தில் சூழல்சார் புவியியலில் முதுமானிப் பட்டத்தையும், கொழும்பு பல்கலைக்கழகத்தில் பொருளாதாரத்தில் முதுமானிப் பட்டம் மற்றும் கலையில் இளமானிப் பட்டத்தையும் பூர்த்தி செய்துள்ளார்.

யூனியன் வங்கியின் ‘Missed Call Banking’ வசதியுடன் வங்கிசார் கொடுக்கல் வாங்கல் சௌகரியம் மேம்படுத்தப்பட்டுள்ளது

யூனியன் வங்கியின் ‘Missed Call Banking’ வசதியுடன் வங்கிசார் கொடுக்கல் வாங்கல் சௌகரியம் மேம்படுத்தப்பட்டுள்ளது

தமது வாடிக்கையாளர்களுக்கு சௌகரியமான வங்கிச் சேவைகளை பெற்றுக் கொடுப்பதற்கு தொழில்நுட்ப ரீதியில் மேம்படுத்திய சேவைகளை வழங்கும் தனது அர்ப்பணிப்புக்கமைய, யூனியன் வங்கி Missed Call வங்கிச் சேவையை அண்மையில் அறிமுகம் செய்திருந்தது. எந்தவொரு மொபைல் தொலைபேசியினூடாகவும் மொபைல்-அடிப்படையிலான வங்கிச் சேவைகளை பெற்றுக் கொள்ளக்கூடிய வகையிலமைந்த சேவையாக இது அமைந்துள்ளது.

யூனியன் வங்கியின் Missed Call வங்கியியல் சேவை என்பது குறுந் தகவல் சேவை (SMS) அடிப்படையிலான அறிவுறுத்தல்களை வழங்கும் சேவையாக அமைந்திருப்பதுடன், கணக்குதாரர்களுக்கு தமது கணக்கு மீதிகளை உடனுக்குடன் தமது கையடக்க தொலைபேசியில் பெற்றுக் கொள்ளும் வசதியை வழங்குகின்றது.
இந்த சேவையை பெற்றுக் கொள்வதற்கு, கணக்குதாரர்கள் யூனியன் வங்கியின் SMS அலேர்ட்ஸ் வசதிக்கு தம்மைப் பதிவு செய்து கொள்ள வேண்டும் என்பதுடன், இதனை கணக்கை ஆரம்பிக்கும் போது செயற்படுத்திக் கொள்ள முடியும் அல்லது குறித்த சேவைக்கான விண்ணப்பப் படிவத்தை பூர்த்தி செய்து சமர்ப்பிப்பதனூடாக மேற்கொள்ளலாம். அதனைத் தொடர்ந்து, பாவனையாளர்களுக்கு நிலுவையிலுள்ள மீதி மற்றும் அவர்களின் வங்கிக் கணக்குகளின் மீதான இதர பிந்திய தகவல்கள் போன்றவற்றை SMS ஊடாக பெற்றுக் கொள்ளலாம். கணக்குதாரர்கள் 0115 800 700 எனும் இலக்கத்துக்கு ‘missed call’ ஒன்றை மேற்கொள்ளலாம் அல்லது வழங்கப்பட்ட குறியீட்டுடன் SMS ஒன்றை அனுப்பி, கோரிய கணக்கு விவரங்களுடன் அவசியமான அறிவித்தல்களைப் பெற்றுக் கொள்ளலாம்.

யூனியன் வங்கியின் Missed Call மற்றும் SMS வங்கிச் சேவை என்பது, இந்த தொற்றுப் பரவலுடனான காலப்பகுதியில் மிகவும் பயனுள்ளதாக அமைந்திருக்கும். வாடிக்கையாளர்களுக்கு பாதுகாப்பாக தமது இருப்பிடங்களில் இருப்பதற்கும், தமது கணக்கு மீதிகளை அறிந்து கொள்வதற்கும், கணக்குகளில் இடம்பெறும் கொடுக்கல் வாங்கல்கள் பற்றி உடனுக்குடன் அறிந்து கொள்வதற்கும் ஏதுவாக இருக்கும்.

மொபைல் வங்கியியல் சௌகரியத்தில் புதிய உள்ளடக்கம் தொடர்பில் நுகர்வோர் வங்கியியல் பிரிவின் உப தலைவர் சாயா ஜயவர்தன கருத்துத் தெரிவிக்கையில், “எமது வாடிக்கையாளர்களுக்கு வங்கியியல் அனுபவத்தை எளிமைப்படுத்தி வழங்குவது தொடர்பில் தொடர்ச்சியான புதிய வழிமுறைகளில் நாம் கவனம் செலுத்தி வருவதுடன், அதனூடாக பயன்படுத்த எளிமையான, செலவில் குறைந்த டிஜிட்டல் வங்கித் தீர்வுகளை அறிமுகம் செய்துள்ளோம். இவற்றினூடாக, வங்கிக் கொடுக்கல் வாங்கல்களை இலகுவாகவும் சௌகரியமாகவும் மேற்கொள்ள முடிந்துள்ளது. அந்த வழியில் யூனியன் வங்கியின் Missed Call வங்கிச் சேவை என்பது மற்றுமொரு முன்நோக்கிய படியாக அமைந்திருப்பதுடன், வாடிக்கையாளர்களுக்கு தாம் எங்கிருந்தாலும் எந்நேரத்திலும் தமது கணக்கு மீதி தொடர்பில் உடனுக்குடன் சௌகரியமாக தமது கையடக்க தொலைபேசியில் அறிந்து கொள்ளும் வசதியை வழங்குகின்றது. கணக்கு தொடர்பான தகவல்களைப் பெற்றுக் கொள்ளும் இந்த ஒருபடிமுறை செயன்முறையானது, வாடிக்கையாளர் அனுபவத்தை பெருமளவு மேம்படுத்துவதாக அமைந்திருக்கும் என்பதுடன், காலத்தையும் மீதப்படுத்தி, கணக்கு தொடர்பான தகவல்களை நாளின் எந்நேரத்திலும் நம்பத்தகுந்த வகையில் பெற்றுக் கொள்வதற்கு உதவியாக அமைந்திருக்கும் என்பதில் நாம் நம்பிக்கை கொண்டுள்ளோம்.” என்றார்.

யூனியன் வங்கியின் Missed Call வங்கியியல் சேவையினூடாக, முக்கியமான கொடுக்கல் வாங்கல் தீர்மானங்களை மேற்கொள்வதற்கு முன்னர், தனிநபர் சேமிப்பு மற்றும் நடைமுறைக் கணக்குதாரர்களுக்கு அருகாமையிலுள்ள தன்னியக்க டெலர் இயந்திரத்துக்கு (ATM) அல்லது கிளைக்கு பயணம் செய்வது அல்லது வாடிக்கையாளர் பராமரிப்பு சேவையுடன் தொலைபேசி ஊடாக தொடர்பை மேற்கொள்வதற்கு விரயமாகும் நேரத்தை சேமித்து, பயனுள்ள வகையில் செலவிட முடியும். எந்த நேரத்திலும் கணக்கு மீதி பற்றி அறிந்து கொள்வதற்கு வாடிக்கையாளர்கள் 0115 800 700 எனும் இலக்கத்துக்கு missed call ஒன்றை மேற்கொள்ளலாம் அல்லது ‘Bal’ என டைப் செய்து அதே இலக்கத்துக்கு SMS செய்யலாம். பதிவு செய்து கொள்ளும் சேவையும் வழங்கப்படுகின்றது. வாடிக்கையாளர்களுக்கு தினசரி ஒரு தடவை வீதம் 30 நாட்களுக்கு கணக்கு மீதியை பெற்றுக் கொள்வதற்கு M100 என டைப் செய்து அனுப்பி பதிவு செய்து கொள்ளலாம். M150 பதிவு சேவையினூடாக, நாளொன்றுக்கு இரு தடவைகள் கணக்கு மீதி தொடர்பான தகவல்கள் SMS வாயிலாக அனுப்பப்படும். இந்த M150 சேவை என்பது, கணக்கு மீதி, காசோலைகள் மற்றும் கணக்கு மிதப்புகள் தொடர்பில் தொடர்ச்சியாக பதிவுகளை பேண எதிர்பார்க்கும் வாடிக்கையாளர்களுக்கு மிகவும் பொருத்தமானதாக அமைந்திருக்கும். வாடிக்கையாளர் ஒருவரின் மூன்று கணக்குகள் வரை இந்த சேவைக்கு சேர்த்துக் கொள்ளலாம். மேலும், பாவனையாளர்களுக்கு சௌகரியமான வகையில், தினசரி குறிப்பிட்ட நேரத்தில் மீதி தொடர்பான தகவல்களை பெற்றுக் கொள்ளவும் முடியும். சாதாரண கையடக்க தொலைபேசியிலும் இந்தச் சேவையை பெற்றுக் கொள்ள முடியும் என்பதால், ஸ்மார்ட்ஃபோன் அல்லாத சாதாரண தொலைபேசியை பயன்படுத்துவோரும் இந்த சேவையை பெற்றுக் கொள்ளலாம்.

யூனியன் வங்கியின் Missed Call Banking சேவை தொடர்பான மேலதிக தகவல்களுக்கும் ஏனைய தீர்வுகள் மற்றும் சேவைகள் தொடர்பான விவரங்களையும் வங்கியின் கூட்டாண்மை இணையத்தளமான www.unionb.com இல் பார்வையிட முடியும். மேலதிக தகவல்களுக்கு அல்லது உதவிகளைப் பெற்றுக் கொள்வதற்கு வாடிக்கையாளர்கள் தமது கிளை முகாமையாளர்கள் அல்லது உறவு பேணல் முகாமையாளர்களுடன் தொடர்பு கொள்ளலாம்.

டிஜிட்டல் கொடுப்பனவுகளுக்காக யூனியன் வங்கி மொபைல் App – ‘UB GO’ தற்போது Lanka QR இனால் வலுவூட்டப்பட்டுள்ளது

டிஜிட்டல் கொடுப்பனவுகளுக்காக யூனியன் வங்கி மொபைல் App – ‘UB GO’ தற்போது Lanka QR இனால் வலுவூட்டப்பட்டுள்ளது

பாவனையாளர்களுக்கு ஒப்பற்ற கொடுப்பனவு அனுபவத்தைப் பெற்றுக் கொடுக்கும் வகையில் யூனியன் வங்கியின் மொபைல் app தற்போது Lanka QR உடன் இணைக்கப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளது.

இலங்கையில் கொடுப்பனவுகளை QR குறியீட்டு முறையினூடாக இலகுவாக மேற்கொள்ளக்கூடிய வகையில் LankaClear இனால் வழங்கப்படும் பணமில்லாக் கொடுப்பனவுத் திட்டமாக Lanka Quick Response (QR) அமைந்துள்ளது.

யூனியன் வங்கியின் மொபைல் App இல் LankaQR ஐ ஒன்றிணைப்பதனூடாக, யூனியன் வங்கியின் சேமிப்பு அல்லது நடைமுறைக் கணக்கினூடாக எந்தவொரு அங்கீகாரம் பெற்ற விற்பனையாளருக்கும் துரிதமாகவும் பாதுகாப்பாகவும் கொடுப்பனவுகளை மேற்கொள்ளக்கூடியதாக இருக்கும். தொற்றுப் பரவும் இக்காலப் பகுதியில் பெரிதும் அனுகூலமளிப்பதாக அமைந்திருப்பதுடன், பணத்துடன் தொடுகையை ஏற்படுத்துவது அல்லது பணக் கொடுக்கல் வாங்கல் ஈடுபடும் பகுதிகளில் அதிகளவு நேரத்தை செலவிடுவது போன்றவற்றினால் தொற்றுப் பரவலுக்கு வெளிப்படுத்தப்படுவதை வாடிக்கையாளர்கள் தவிர்த்துக் கொள்ள உதவியாக அமைந்திருக்கும்.

இந்த புதிய மேம்படுத்தல் தொடர்பில் யூனியன் வங்கியின் நுகர்வோர் வங்கியியல் பிரிவின் பிரதித் தலைவர் சாயா ஜயவர்தன கருத்துத் தெரிவிக்கையில், “மொபைல் App இல் LankaQR ஐ ஒன்றிணைத்துள்ள புதிய மேம்படுத்தலினூடாக, எமது வாடிக்கையாளர்களுக்கு தமது கையடக்க தொலைபேசிகளைப் பயன்படுத்தி எந்தவொரு விற்பனை பங்காளர் பகுதிகளிலும் கட்டணப் பட்டியல் கொடுப்பனவுகளை உடனடியாக மேற்கொள்வதற்கான வசதியை வழங்கும். எமது வாடிக்கையாளர்களுக்கு விற்பனை பகுதிகளின் கட்டணம் செலுத்துமிடங்களில் பெருமளவில் செலவிடும் நேரத்தை குறைத்துக் கொள்வதற்கு இது பங்களிப்பு செய்யும் என்பதுடன், சுப்பர் மார்க்கெட்கள், விற்பனை நிலையங்கள், போக்குவரத்து சேவைகள் போன்ற பகுதிகள் அடங்கலாக பல்வேறு பொருட்கள் மற்றும் சேவைகளை கொள்வனவு செய்ய அவர்கள் இதனைப் பயன்படுத்த முடியும். அத்துடன், இது முற்றிலும் இலவசமானது. எமது வாடிக்கையாளர்களின் டிஜிட்டல் வங்கியியல் அனுபவத்தை புரட்சிகரமானதாக மாற்றியமைக்கும் மற்றுமொரு படிமுறையாக இந்தத் திட்டம் அமைந்துள்ளதுடன், வாடிக்கையாளர்களுக்கு சிறந்த சௌகரியத்தை ஏற்படுத்திக் கொடுப்பதற்காக மொபைல் வங்கியியல் app இல் வங்கி தொடர்ந்தும் முதலீடுகளை மேற்கொள்ளும்.” என்றார்.

LankaQR ஐ பயன்படுத்தி கொடுப்பனவுகளை மேற்கொள்வதற்கு யூனியன் வங்கி வாடிக்கையாளர்கள் ‘UB Go’ மொபைல் வங்கியியல் app ஐ பதிவிறக்கம் (download) செய்து, தமது கணக்குக்கு பிரவேசித்து முறையான கட்டமைப்புகளை பின்பற்றி கொடுப்பனவுகளை நிறுவிக் கொள்ள வேண்டும்.  கட்டணப் பட்டியல் கொடுப்பனவுகளை மேற்கொள்ளும் போது, விற்பனையாளர் பகுதியில் Lanka QR குறியீடு காணப்படுகின்றதா என்பதை உறுதி செய்து கொண்டு, QR குறியீட்டை ஸ்கான் செய்து கொடுப்பனவை மேற்கொள்ளலாம். விற்பனையாளருக்கு உடனடியாக கொடுப்பனவு அனுப்பி வைக்கப்படும் என்பதுடன், அதனை உறுதி செய்யும் SMS ஐ வாடிக்கையாளர் பெற்றுக் கொள்வார்.

இந்த உள்ளம்சம் பற்றிய மேலதிக தகவல்களை அறிந்து கொள்வதற்கு அல்லது UB GO யூனியன் வங்கி மொபைல் app க்கு பதிவு செய்து கொள்வதற்கு வாடிக்கையாளர்கள் வங்கியின் 24 மணி நேர வாடிக்கையாளர் ஹொட்லைன் இலக்கமான 011 5 800 800 உடன் தொடர்பு கொள்ளலாம் அல்லது www.unionb.com எனும் இணையத்தளத்தை பார்வையிடலாம்.

யூனியன் வங்கியின் பிரதி தவிசாளராக சப்ரி, சிரேஷ்ட சுயாதீன பணிப்பாளராக ட்ரவீன் நியமனம்

யூனியன் வங்கியின் பிரதி தவிசாளராக சப்ரி, சிரேஷ்ட சுயாதீன பணிப்பாளராக ட்ரவீன் நியமனம்

பிரதி தவிசாளர் சப்ரி கவுஸ்

சிரேஷ்ட சுயாதீன பணிப்பாளர் ட்ரவீன் பெர்னான்டோபுள்ளே

 

யூனியன் வங்கியின் பிரதித் தவிசாளராக சப்ரி கவுஸ் மற்றும் சிரேஷ்ட சுயாதீன பணிப்பாளராக ட்ரவீன் பெர்னான்டோபுள்ளே ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளதாக யூனியன் வங்கியின் பணிப்பாளர் சபை அறிவித்துள்ளது. 2020 நவம்பர் 2ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் இந்த நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
2012 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் யூனியன் வங்கியின் பணிப்பாளர் சபையில் சுயாதீன நிறைவேற்று அதிகாரமற்ற பணிப்பாளராக கவுஸ் இணைந்து கொண்டார். இவர் தற்போது வங்கியின் Related Party Transactions Review Committee (RPTRC) இன் தவிசாளராக செயலாற்றுகின்றார். அத்துடன் Board Credit Committee (BCC), மனித வளங்கள் மற்றும் சம்பள குழு (HRRC) மற்றும் Nomination Committee (NC) ஆகியவற்றின் உறுப்பினராகவும் திகழ்கின்றார்.
வங்கியியல் துறையில் இவர் 27 வருட காலம் பணியாற்றிய அனுபவத்தைக் கொண்டுள்ளார். உள்நாட்டிலும் வெளிநாடுகளையும் சேர்ந்த முன்னணி சர்வதேச வங்கிகளில் இவர் பணியாற்றியுள்ளார். இதில் அமெரிக்கன் எக்ஸ்பிரஸ் வங்கி, ஸ்டான்டர்ட் சார்ட்டட் வங்கி மற்றும் சவுதி அரேபியாவின் அல் ராஜி பாங்கிங் அன்ட் இன்வெஸ்ட்மன்ட் கோர்பரேஷன் ஆகியன அடங்கியுள்ளன. இவற்றில் நுகர்வோர் வங்கியியல், அதனைச் சார்ந்த செயற்பாடுகள் மற்றும் மூலோபாய அபிவிருத்தி போன்ற செயற்பாடுகளை நிறுவுவதில் முக்கிய பங்காற்றியிருந்ததுடன், தெரிவு செய்யப்பட்ட சந்தைகளில் குறித்த வங்கிகளை முன்னோடிகளாக திகழச் செய்வதற்கும் பங்காற்றியிருந்தார். 1991 ஆம் ஆண்டு அமெரிக்கன் எக்ஸ்பிரஸ் உடன் இணைந்து கொண்ட இவர், இலங்கையில் முதலாவது கூட்டாண்மை அட்டையை அறிமுகம் செய்வதில் பங்களிப்பு வழங்கியிருந்தார். இலங்கை மற்றும் மாலைதீவுகளில் அட்டைகள் விநியோகம் மற்றும் வியாபாரக் கையகப்படுத்தல் ஆகிய செயற்பாடுகளுக்கு பொறுப்பாக செயலாற்றியிருந்தார். ஸ்டான்டர்ட் சார்ட்டட் வங்கியின் சில்லறை வங்கியியல் பிரிவின் தலைமை அதிகாரியாக இவர் செயலாற்றியிருந்தார். இதனைத் தொடர்ந்து லென் பிராந்தியத்துக்கான நுகர்வோர் வங்கியியல் செயற்பாடுகளுக்கான பிராந்திய தலைமை அதிகாரியாக பணியாற்றியிருந்ததுடன், கிரின்ட்லேஸ் வங்கியின் வியாபாரத்தை வெற்றிகரமாக கையகப்படுத்தியிருந்த செயற்பாடுகளில் பங்களிப்பு வழங்கியிருந்தார். மலேசியாவின் அல் ராஜி வங்கியின் நுகர்வோர் வங்கியியல் பிரிவின் பணிப்பாளராக இவர் பணியாற்றியிருந்தார். மலேசிய சந்தையில் இந்த வங்கி பிரவேசித்ததைத் தொடர்ந்து, நாடு முழுவதிலும் கிளை வலையமைப்பை விஸ்தரிப்பதில் இவர் முக்கிய பங்காற்றியிருந்தார். இலங்கை கொடுகடன் தகவல் பணியகத்தின் முன்னாள் பணிப்பாளராக கவுஸ் பணியாற்றியிருந்தார். இவர், அவுஸ்திரேலியாவின் வெஸ்டர்ன் சிட்னி பல்கலைக்கழகத்திலிருந்து வியாபார நிர்வாகத்தில் முதுமாணிப்பட்டத்தைப் பெற்றுள்ளார். ஐக்கிய இராஜ்ஜியத்தின் லண்டன் பிஸ்னஸ் ஸ்கூல் மற்றும் Templeton, Oxford ஆகியவற்றின் தலைமைத்துவ கற்கைகளை இவர் தொடர்ந்துள்ளார்.

2017 ஆம் ஆண்டில் யூனியன் வங்கியின் பணிப்பாளர் சபையில் சுயாதீன நிறைவேற்று அதிகாரமற்ற பணிப்பாளராக பெர்னான்டோபுள்ளே இணைந்து கொண்டார். இவர் வங்கியின் RPTRC, BCC, HRRC மற்றும் NC ஆகியவற்றின் குழு உறுப்பினராக செயலாற்றுகின்றார். 40 வருட காலத்துக்கு மேலாக நிதிச் சேவைகள் துறையில் அனுபவத்தைக் கொண்ட வங்கியாளராக இவர் திகழ்கின்றார். யூனியன் வங்கியின் பணிப்பாளர் சபையில் இணைந்து கொள்வதற்கு முன்னதாக, DFCC குழும பிரதம இடர் அதிகாரி/நிறைவேற்று உப தலைவர் – இடர் அதிகாரியாகவும், இலங்கை வங்கியின் பிரதம இடர் அதிகாரியாகவும் பணியாற்றியிருந்தார். HSBC ஸ்ரீ லங்காவின் பிரதி பிரதம நிறைவேற்று அதிகாரியாக இவர் 30 வருடமாக பணியாற்றியதுடன், சர்வதேச வங்கியியல் மற்றும் இடர் முகாமைத்துவ விசேட செயற்பாடுகள் தொடர்பில் போதியளவு அறிவை இவர் பெற்றுள்ளார். இடர் முகாமைத்துவம், வெளிநாட்டு பரிமாற்றம் மற்றும் திறைசேரி, சர்வதேச வர்த்தகம், கூட்டாண்மை வங்கியியல் மற்றும் நுகர்வோர் செயற்பாடுகள் போன்ற பல செயற்பாடுகளுக்கு தலைமைத்துவம் வழங்கியுள்ளார்.

AMW கெப்பிட்டல் லீசிங் அன்ட் ஃபினான்ஸ் நிறுவனத்தின் (Al Futtaim Group உரிமையாண்மையில் இயங்கும் நிறுவனம்) தவிசாளராக பெர்னான்டோபுள்ளே திகழ்வதுடன், ஜோசப் ஃபிரேசர் ஞாபக வைத்தியசாலையின் காப்பாளர் சபையின் அங்கத்தவராகவும் திகழ்கின்றார். கொன்டினென்டல் இன்சூரன்ஸ் லங்கா லிமிடெட்டின் பணிப்பாளர் சபை அங்கத்தவராகவும் இவர் பணியாற்றுகின்றார். தேசிய காப்புறுதி நம்பிக்கை நிதியத்தின் பணிப்பாளராகவும், இலங்கை வங்கியியலாளர் பட்டய கல்வியகத்தின் முன்னாள் தலைவராகவும் (இலங்கை கிளை) மற்றும் இலங்கை வங்கியியல் இடர் நிபுணர்கள் சம்மேளனத்தின் ஸ்தாபக அங்கத்தவர்/முன்னாள் உப தலைவராகவும் செயலாற்றியுள்ளார். Imperial College, University of London (UOL) இலிருந்து இளமாணிப் பட்டத்தை (கணிதம்) பெர்னான்டோபுள்ளே பெற்றுள்ளதுடன், London School of Economics, UOL இலிருந்து புள்ளிவிவரவியலுக்கான முதுமாணிப்பட்டத்தையும் பெற்றுள்ளார். லண்டன் வங்கியியலாளர் பட்டய கல்வியகத்தின் அங்கத்தவராகவும் திகழ்கின்றார்.

இந்த இரு நியமனங்களையும் பணிப்பாளர் சபை வரவேற்றுள்ளதுடன், யூனியன் வங்கியின் பணிப்பாளர் சபையுடன் இணைந்து கொண்டதன் பின்னர் கவுஸ் மற்றும் பெர்னான்டோபுள்ளே ஆகியோரினால் பெருமளவு உதவி, வழிகாட்டல் மற்றும் நிர்வாகச் செயற்பாடுகளை முன்னெடுத்துச் செல்வதற்கு அதிகளவு ஆலோசனைகளும் கிடைக்கும் என எதிர்பார்க்கின்றது. இந்த நியமனங்கள் யூனியன் வங்கியின் பணிப்பாளர் சபையின் வலிமையை மேலும் அதிகரிக்கச் செய்துள்ளதுடன், வங்கியை வளர்ச்சியை நோக்கி முன்னெடுத்துச் செல்வதற்கு பெருமளவு பெறுமதியையும் வலிமையையும் சேர்க்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. முன்னாள் பிரதி தவிசாளரும்/சிரேஷ்ட சுயாதீன பணிப்பாளருமான பிரியந்த பெர்னான்டோ வங்கிக்காக ஆற்றியிருந்த பெறுமதி வாய்ந்த பங்களிப்புக்காக பணிப்பாளர் சபை நன்றியை தெரிவித்துக் கொள்கின்றது. 2020 நவம்பர் 1ஆம் திகதி முதல் வங்கியின் பணிப்பாளர் சபையிலிருந்து பெர்னான்டோ ஓய்வு பெற்றுள்ளார். இலங்கை மத்திய வங்கியின் நிர்ணயத்தின் பிரகாரம் ஒன்பது வருட காலம் இந்தப் பதவியில் சேவையாற்றியிருந்ததைத் தொடர்ந்து, அப்பதவியிலிருந்து ஓய்வு பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

சவால்கள் நிறைந்த 2020 இன் முதல் காலாண்டில் யூனியன் வங்கியின் நிதிப் பெறுபேறுகள் மந்தமான வளர்ச்சியை பதிவு

சவால்கள் நிறைந்த 2020 இன் முதல் காலாண்டில் யூனியன் வங்கியின் நிதிப் பெறுபேறுகள் மந்தமான வளர்ச்சியை பதிவு

பிரதான வங்கியியல் வளர்ச்சி மற்றும் இலாபகரத்தன்மை

2020 ஆம் ஆண்டின் முதல் காலாண்டை உறுதியான முறையில் ஆரம்பித்திருந்த போதிலும், உலகளாவிய ரீதியில் தொற்று பரவி வரும் நிலையில், யூனியன் வங்கியின் பிரதான வங்கியியல் வளர்ச்சி என்பது மார்ச் மாதத்தின் மையப்பகுதி முதல், முதல் காலாண்டின் இறுதி வரை சுருக்கமடைந்துள்ளது. இந்த சவால்கள் நிறைந்த சூழலில், மோசமடைந்துள்ள பொருளாதார சூழலில் சரணடைந்துள்ளதை அவதானிக்க முடிவதுடன், செலவு தணிப்பு மற்றும் இலாகா சேமிப்பு நடவடிக்கைகள் தொடர்பில் வங்கி தொடர்ந்தும் கவனம் செலுத்தி வருகின்றது.

வங்கியின் தேறிய வட்டி வருமானம் (NII), குறைந்த கடன் வளர்ச்சி மற்றும் இலங்கை மத்திய வங்கியினால் அறிமுகம் செய்யப்பட்ட குறைந்தளவு கடன் வழங்கல் வீதங்கள் காரணமாக பாதிக்கப்பட்டிருந்தது. இதன் பெறுபேறாக, வங்கியின் NII பெறுமதி, முன்னைய ஆண்டின் இதே காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில் 2 சதவீத வளர்ச்சியை பதிவு செய்து, ரூ. 1,031 மில்லியனாக பதிவாகியிருந்தது. வினைத்திறன் வாய்ந்த நிதி முகாமைத்துவ மூலோபாயங்கள் மற்றும் சொத்துகள் மற்றும் பொறுப்புகளின் உரிய காலப்பகுதியில் மீள் விலையிடல் காரணமாக, சவால்கள் நிறைந்த சூழலிலும் NII ஐ நிலையாக பேணிக் கொள்வதில் பங்களிப்பு செய்திருந்தது.

வங்கியின் கூலி மற்றும் தரகு வருமானம் முன்னைய ஆண்டின் இதே காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில் 8% இனால் குறைவடைந்து ரூ. 201 மில்லியனாக பதிவாகியிருந்தது. காலாண்டின் பிற்பகுதியில் COVID-19 காரணமாக அரசாங்கத்தினால் அறிவிக்கப்பட்ட கடன் மீதான நிவாரணம் வழங்கல் தொடர்பான அறிவுறுத்தல்கள் மற்றும் இறக்குமதி மற்றும் ஏற்றுமதி வியாபாரங்களில் வீழ்ச்சி ஏற்பட்டமையால் கடன் தொடர்பான தயாரிப்புகளில் செயற்பாடுகள் குறைவடைந்திருந்தமை போன்றன இதில் பங்களிப்பு வழங்கியிருந்தன. எவ்வாறாயினும், நோக்குடைய கையகப்படுத்தல் காரணமாக கடன் அட்டைகள் மீதான கூலி வருமதி அதிகரித்திருந்தது. இதன் காரணமாக, ஏனைய கூலி தொடர்பான வருமானத்தில் ஏற்பட்ட வீழ்ச்சி நிவர்த்தி செய்யப்பட்டிருந்தது.

வங்கியின் திறைசேரி குறிப்பிடத்தக்களவு பெறுபேறை பதிவு செய்திருந்தது. முன்னைய ஆண்டின் இதே காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில் இந்தப் பெறுமதி ரூ. 119 மில்லியனால் அதிகரித்திருந்தது. வட்டி வீதங்களில் சாதகமான அசைவுகளின் காரணமாக பதிவாகியிருந்த மூலதன வருமதிகள் இதில் பங்களிப்பு வழங்கியிருந்தன. வங்கியின் இதர தொழிற்படு வருமானம் குறிப்பிடத்தக்களவு வளர்ச்சியை பதிவு செய்திருந்தது. இக்காலப்பகுதிக்கான வங்கியின் தொழிற்படு வருமானம் ரூ. 1,498 மில்லியனாக பதிவாகியிருந்தது.

தொழிற்பாட்டு வினைத்திறனை மேம்படுத்துவதில் கவனம் செலுத்தியிருந்தமையால், வங்கியின் தொழிற்படு செலவுகள் முன்னைய ஆண்டின் இதே காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில் 5% அதிகரிப்பை மாத்திரம் பதிவு செய்து, ரூ. 1,001 மில்லியனாக பதிவாகியிருந்தது.

இக்காலப்பகுதியில் வங்கியின் முன்-வலுக்குறைப்பு இலாபம் ரூ. 498 மில்லியனாக பதிவாகியிருந்ததுடன், முன்னைய ஆண்டின் இதே காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில் இது 20% வளர்ச்சி என்பதும் குறிப்பிடத்தக்கது.

அறிக்கையிடப்பட்ட காலப்பகுதியில் நிலவிய அழுத்தம் நிறைந்த பொருளாதார சூழ்நிலை, மார்ச் மாதம் நடுப்பகுதியில் மேலும் மோசமடைந்து, நாடு முழுவதிலும் வியாபாரங்களின் பணப்பாய்ச்சல்களில் பாதிப்பை ஏற்படுத்தியிருந்தன. அதன் பிரகாரம், வலுக்குறைப்பு முன்னைய ஆண்டின் இதே காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில் 81% இனால் அதிகரித்து ரூ. 93 மில்லியனாக பதிவாகியிருந்தது. துறையின் பிரகாரம், வங்கியின் நிகர NPL விகிதம் 5.11% ஆக பதிவாகியிருந்தது. தேறிய NPL விகிதம் 3.37% ஆகே பதிவாகியிருந்தது.

தொழிற்படும் சூழலில் காணப்படும் சவால்கள் காரணமாக யூனியன் வங்கி மந்தமான வரிக்கு முந்திய இலாப பெறுமதியான ரூ. 405 மில்லியனை இந்த காலப்பகுதியில் பதிவு செய்திருந்தது. வரிக்கு பிந்திய இலாபம் ரூ. 180 மில்லியனாகும். வங்கியின் மொத்த பரிபூரண வருமானம் ரூ. 240 மில்லியனாகும்.

2020 மார்ச் 31ஆம் திகதி, வங்கியின் மொத்த சொத்துக்களின் பெறுமதி ரூ. 131,195 மில்லியனாகும்.  இக்காலப்பகுதியில் வங்கியின் கடன்கள் மற்றும் வருமதிகள் ரூ. 78,266 மில்லியனாக பதிவாகியிருந்தது. வைப்பு இருப்பு ரூ. 83,924 மில்லியனாகும். மொத்த சராசரி CASA பெறுமதி ரூ. 20,010 மில்லியனாக அதிகரித்திருந்தது. ஆரோக்கியமான CASA உட்பாய்ச்சலை தக்க வைத்துக் கொள்ளும் முயற்சிக்கு, தனிநபர், கூட்டாண்மை மற்றும் SME வங்கியியல் பிரிவுகளின் முறையான நோக்குடைய கையகப்படுத்தல் மூலோபாயங்கள் பங்களிப்பு வழங்கியிருந்தன.

உறுதியான மூலதன விகிதங்களை தொடர்ச்சியாக பேணுவது நிர்வாகத்தின் முன்னுரிமைச் செயற்பாடாக அமைந்திருக்கும். 2020 மார்ச் 31ஆம் திகதியன்று யூனியன் வங்கியின் மொத்த மூலதன போதுமை விகிதம் 15.81% ஆக பதிவாகியிருந்ததுடன், இது 15.81% ஆகும், இது ஒழுங்குபடுத்தல் தேவைப்பாடுகளை விட உயர்ந்த பெறுமதியாகும்.

இக்காலப்பகுதியில், வங்கி மற்றும் அதன் இரு துணை நிறுவனங்களான நஷனல் அசெட் மனேஜ்மன்ட் லிமிடெட் மற்றும் UB ஃபினான்ஸ் கம்பனி லிமிடெட் ஆகியவற்றைக் கொண்ட குழுமம், வரிக்கு பிந்திய இலாபமாக ரூ. 195 மில்லியனை பதிவு செய்திருந்தது. குழுமத்தின் மொத்த சொத்துக்கள் பெறுமதி ரூ. 139,206 மில்லியனாக பதிவாகியிருந்தது. இதில் 94% ஐ வங்கி பிரதிநிதித்துவப்படுத்தியிருந்தது. காலாண்டின் நிறைவில் குழுமம் ஆரோக்கியமான பிரதான மூலதன விகிதமான 15.50% ஐ பேணியிருந்தது.

செயற்பாட்டு வினைத்திறன்

Covid-19 தொற்று காரணமாக மார்ச் மாதம் மையப்பகுதி முதல் அமுலுக்கு வந்த செயற்பாட்டு சூழல் மாற்றங்கள் காரணமாக வங்கியின் தொழிற்பாட்டு வினைத்திறன் பாதிக்கப்பட்டிருந்தது. வாடிக்கையாளர்கள் எதிர்கொண்டிருந்த சவால்களை யூனியன் வங்கி இனங்கண்டு, இலங்கை மத்திய வங்கி அறிவித்திருந்த நிவாரண திட்டத்தை உடனடியாக அமுலாக்குவதற்கு நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தது. இதனூடாக வாடிக்கையாளர்க்கு மத்திய கால அடிப்படையில் எழக்கூடிய நிதசார் பாதிப்புகளிலிருந்து மீட்சியடைவதற்கு உதவியளித்திருந்தது. கூட்டாண்மை, SME மற்றும் தனிநபர் வங்கியியல் வாடிக்கையாளர்களை இலக்காகக் கொண்டு வங்கியின் நிவாரண பொதி வழங்கப்பட்டிருந்தது.

சவால்கள் காணப்பட்ட போதிலும், கூட்டாண்மை வங்கியியல் வியாபாரம் தொடர்ந்து தனது இலாகாவை தக்கவைத்திருந்தது. ஆனாலும், வட்டி வருமானம் மார்ச் மாத இறுதியில் சுருக்கமடைந்திருந்தது. சவால்கள் நிறைந்த பொருளாதார சூழலில் சிறிய மற்றும் நடுத்தரளவு வியாபாரங்கள் (SMEs) அதிகளவு பாதிக்கப்பட்டிருந்தன. இலங்கை மத்திய வங்கி அறிவித்திருந்த நிவாரண திட்டத்தை அறிமுகம் செய்திருந்ததுடன், மாற்றியமைத்துக் கொள்ளக்கூடிய தீர்வுகள் மற்றும் ஆலோசனை சேவைகள் போன்றவற்றினூடாக தமது கூட்டாண்மை மற்றும் SME வாடிக்கையாளர்களுக்கு யூனியன் வங்கி உதவிகளை வழங்கியிருந்தது. நிவாரண திட்டங்களின் போது, கடன் மீளச் செலுத்தும் சலுகைக் காலம் மற்றும் மீளச் செலுத்தும் காலத்தை நீடிப்பது போன்ற சலுகைகளை வங்கி வாடிக்கையாளர்களுக்கு வழங்கியிருந்தது. சுற்றுலாத்துறை, ஆடைத்தொழிற்துறை, பெருந்தோட்டங்கள், தகவல் தொழில்நுட்பம் மற்றும் அவற்றுடன் தொடர்புடைய சரக்கு கையாளல் சேவைகள் துறைகள் போன்ற நேரடி மற்றும் மறைமுக ஏற்றுமதி தொடர்புடைய வியாபாரங்கள் மற்றும் கடன் மீளச் செலுத்தலுக்கு தகைமை பெறும் அனைத்து தரப்பினருக்கும் யூனியன் வங்கி ஆறு (06) மாதங்கள் வரை வட்டி மற்றும் முதலுக்கு சலுகைக் காலத்தை வழங்கியிருந்தது; விவசாயம், உற்பத்தி, சேவைகள், நிர்மாணம் மற்றும் வியாபார துறைகள் போன்ற துறைகளைச் சேர்ந்த SMEகளுக்கு கிளைகள் மற்றும் உறவு பேண் முகாமையாளர்களினூடாக நிவாரணச் சலுகை வழங்கப்பட்டிருந்தது. SMEகள் மற்றும் சிறியளவிலான வியாபாரங்களுக்கு உடனடி நிவாரணத்தை பெற்றுக் கொடுக்கும் நோக்கில், காசோலை திரும்பல்களின் மீது கட்டண அறவீடு மற்றும் கொடுப்பனவுகள் நிறுத்துகை போன்றவற்றுக்கான கட்டணங்கள் 2020 செப்டெம்பர் 30 ஆம் திகதி வரையான காலப்பகுதிக்கு நீக்கப்பட்டுள்ளன. ரூ. 500,000 க்கு குறைவான வழங்கப்பட்ட காசோலைகளுக்கான சலுகைக் காலம் மே 15 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளன.

மீளாய்வுக்குட்பட்ட காலப்பகுதியில், சிறியளவிலான கடன்கள் மற்றும் முற்பணங்கள் போன்றன நடுத்தரளவு வளர்ச்சியை பதிவு செய்திருந்தன. வங்கியின் கடனட்டை பிரிவு, குறைந்த வேகத்தில் விரிவடைந்திருந்தது. இதில், பொருத்தமான சலுகைகள் மற்றும் தொடர்ச்சியான பெறுமதிகள் போன்றன பங்களிப்பு வழங்கியிருந்தன. தொற்றுப் பரவல் காரணமாக வாடிக்கையாளர்கள் எதிர்நோக்கியிருந்த சவால் நிறைந்த சூழலை கவனத்தில் கொண்டு, வங்கி பல்வேறு நிவாரண திட்டங்களை இலங்கை மத்திய வங்கியின் ஆலோசனையின் பிரகாரம் தொடர்ந்திருந்தது. குறிப்பாக, 1 மில்லியன் ரூபாய்க்கு குறைந்த சகல பிரத்தியேக கடன்களுக்கும் மூன்று மாத கால கடன் மீளச் செலுத்தும் சலுகை வழங்கப்பட்டிருந்தது. ரூ. 50,000 வரையான உள்நாட்டு கடன் அட்டை கொடுக்கல் வாங்கல்களுக்கான ஆகக்கூடிய வருடாந்த வட்டி வீதம் 15% ஆக குறைக்கப்பட்டிருந்தது. மீளச் செலுத்த வேண்டிய ஆகக்குறைந்த தொகை 4% இலிருந்து 2% ஆக குறைந்திருந்தது. 2020 செப்டெம்பர் 30 ஆம் திகதி வரையான காலம் தாழ்த்திய கொடுப்பனவு கட்டணங்கள் நீக்கப்பட்டுள்ளன.

நடைமுறை மற்றும் சேமிப்பு கணக்கு (CASA)மீதிகளை கட்டியெழுப்பும் தனது நோக்கத்தின் பிரகாரம், யூனியன் வங்கி தொடர்ந்து தனது தீர்வுகளை கட்டியெழுப்பியிருந்தது. சிறுவர் சேமிப்பு கணக்குகள், முதலீட்டு திட்டங்கள் மற்றும் நிறுவனசார் CASA கணக்குகள் போன்றவற்றை கிளைகள் மற்றும் பிரத்தியேகமான உறவு பேண் முகாமையாளர்களினூடாக ஊக்குவித்திருந்தது. மார்ச் 31 ஆம் திகதியன்று வங்கியின் CASA விகிதம் 29% ஆக அதிகரித்திருந்தது.

சுகாதார நெருக்கடி நிலவிய காலப்பகுதியில், வங்கி தனது டிஜிட்டல் நாளிகைகள் தொடர்பில் கவனம் செலுத்தியிருந்தது. குறிப்பாக ஒன்லைன் மற்றும் மொபைல் வங்கிச் சேவை வசதிகளை வாடிக்கையாளர்களுக்கு இலகுவாக அணுகுவதற்கு வசதி செய்திருந்தது. வங்கியின்  BizDirect கட்டமைப்பு தொடர்ந்தும் கூட்டாண்மை மற்றும் SME வாடிக்கையாளர்களுக்கு பெறுமதி சேர்த்திருந்ததுடன், செலவு வினைத்திறன் வாய்ந்த பண முகாமைத்துவ தன்னியக்க மூலமாக இயங்கி, வியாபார கொடுக்கல் வாங்கல்களை ஒரு பகுதியிலிருந்து நிர்வகிப்பதற்கு பங்களிப்பு செய்திருந்தது.

யூனியன் வங்கியின் பணிப்பாளரும் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான இந்திரஜித் விக்ரமசிங்க கருத்துத் தெரிவிக்கையில், ”நாம் தற்போது எதிர்பாராத ஒரு நிலையில் இயங்கிய வண்ணமுள்ளோம். எமது வாடிக்கையாளர்களுக்கு சிறந்த சேவைகளையும், நிதிசார் உதவிகளையும் பெற்றுக் கொடுக்க முயற்சிகளை மேற்கொண்ட வண்ணமுள்ளோம். எமது வாடிக்கையாளர்களின் பாதுகாப்பு என்பது எமக்கு மிகவும் முக்கியமானதாகும். எமது பணியாற்றும் சூழலில் நாம் உரிய ஏற்பாடுகளை செய்துள்ளோம். கடுமையான தூய்மை மற்றும் கிருமிநீக்கும் பணிகள் முன்னெடுக்கப்படுகின்றன. இலங்கை மத்திய வங்கியின் வழிகாட்டல்களின் பிரகாரம், வாடிக்கையாளர்களுக்கு சிறந்த நிதிசார் உதவிகளை பெற்றுக் கொடுப்பதற்கான சகல முயற்சிகளையும் மேற்கொண்ட வண்ணமுள்ளோம். சவால்கள் நிறைந்த 1ஆம் காலாண்டை வங்கி எதிர்கொண்டிருந்ததுடன், சுகாதார இடர் நிலை காரணமாக நிதிப் பெறுபேறுகள் பாதிப்படைந்திருந்தன. இந்த நிலை வங்கியியல் துறைக்கு பெரும் பாதிப்பாக அமைந்திருக்கும் என எதிர்பார்க்கப்படுவதுடன், வியாபார சமூகத்துக்கும் எதிர்வரும் மாதங்களில் தாக்கத்தை ஏற்படுத்துவதாக அமைந்திருக்கும். தனிநபர், SME மற்றும் கூட்டாண்மை வாடிக்கையாளர்களுக்கு நாம் தொடர்ச்சியாக பங்களிப்பு வழங்க எதிர்பார்ப்பதுடன், விசேட நிவாரண திட்டத்தை அடுத்து வரும் மாதங்களில் அறிமுகம் செய்து, உறுதியான திரள்வு முகாமைத்துவ நிலையை வங்கியினுள் பேண திட்டமிட்டுள்ளோம்.” என்றார்.

Covid-19 தாக்கத்திலிருந்து வாடிக்கையாளர்கள் விடுபடுவதற்கு யூனியன் வங்கி தொடர்ந்தும் உதவி

Covid-19 தாக்கத்திலிருந்து வாடிக்கையாளர்கள் விடுபடுவதற்கு யூனியன் வங்கி தொடர்ந்தும் உதவி

சமூகத்துக்கு சிறந்த எதிர்காலத்தை ஏற்படுத்திக் கொடுப்பது எனும் தனது கூட்டாண்மை கொள்கையின் பிரகாரம், Covid-19 தொற்றுப் பரவல் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள வாடிக்கையாளர்களுக்கு வலுவூட்டும் வகையிலான செயற்பாடுகளை யூனியன் வங்கி தொடர்ந்தும் முன்னெடுத்த வண்ணமுள்ளது.

மத்திய கால அடிப்படையில் பாதிக்கப்பட்ட சமூகத்தாரை நிதித் தாக்கங்களிலிருந்து மீள்வதற்காக 2020 மார்ச் மாதத்தில் இலங்கை மத்திய வங்கியினால் அறிவிக்கப்பட்ட நிதிசார் நிவாரண திட்டத்தை உடனடியாக அமுல்ப்படுத்துவதற்கு வங்கி நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தது. இதன் பிரகாரம் மார்ச்/ஏப்ரல் மாதங்களுக்கான கடன் அட்டை கொடுப்பனவுகளை மேற்கொள்வதற்கான கால எல்லையை நீடிப்பது தொடர்பில் அறிவித்தலை வெளியிட்டிருந்ததுடன், கடன்கள் மற்றும் குத்தகைகள் போன்ற பிரத்தியேக கடன் வசதிகளை மீளச் செலுத்தும் கால எல்லையையும் நீடித்திருந்தது.

வங்கியின் கூட்டாண்மை, சிறிய,நடுத்தரளவு தொழில்முயற்சியாண்மை மற்றும் சில்லறை வங்கியியல் வாடிக்கையாளர்களுக்காக வடிவமைக்கப்பட்ட இந்த நிதிசார் நிவாரண திட்டத்தில், 1 மில்லியன் ரூபாய்க்கு குறைந்த பிரத்தியேக கடன்களுக்கு மூன்று மாத காலம் வரை ஒத்தி வைக்கப்பட்ட கடன் மீளச் செலுத்தல் சலுகை வழங்கப்படுகின்றது. ரூ. 50000 வரையான கடன் அட்டை கொடுக்கல் வாங்கல்களுக்காக ஆகக்கூடிய பொருத்தமான வருடாந்த வட்டி வீதம் 15% ஆக குறைக்கப்பட்டிருந்தது. மீளச் செலுத்த வேண்டிய ஆகக்குறைந்த தொகையும் 4% இலிருந்து 2% ஆக குறைக்கப்பட்டுள்ளது. 2020 செப்டெம்பர் 30 ஆம் திகதி வரையான காலப்பகுதிக்கு கடன் அட்டை மற்றும் கடன்களுக்கான காலம் கடந்த கொடுப்பனவுக்காக அறவிடப்படும் கட்டணங்கள் நீக்கப்பட்டுள்ளன. மேலும், ஏப்ரல் மாதம் முழுவதிலும் Pickme.lk உடன் கைகோர்த்து வங்கியின் கடன் அட்டைதாரர்கள் கொள்வனவு செய்திருந்த அத்தியாவசிய பொருட்களுக்கு 20% சேமிப்பையும் யூனியன் வங்கி வழங்கியிருந்தது.

சுயதொழிலில் ஈடுபடுவோர், வெளிநாட்டு நாணயத்தில் வருமானமீட்டுவோர் (தனிநபர்கள் மற்றும் வியாபாரங்கள்), சிறிய மற்றும் நடுத்தரளவு வியாபாரங்கள் (விவசாயம், உற்பத்தி, சேவைகள், நிர்மாணம் மற்றும் வர்த்தக துறைகள்) மற்றும் சுற்றுலாத்துறை, நேரடி மற்றும் மறைமுகமாக ஏற்றுமதியுடன் தொடர்புடைய வியாபாரத்தில் ஈடுபடும் கூட்டாண்மை நிறுவனங்கள், ஆடைத் தொழிற்துறை நிறுவனங்கள், பெருந்தோட்ட நிறுவனங்கள், தகவல் தொழில்நுட்பம் மற்றும் அவற்றுடன் தொடர்புடைய சரக்கு கையாளல் சேவைகளை வழங்கும் நிறுவனங்கள் போன்ற துறைகளைச் சேர்ந்த நிறுவனங்களுக்கு தாம் பெற்றுக் கொண்ட கடன்களின் முதல் மற்றும் வட்டியை மீளச் செலுத்துவதற்கு 6 மாதங்கள் வரை சலுகைக் காலத்தை யூனியன் வங்கி வழங்கியுள்ளது. மேலும், சிறிய நடுத்தரளவு தொழில்முயற்சியாளர்கள், சிறியளவிலான வர்த்தகர்கள் போன்ற துறையினருக்கு உடனடியாக நிவாரணத்தை பெற்றுக் கொடுக்கும் வகையில், காசோலை மீளத்திரும்பலுக்கான கட்டணம் அறவீடு மற்றும் காசோலை கொடுப்பனவை நிறுத்தல் போன்றவற்றுக்கான கட்டணங்கள் அறவிடுவதை 2020 செப்டெம்பர் 30ஆம் திகதி வரை இடைநிறுத்தியுள்ளது. ரூ. 500000 க்கு குறைவான பெறுமதிகளுக்கு வழங்கப்பட்ட காசோலைகளுக்கான செல்லுபடியாகும் காலம் மே மாதம் 15ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது. இலங்கை மத்திய வங்கியின் வழிகாட்டல்களின் பிரகாரம், 2020 ஏப்ரல் 27ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் தங்க நகை அடகுச் சேவைக்கான வட்டியும் குறைக்கப்பட்டுள்ளது.

மேலும், தமது வியாபாரங்களை மீளமைத்துக் கொள்வதற்காக குறைந்த வட்டியில் தொழிற்படும் மூலதன கடனை பெற்றுக் கொள்ள எதிர்பார்க்கும் கூட்டாண்மை மற்றும் சிறிய நடுத்தரளவு தொழில்முயற்சியாண்மை வாடிக்கையாளர்களுக்கு உதவிகளை பெற்றுக் கொடுப்பதற்கு யூனியன் வங்கி முன்வந்துள்ளதுடன், இதனூடாக அந்நிறுவனங்களுக்கு உரிய காலப்பகுதியில் சம்பளங்களை வழங்குதல், பண அனுப்புகைகளை மேற்கொள்ளல் மற்றும் சர்வதேச வியாபார கொடுக்கல்வாங்கல்களை முன்னெடுத்தல் போன்றவற்றை மேற்கொள்ள உதவியாக அமைந்துள்ளது. சவால்கள் நிறைந்த இந்த பொருளாதார சூழலிலும் வியாபாரங்களுக்கும், வர்த்தக உரிமையாளர்களுக்கும் உதவிகளை பெற்றுக் கொடுக்க யூனியன் வங்கி தன்னை அர்ப்பணித்துள்ளது.

இந்த நிவாரண செயற்பாடுகள் தொடர்பில் யூனியன் வங்கியின் பணிப்பாளரும் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான இந்திரஜித் விக்ரமசிங்க கருத்துத் தெரிவிக்கையில், ”நாட்டில் வைரஸ் தொற்று பரவலை கட்டுப்படுத்துவதற்காக உள்நாட்டு அதிகார அமைப்புகளால் முன்னெடுக்கப்படும் பணிகள் தொடர்பில் நாம் மிகவும் திருப்தியடைகின்றோம். எமது பங்களிப்பை உறுதி செய்யும் வகையில், சம்பந்தப்பட்ட அதிகார அமைப்புகளால் வெளியிடப்பட்டுள்ள ஒழுங்குமுறைகளை பின்பற்றி செயலாற்றுவது மற்றும் Covid-19 இனால் பாதிக்கப்பட்டுள்ள வாடிக்கையாளர்களின் பொருளாதார ரீதியிலான மீட்சிக்கு பங்களிப்பு வழங்குகின்றோம். அத்தியாவசிய சேவை வழங்குநர் எனும் வகையில், இந்த உறுதியற்ற காலப்பகுதியில் எமது சேவைகளை தொடர்ச்சியாக வழங்குவதை நாம் உறுதி செய்துள்ளதுடன், எமது ஊழியர்கள் மற்றும் வாடிக்கையாளர்களின் பாதுகாப்புக்கு முக்கியத்துவமளித்து இந்த நடவடிக்கைகளை முன்னெடுக்கின்றோம். எமது வங்கிச் சூழலில் தகுந்த முற்காப்பு நடவடிக்கைகளை நாம் ஏற்பாடு செய்துள்ளோம். தூய்மை மற்றும் தொற்றுநீக்கல் செயற்பாடுகள் பின்பற்றப்படுகின்றன. எமது கிளை முகாமையாளர்கள் மற்றும் உறவு முகாமையாளர்கள் தொடர்ச்சியாக வாடிக்கையாளர்களுடன் தொடர்பை ஏற்படுத்தி, வழங்கப்படும் நிவாரண வசதிகள் மற்றும் வழங்கப்படும் சேவைகள் பற்றிய தெளிவுபடுத்தல்கள் குறித்த விளக்கங்களை வழங்குகின்றனர். நாம் ஒன்றிணைந்து இந்த சவாலை வெற்றி கொள்வோம் என்பதுடன், எமது வாடிக்கையாளர்களுக்கு இந்த சவால் நிறைந்த காலப்பகுதியில் உதவிகளை பெற்றுக் கொடுப்பதற்கு யூனியன் வங்கி அர்ப்பணிப்புடன் செயலாற்றும்.” என்றார்.

Covid-19 வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் வகையில் தற்போது நிலவும் ஊரடங்குசட்ட சூழலில், வாடிக்கையாளர்களுக்கு இடைவிடாத வங்கிச் சேவைகளை தமது கிளைகளினூடாக யூனியன் வங்கி வழங்குகின்றது. வங்கிக் கிளைகளிலும், வெளியிடப்பகுதிகளிலும் காணப்படும் ATM இயந்திரங்கள் மற்றும் LankaPay வலையமைப்பினூடாக இணைக்கப்பட்டுள்ள 4500 க்கும் அதிகமான ATM களினூடாக வாடிக்கையாளர்களக்கு அவசர நிலைகளின் போது பணத்தை பெற்றுக் கொள்ள முடியும். வங்கியின் ஒன்லைன் கட்டமைப்பினூடாகவும் மொபைல் வங்கிச் சேவை app ஊடாகவும் வாடிக்கையாளர்களுக்கு பெருமளவான கொடுக்கல் வாங்கல்களை பாதுகாப்பான முறையில் வீடுகளிலிருந்தவாறே முன்னெடுக்க முடியும்.

யூனியன் வங்கியின் இணையத்தளமான www.unionb.com மற்றும் 24 மணிநேர வாடிக்கையாளர் சேவை ஹொட்லைன் இலக்கமான 011 5800800 ஆகியன வாடிக்கையாளர்களுக்கு சேவைகளை வழங்க எவ்வேளையிலும் செயலில் இருக்கும். யூனியன் வங்கியின் பிரத்தியேகமான Covid-19 நிவாரண தகவல்கள் அடங்கிய பகுதி 2020 ஏப்ரல் 1ஆம் திகதி முதல் செயலிலுள்ளதுடன், நிதி நிவாரண சேவையை பெற்றுக் கொள்ள எதிர்பார்க்கும் வங்கியின் வாடிக்கையாளர்கள் தமது கிளைக்கு/சம்பந்தப்பட்ட முகாமையாளருக்கு மே மாதம் 15ஆம் திகதிக்கு முன்னதாக எழுத்து மூலமாக அறிவிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். https://www.unionb.com/covid-19-relief/ எனும் பக்கத்திலிருந்து மேலதிக தகவல்களை பெற்றுக் கொள்ள முடியும்.

யூனியன் வங்கி தனது 25 வருட பூர்த்தியை குறிக்கும் வகையில் கொழும்பு பங்குபரிவர்த்தனையின் ஆரம்ப மணியை ஒலித்து வியாபார நடவடிக்கைகளை ஆரம்பித்தது

யூனியன் வங்கி தனது 25 வருட பூர்த்தியை குறிக்கும் வகையில் கொழும்பு பங்குபரிவர்த்தனையின் ஆரம்ப மணியை ஒலித்து வியாபார நடவடிக்கைகளை ஆரம்பித்தது

படம் – இடமிருந்து: கொழும்பு பங்குப்பரிவர்த்தனை பிரதம நிறைவேற்று அதிகாரி ரஜீவ பண்டாரநாயக்க, யூனியன் வங்கி பணிப்பாளர் தில்ஷானி விஜயவர்தன, யூனியன் வங்கி பணிப்பாளர் சரத் விக்ரமநாயக்க, யூனியன் வங்கி பணிப்பாளரும் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான இந்திரஜித் விக்ரமசிங்க, யூனியன் வங்கியின் சட்ட பிரிவின் தலைமை அதிகாரியும் கம்பனி செயலாளருமான இனோகா ஜயவர்தன, யூனியன் வங்கியின் மொத்த வங்கியின் உப தலைவர் ஹிரந்தி டி சில்வா மற்றும் கொழும்பு பங்குப்பரிவர்த்தனையின் பணிப்பாளர் தில்ஷான் வீரசேகர ஆகியோர் காணப்படுகின்றனர்.

 

கொழும்பு பங்குப்பரிவர்த்தனையின் வியாபார கொடுக்கல் வாங்கல்கள் ஆரம்பிக்கும் முன்னதாக ஒலிக்கப்படும் மணியை, யூனியன் வங்கி ஒலிக்கச் செய்திருந்தது. தனது 25 வருட பூர்த்தியை குறிக்கும் வகையில் யூனியன் வங்கி ஏற்பாடு செய்திருந்த பல்வேறு செயற்பாடுகளில் ஒரு அங்கமாக இந்த நடவடிக்கையை மேற்கொண்டிருந்தது.

கொழும்பு பங்குப் பரிவர்த்தனையின் கொடுக்கல் வாங்கல்கள் ஆரம்ப நிகழ்வு, பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களுக்கு தமது மைல்கல் சாதனைகளை குறிக்கும் வகையில் அமைந்திருப்பதுடன், வியாபார சமூகம், பொருளாதாரம் மற்றும் சமூகம் ஆகியவற்றின் அபிவிருத்திக்கு முக்கியத்துவம் வாய்ந்த செயற்பாடுகளை குறிக்கும் வகையிலும் அமைந்துள்ளது.

கொழும்பு பங்குப்பரிவர்த்தனையில் வங்கியை பட்டியலிடப்பட்டுள்ளதன் முக்கியத்துவம் பற்றி யூனியன் வங்கியின் பணிப்பாளரும் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான இந்திரஜித் விக்ரமசிங்க குறிப்பிடுகையில், 2011 ஆம் ஆண்டில் கொழும்பு பங்குப்பரிவர்த்தனையில் யூனியன் வங்கி பட்டியலிடப்பட்டமை, வங்கிக்கு பல்வேறு வழிகளில் அனுகூலங்களை பெற்றுக் கொடுத்திருந்தது என்றார்.

”யூனியன் வங்கியின் ஆரம்ப பொது பங்கு வழங்கலுக்கு 2011 ஆம் ஆண்டில் சாதனை மிகுந்த வரவேற்பு கிடைத்தது. வங்கியின் 25 வருட கால வரலாற்றில் முக்கியத்துவம் வாய்ந்த திருப்பு முனையாக அமைந்திருந்தது. வங்கியின் பரந்தளவு பொது உரிமையாண்மையுடன், கொழும்பு பங்குப்பரிவர்த்தனையில் பட்டியலிடப்பட்டுள்ளமையானது, வங்கிக்கு சிறந்த தோற்றத்தையும், வர்த்தக நாம பெறுமதியையும் சேர்த்திருந்ததுடன், வாடிக்கையாளர் இருப்பை விஸ்தரித்துக் கொள்ளவும் அதனூடாக வியாபார செயற்பாடுகளை வளர்ச்சி பெறச் செய்யவும் ஏதுவாக அமைந்திருந்தது. எம்மீது நம்பிக்கை கொண்டுள்ள எமது பங்காளர்களுக்கு நாம் நன்றி தெரிவிப்பதுடன், எமது வளர்ச்சிக்கு இது முக்கியமானதாக அமைந்திருந்தது. கொழும்பு பங்குப் பரிவர்த்தனையுடன் அண்மைக்காலங்களில் வங்கி உறுதியான உறவை பேணி வருவதுடன், மூலதனச் சந்தைக்கு யூனியன் வங்கி வழங்கும் பங்களிப்பு தொடர்பில் நாம் பெருமை கொள்கின்றோம். நாட்டுக்கு நீண்ட கால உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு மூலதனத்தை பெற்றுக் கொடுப்பதில் நாம் பங்களிப்பு வழங்குகின்றோம். இதில் முக்கியத்துவம் வாய்ந்த TPG கெப்பிட்டலின் முதலீடும் அடங்கியுள்ளது. 2018 ஆம் ஆண்டில் S&P SL 20சுட்டெண்ணில் யூனியன் வங்கி உள்வாங்கப்பட்ட போது, அதன் நிலை மேலும் உறுதியடைந்திருந்தது. இந்த சுட்டியில் பட்டியலிடப்பட்ட சில வங்கிகளில் ஒன்றாக இது அமைந்திருந்தது.” என்றார்.

மேலும் குறிப்பிடுகையில், யூனியன் வங்க குழுமத்தின் அங்கமான நஷனல் அஸெட் மனேஜ்மன்ட் லிமிடெட் (NAMAL), நாட்டின் பங்குச் சந்தையை அபிவிருத்தி செய்வதில் முக்கிய பங்காற்றி வருகின்றது. குறிப்பாக பட்டியலிடப்பட்ட முதலாவது நம்பிக்கை அலகு நிறுவனமாக திகழ்வதுடன், பங்கு மற்றும் நிலையான வருமானமீட்டும் சந்தையில் முதலீடு செய்வதில் சிறந்த பெறுபேறுகளை பேணி வருகின்றது என்றார்.

தேசத்துக்கு இரண்டரை தசாப்த காலமாக வழங்கும் சேவையினூடாக, நிறுவனங்கள், சிறிய, நடுத்தரளவு தொழில் முயற்சிகள் மற்றும் இலங்கையர்களுக்கு 2020 ஆம் ஆண்டிலும் எதிர்காலத்திலும் மேம்படுத்தப்பட்ட சேவைகளை வழங்க தன்னை அர்ப்பணித்துள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.

இந்த நிகழ்வு தொடர்பில் கொழும்பு பங்குப்பரிவர்த்தனையின் பிரதம நிறைவேற்று அதிகாரி ரஜீவ பண்டாரநாயக்க கருத்துத் தெரிவிக்கையில், 1995 இல் ஸ்தாபிக்கப்பட்டது முதல் வங்கி சிறந்த முன்னேற்றத்தை பதிவு செய்துள்ளது, இந்த மைல்கல் சாதனையை கொண்டாடும் வகையில் கொழும்பு பங்குப்பரிவர்த்தனையின் வியாபார கொடுக்கல் வாங்கல்கலை உத்தியோகபூர்வமாக மணி ஒலித்து ஆரம்பித்தமைக்காக நிர்வாகத்துக்கு நன்றி தெரிவிக்கின்றேன். வங்கியியல் துறையில் தொடர்ச்சியாக ஆற்றி வரும் பங்களிப்பு மற்றும் எய்திய சாதனைகள் பெரிதும் பாராட்டத்தக்கன, வங்கியின் எதிர்கால வளர்ச்சிக்கு அதிகளவு வாய்ப்புகள் காணப்படுகின்றன.” என்றார்.

2020 ஆம் ஆண்டில் யூனியன் வங்கி தனது 25 வருட பூர்த்தியை கொண்டாடுகின்றது. 1995 ஆம் ஆண்டு ஸ்தாபிக்கப்பட்டது முதல், வெற்றிகரமாக முன்னெடுத்து வரும் பயணத்தை இது குறிக்கின்றது.

நிறுவனத்தின் நீண்ட வரலாற்றில், முன்னைய ஆண்டுகளில் பல்வேறு கட்ட வளர்ச்சியை வங்கி பதிவு செய்துள்ளது. இவற்றில் சவால்கள், வாய்ப்புகள் மற்றும் வளர்ச்சிகள் போன்றன அடங்கியுள்ளதுடன், இவற்றை எய்துவதற்கு வாடிக்கையாளர்கள், பங்காளர்கள், ஊழியர்கள் மற்றும் இதர பங்காளர்கள் போன்றவர்கள் முக்கிய பங்களிப்பை வழங்கியிருந்தனர்.

உலகின் மாபெரும் முதலீட்டு நிறுவனங்களில் ஒன்றான TPG இனால் 2014 ஆம் ஆண்டில் யூனியன் வங்கிக்கு 117 மில்லியன் அமெரிக்க டொலர்கள் முதலீடு செய்யப்பட்டு, 70 சதவீதமான பங்குகள் கொள்வனவு செய்யப்பட்டிருந்தது. இது வங்கிக்கும், நாட்டின் வங்கித் துறைக்கும் மிகவும் முக்கியமான தருணமாக அமைந்திருந்தது. இலங்கையில் மேற்கொள்ளப்பட்ட மாபெரும் வெளிநாட்டு நேரடி முதலீடுகளில் ஒன்றாக இது அமைந்திருந்தது. யூனியன் வங்கியின் வளர்ச்சியில் புதிய அத்தியாயமாக இது அமைந்திருந்தது. உறுதியான அடித்தளத்துடன், நிதி உறுதிப்பாட்டுடன் யூனியன் வங்கி முழுச் சேவைகளை வழங்கி வருகின்றது. இலங்கையின் தனிநபர்கள், வியாபாரங்கள் மற்றும் தொழில் முயற்சியாளர்களுக்கு பரிபூரண நிதிச் சேவைகளை வழங்குகின்றது.

மூலதன பாய்ச்சலை தொடர்ந்து, வங்கி வளர்ச்சியை நோக்கிய பயணத்தை தன்னை ஈடுபடுத்தியுள்ளது. தீர்வுகள், மனித மூலதனம், தொழில்நுட்ப மேம்படுத்தல்கள் மற்றும் சேவை வழங்கல் கட்டமைப்புகள் போன்றவற்றில் மேம்படுத்தல்களை ஏற்படுத்தி, அதனூடாக வாடிக்கையாளர்களுக்கு மாறுபட்ட வங்கியியல் அனுபவத்தை வங்கி வழங்குகின்றது. தனது 67 கிளை வலையமைப்பு, பரந்த ATM வலையமைப்பு மற்றும் டிஜிட்டல் வங்கித் தீர்வுகளினூடாக தனது சேவைகளை மேம்படுத்தியுள்ளது. செயற்பாடுகளை மூலோபாய அடிப்படையில் மீளக்கட்டமைத்திருந்ததனூடாக, வங்கி அண்மைய ஆண்டுகளில் சிறந்த நிதிப் பெறுபேறுகளையும் பதிவு செய்திருந்தது. 2019 ஆம் ஆண்டுக்கான நிதிப் பெறுபேறுகளில் இது மேலும் உறுதி செய்யப்பட்டிருந்தது.

தனது 25 ஆம் ஆண்டிலும், எதிர்காலத்திலும், யூனியன் வங்கி தனது சில்லறை, கூட்டாண்மை, சிறிய நடுத்தரளவு தொழில் முயற்சி மற்றும் திறைசேரி வியாபாரகளை மேலும் வலுப்படுத்துவதுடன், நிலைபேறான வளர்ச்சியை பதிவு செய்வதற்காக தெளிவான போட்டிகர அனுகூலங்களை பயன்படுத்தும். கூட்டாண்மை நிறுவனங்கள் மற்றும் சிறிய நடுத்தரளவு தொழில் முயற்சிகளின் வளர்ச்சிக்காக கைகோர்ப்பதில் வங்கி தொடர்ந்தும் தன்னை அர்ப்பணித்திருக்கும். சிறிய, நடுத்தரளவு தொழில்முயற்சியாண்மை துறை என்பது, பொருளாதாரத்தின் வளர்ச்சியில் முக்கிய பங்காற்றும் துறையாக இனங்காணப்பட்டுள்ளது. வங்கியின் எதிர்கால நிகழ்ச்சிநிரலில் இந்த துறை முக்கிய அங்கத்தை கொண்டுள்ளது. பரந்தளவு சென்றடைவு மற்றும் பரிபூரண தீர்வுகளுடனான வாடிக்கையாளர் வங்கியியல் செயற்பாடுகள் வேகமாக வளர்ச்சியடையும் என எதிர்பார்க்கப்படுகின்றது. டிஜிட்டல் மயப்படுத்தப்பட்ட தீர்வுகளை பெற்றுக் கொடுப்பதில் அதிகளவு கவனம் செலுத்தப்படும்.

”யூனியன் வங்கியின் எதிர்காலம் விறுவிறுப்பானதாக அமைந்துள்ளதுடன், வங்கியின் வளர்ச்சியில் சகல பங்காளர்களையும் கைகோர்த்து அனுகூலம் பெற வருமாறு அழைக்கின்றோம்.” என விக்ரமசிங்க நிகழ்வில் இறுதியாக குறிப்பிட்டார்.

யூனியன் வங்கியின் புதிய மற்றும் மேம்படுத்தப்பட்ட BizDirect+ ஊடாக திரள்வு முகாமைத்துவத்திற்கு நிபுணத்துவ சாதனங்கள் வழங்கல்

யூனியன் வங்கியின் புதிய மற்றும் மேம்படுத்தப்பட்ட BizDirect+ ஊடாக திரள்வு முகாமைத்துவத்திற்கு நிபுணத்துவ சாதனங்கள் வழங்கல்

 

யூனியன் வங்கி தனது BizDirect+ ஐ மீள அறிமுகம் செய்துள்ளதாக அறிவித்துள்ளது. வாடிக்கையாளர்களுக்கு மேம்படுத்திய வினைத்திறன் மற்றும் சௌகரியத்தை பெற்றுக் கொடுக்கக்கூடிய புதிய உள்ளம்சங்களுடன் மேம்படுத்தப்பட்டு இந்த BizDirect+ அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

BizDirect என்பது யூனியன் வங்கி வழங்கும் புரட்சிகரமான வங்கியியல் கொடுக்கல் வாங்கல் கட்டமைப்பாகும். வியாபாரங்களுக்கு பணப்பாய்ச்சல் முகாமைத்துவ தீர்வுகளை பெற்றுக் கொடுக்கும் வகையில் அமைந்துள்ளது. 2014 ஆம் ஆண்டில், யூனியன் வங்கியினால் இலங்கையின் முதலாவது தன்னியக்கமான பணப்பாய்ச்சல் முகாமைத்துவ கட்டமைப்பாக அறிமுகம் செய்யப்பட்டிருந்தது. ஐந்து வருட காலப்பகுதியில், 2020 பெப்ரவரியில், மேம்படுத்திய BizDirect+ கட்டமைப்பை வங்கி பெருமையுடன் மீள அறிமுகம் செய்துள்ளது. இதனூடாக, கூட்டாண்மை மற்றும் SME வியாபாரங்களுக்கு அடுத்த கட்ட வெற்றிகரமான செயற்பாட்டை முன்னெடுக்க உதவியாக அமைந்திருக்கும்.

மேம்படுத்தப்பட்ட BizDirect கட்டமைப்பு தொடர்பில் கொடுக்கல் வாங்கல் வங்கியியல் மற்றும் சிறிய, நடுத்தரளவு வியாபாரங்களின் உப தலைவர் அசங்க ரன்ஹொட்டி கருத்துத் தெரிவிக்கையில், ”வெற்றிகரமான வியாபாரத்தில் சிறந்த பண முகாமைத்துவம் என்பது உயிர்நாடியாக அமைந்துள்ளது. தொழில்நுட்ப ரீதியில் உயர்ந்த, தன்னியக்கமான பண முகாமைத்துவ கட்டமைப்பினூடாக, வியாபாரங்களுக்கு தெளிவான வகையில் திரள்வு நிலையை நிர்வகித்துக் கொள்ளக்கூடியதாக இருக்கும். சிறியளவு வியாபாரம் அல்லது பாரியளவிலான கூட்டாண்மை நிறுவனங்கள் என அனைத்துக்கும் இது முக்கியமானதாக அமைந்திருக்கும். பணம் என்பது இலங்கையில் அதிகளவு முக்கியத்துவம் வாய்ந்த நிலையில் காணப்படுவதால், வினைத்திறன் வாய்ந்த வகையில் பண முகாமைத்துவம் என்பது பெருமளவு பயன்படுத்தப்படுவதில்லை. யூனியன் வங்கியின் புரட்சிகரமான பண முகாமைத்துவ கட்டமைப்பான BizDirect ஊடாக, வியாபார உரிமையாளர்களுக்கு பரிபூரண திரள்வு முகாமைத்துவ கட்டுபாட்டை வழங்குகின்றது. தமது பணப்பாய்ச்சலின் பிரகாரம் உரிய காலத்தில் முக்கியத்துவம் வாய்ந்த முகாமைத்துவ தீர்மானங்களை மேற்கொள்ளக்கூடியதாக அமைந்திருக்கும்.” என்றார்.

தன்னியக்கமான BizDirect பண முகாமைத்துவ கட்டமைப்பினூடாக, சேகரிப்புகள் தொடர்பான செயற்பாடுகள், கொடுப்பனவுகள், திரள்வு முகாமைத்துவம், அறிக்கையிடல் மற்றும் சீராக்கம் போன்றவற்றை பேணக்கூடியதாக உள்ளது. ஒவ்வொரு கட்டத்திலும் அசல்நேர தரவுகள் கிடைப்பதுடன், பாவனையாளர்களுக்கு உரிய நேரத்தில் பணத்தை திரட்டிக் கொள்ள முடிவதுடன், தமது பண மீதிகளுக்கேற்ப முதலீட்டு வாய்ப்புகளை மேம்படுத்திக் கொள்ளக்கூடியதாக இருக்கும். தன்னியக்கமயமாக்கல், ஒன்லைன் ஆவணப்படுத்தல் மற்றும் அசல் நேர தரவு அறிக்கையிடல் போன்றவற்றினூடாக, மோசடிகள் இடம்பெறக்கூடிய வாய்ப்புகள் குறைக்கப்படுகின்றன. இந்த கட்டமைப்பில் பாதுகாப்புக்கான உயிரியல் உறுதிப்படுத்தல் அடங்கலாக பிந்திய பாதுகாப்பு மேம்படுத்தல்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன.

இந்த கட்டமைப்பு இணைய அடிப்படையினாலானதாக அமைந்திருப்பதுடன், host-to-host (H2H) அடிப்படையில் ஏற்கனவே காணப்படும் கணக்குகளுடன் ஒன்றிணைப்பதாக அமைந்துள்ளது. பயன்படுத்த மிகவும் இலகுவானதான செயன்முறையைக் கொண்டுள்ளது. யூனியன் வங்கியின் அர்ப்பணிப்பான அணியினால் அவசியமான பயிற்சிகள் மற்றும் உதவிகள் வழங்கப்படும். பண முகாமைத்துவ கட்டமைப்பு தொடர்பான தமது நிபுணத்துவ அறிவை பகிர்ந்து கொள்வார்கள். சர்வதேச ரீதியில் காணப்படும் தீர்வுகளுடன் ஒப்பிடுகையில் BizDirect ஊடாக பரந்தளவு தீர்வுகள் சகாயமான விலையில் வழங்கப்படுகின்றன.

சிறிய, நடுத்தரளவு வியாபாரங்கள் மற்றும் கூட்டாண்மை நிறுவனங்களுக்கு பயன்படுத்தக்கூடிய வகையில் யூனியன் வங்கியின் BizDirect+ அமைந்துள்ளது. சகல அளவிலான வியாபாரங்களுக்கும் வேகமான மற்றும் துல்லியமான தீர்மானங்களை மேற்கொள்ள உதவியாக அமைந்துள்ளது. பயன்படுத்த இலகுவான கட்டமைப்பினூடாக வியாபாரத்துக்கு பணத்தை உரிய காலத்தில் திரட்டிக் கொள்ள உதவிகள் வழங்கப்படுவதுடன், நீண்ட காலம் தக்க வைத்துக் கொள்ளவும் உதவுகின்றது. மேலும், விநியோகத்தர்களுடன் உரிய காலப்பகுதியில் கொடுப்பனவுகளை மேற்கொள்வதனூடாக சிறந்த உறவை பேண உதவியாக அமைந்துள்ளது.

இந்த கட்டமைப்பினூடாக, ஒன்லைனில் அனுமதிகளை பெற்றுக் கொள்ள முடியும் என்பதுடன், கையடக்க தொலைபேசியிலும் அனுமதிகளை பெறக்கூடியதாக இருக்கும். காசோலை ஒன்றை கைகளால் வரைவதற்கான தேவை முழுமையாக நீக்கப்படுகின்றது. தன்னியக்கமயமாக்கலினூடாக, ஒன்லைனில் உடனடியாக ஆவணப்படுத்தலுக்கான ஆவணங்களை பதிவேற்ற முடியும். இதனூடாக குறித்த ஆவணங்களை பிரிதொரு வகையில் அனுப்புவதற்கான தேவை இல்லாமல் செய்யப்படுவதுடன், காலதாமதங்களும் தவிர்க்கப்படுகின்றன. காசோலைகளை சுயமாக வங்கியினால் அச்சிட முடியும் என்பதுடன், BizDirect பாவனையாளருக்கு அல்லது அவர்களின் வாடிக்கையாளருக்கு நேரடியாக அனுப்பி வைக்கப்படும். இலங்கை மத்திய வங்கியின் அங்கீகாரம் பெற்ற சேகரிப்பு சேவை வழங்குநரூடாக, பணம் மற்றும் காசோலைகளை வியாபாரங்களிலிருந்து நேரடியாக திரட்டிக் கொள்ள முடியும் என்பதுடன் வியாபாரத்துக்கு தேவையான போது பணத்தை மீள பெற்றுக் கொள்ளக்கூடியதாக இருக்கும். எந்தவொரு சந்தர்ப்பத்திலும், நிறுவனத்தின் பண நிலைப்பாட்டை பாவனையாளர்கள் அறிந்து கொள்ளக்கூடிய வகையில், சீராக்கங்களும் தன்னியக்கமாக இடம்பெறும்.

மாற்றியமைக்கப்பட்ட, தன்னியக்கமயப்படுத்தப்பட்ட பண முகாமைத்துவ தீர்வினூடாக, கூட்டாண்மை வியாபாரங்களுக்கு தமது தொழிற்படு மூலதன சுழற்சி முகாமைத்துவ ஆற்றலை மேம்படுத்திக் கொள்ளக்கூடியதாக இருக்கும். திரள்வு முகாமைத்துவம் தொடர்பான தெளிவான தோற்றப்பாடு மூலமாக, வியாபாரங்களின் பண நிலைமைகள் தொடர்பில் பரிபூரண தோற்றப்பாடு வழங்கப்படுவதுடன், முதலீட்டு வாய்ப்புகளை மேம்படுத்திக் கொள்ளக்கூடியதாக இருக்கும். BizDirect ஊடாக, சிறிய, நடுத்தரளவு வியாபாரங்களை எதிர்காலத்தில் பாரிய நிறுவனங்களாக வளர்ச்சியடைவதற்கு உதவிகள் வழங்கப்படும்.

”பல சிறு வியாபாரங்கள் போதியளவு பதிவுகளை பேணத் தவறுகின்றன. இந்நிறுவனங்களின் வெற்றிகரமான செயற்பாட்டுக்கு இது ஒரு தடையாக அமைந்துள்ளது. யூனியன் வங்கியின் BizDirect+ஐ பயன்படுத்துவதனூடாக, சிறிய மற்றும் நடுத்தரளவு வியாபாரங்களுக்கு கட்டமைக்கப்பட்ட ரீதியில் தமது செயற்பாடுகளின் போது எந்த வகையான செயற்பாடுகள் இடம்பெறுகின்றன என்பது தொடர்பில் கண்காணிக்கக்கூடியதாக இருக்கும். கொடுப்பனவுகள் மற்றும் சேகரிப்புகள் போன்ற பல செயற்பாடுகளை தன்னியக்கமயமாக்கக்கூடியதாக இருக்கும் என்பதுடன், தமது வியாபாரத்தில் கவனம் செலுத்தக்கூடியதாகவும் இருக்கும். BizDirect இன் இந்த சகல பெறுமதி சேர்ப்புகளும், பெறுமதி வாய்ந்த பல நிர்வாக நேரத்தை மீதப்படுத்துவதாக அமைந்திருக்கும், இந்த காலப்பகுதியை வியாபார வளர்ச்சிக்காக கவனம் செலுத்த முடியும். சர்வதேச நியமங்களுக்கமைவான இந்த பரந்தளவு செயற்பாடுகள் சகாயமான விலையில் வழங்கப்படுவதுடன், சகல அளவிலான வியாபாரங்களுக்கும் அணுகக்கூடியதாக இருக்கும்.” என ரன்ஹொட்டி மேலும் தெரிவித்தார்.

கூட்டாண்மை மற்றும் சிறிய, நடுத்தரளவு, வங்கியியல் துறை என்பது யூனியன் வங்கியின் செயற்பாடுகளில் 50 சதவீதத்துக்கும் அதிகமான பங்கை கொண்டுள்ளன. இந்த முக்கியத்துவம் வாய்ந்த பிரிவுக்கு பெறுமதி சேர்க்கப்பட்ட சேவைகளை பெற்றுக் கொடுப்பதற்கான பரந்தளவு முதலீடுகளை வங்கி மேற்கொள்கின்றது. அதன் BizDirect கட்டமைப்பை மேம்படுத்துவதற்கு வங்கி அண்மையில் மேற்கொண்டிருந்த முதலீடு என்பது இதற்கான தெளிவான எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது. தேசிய ரீதியில் முக்கியத்துவம் வாய்ந்த துறையாக இனங்காணப்பட்டுள்ள சிறிய, நடுத்தரளவு வியாபாரத்துறையின் வளர்ச்சியில் பங்களிப்பு செய்யும் வியாபாரங்களின் முன்னேற்றத்துக்காக வங்கி தொடர்ந்தும் தனது அர்ப்பணிப்பை வெளிப்படுத்தியுள்ளது. வங்கியினால் முன்னெடுக்கப்படும் மூலோபாய ரீதியில் வடிவமைக்கப்பட்ட, மாற்றியமைத்துக் கொள்ளக்கூடிய தீர்வுகள், நீடிக்கப்பட்ட அணுகல் பகுதிகள் மற்றும் தொழில்நுட்ப ரீதியில் செயற்படுத்தப்பட்ட சௌகரியங்கள் போன்றன வாடிக்கையாளர்களுக்கு நேர்த்தியான வங்கியியல் அனுபவத்தை பெற்றுக் கொடுக்கும் வகையில் வகையில் அமைந்துள்ளன. பரந்தளவு வாடிக்கையாளர்களின் பிரதான இனங்காணப்பட்ட பகுதிகளில், வங்கி தொடர்ந்தும் தயாரிப்பு மற்றும் சேவை மேம்படுத்தல்களில் முதலீடுகளை மேற்கொள்வதுடன், தமது பெறுமதி சேர் வாடிக்கையாளர்களுக்கு வங்கியியல் சௌகரியத்தையும் வழங்குகின்றது.

தேசத்துக்கு சேவைகளை வழங்குவதில் 25 வருட கால பூர்த்தியை கொண்டாடும் யூனியன் வங்கி

தேசத்துக்கு சேவைகளை வழங்குவதில் 25 வருட கால பூர்த்தியை கொண்டாடும் யூனியன் வங்கி

இரவு பிரித் ஓதல் மற்றும் இதர சமய அனுஷ்டானங்களுடன் கொண்டாட்டங்களை ஆரம்பித்துள்ளது

 

Photo captions

  • படம் – யூனியன் வங்கியின் 25 வருட பூர்த்தியை குறித்து ஏற்பாடு செய்யப்பட்டிருந்த சமய வழிபாடுகள் நிகழ்வின் சில காட்சிகளை காணலாம்.

யூனியன் வங்கி இலங்கையில் தனது வங்கிச் சேவைகளை முன்னெடுப்பதில் 25 வருட கால பூர்த்தியை கொண்டாடுகின்றது. இதனைக் குறிக்கும் வகையில் தொடர்ச்சியாக பல்வேறு நிகழ்வுகளை முன்னெடுக்க யூனியன் வங்கி முன்வந்துள்ளது.
1995 ஆம் ஆண்டில் 8ஆவது உள்நாட்டு வங்கியாக யூனியன் வங்கி நிறுவப்பட்டது. இதனைத் தொடர்ந்து பல்வேறு கட்ட வளர்ச்சி மற்றும் சிறப்புகளை பதிவு செய்துள்ளது. நடைமுறை நிலைமையை சவால்களுக்கு உட்படுத்தல் மற்றும் புதிய முன்னுதாரணங்களை ஏற்படுத்தும் நோக்குடன் இலங்கையின் நிதிச் சேவைகள் துறையில் யூனியன் வங்கி பிரவேசித்திருந்தது. பெருமளவு வணிக வங்கிகளுடன், சர்வதேச ரீதியில் பிரசன்னத்தைக் கொண்டிருந்த சூழலில் யூனியன் வங்கி பிரவேசித்த மற்றும் செயலாற்றிய சூழ்நிலை சவால்கள் நிறைந்ததாக காணப்பட்டது. இதன் காரணமாக யூனியன் வங்கி தனக்கென பிரத்தியேகமான அடையாளத்தை உருவாக்கியிருந்தது.

இதன் காரணமாக யூனியன் வங்கி சிறிய, நடுத்தரளவு தொழில்முயற்சியாண்மை துறையில் வாய்ப்புகளை இனங்கண்டிருந்தது. இந்த துறை பெருமளவில் வங்கிகளின் ஈடுபாட்டை கொண்டிருக்காததுடன், தேசிய அபிவிருத்தியில் பிரதான பங்கை வகிக்கும் துறையாகவும் அமைந்திருந்தது. சிறிய மற்றும் நடுத்தரளவு வியாபாரங்களின் தெரிவுக்குரிய வங்கியாக அர்ப்பணிப்புடனான சேவையை வழங்கி வந்துள்ளதுடன், தேசிய அபிவிருத்தியுடன் ஒன்றிணைந்த நிகழ்ச்சி நிரலுக்கமைய, சிறிய மற்றும் நடுத்தரளவு வியாபாரங்களின் நிலைபேறான வளர்ச்சிக்கும் பங்களிப்பு வழங்கியுள்ளது. துறையின் முக்கியத்துவத்தை உணர்ந்து, தொழில்முயற்சியாண்மை வளர்ச்சியில் பெருமளவு பங்களிப்பை யூனியன் வங்கி வழங்கியுள்ளது. இதனூடாக, இளம் தலைமுறையினருக்கு முன்மாதிரியாக திகழும் தொழில்முயற்சி ஜாம்பவான்களை உருவாக்கியுள்ளதுடன், சமூகங்களுக்கு தொழில் வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுத்து, அவற்றின் வாழ்க்கைத்தரத்தை மேம்படுத்தவும் பங்களிப்பு வழங்கியுள்ளதுடன், குறைந்தளவு உதவிகளை பெறும் துறைகளை ஊக்குவித்து, வலுச்சேர்க்கும் நடவடிக்கைகளையும் முன்னெடுத்துள்ளது. இவ்வாறான செயற்பாடுகளினூடாக, நாட்டின் சமூக மற்றும் பொருளாதார அபிவிருத்திக்கு பெருமளவு பங்காற்றிய வண்ணமுள்ளது.

உலகின் பாரிய முதலீட்டு நிறுவனங்களில் ஒன்றாக அமைந்துள்ள TPG, 117 மில்லியன் அமெரிக்க டொலர்களை யூனியன் வங்கியில் 2014 ஆம் ஆண்டில் முதலீடு செய்திருந்தது. இதனூடாக வங்கியின் மொத்த பங்குகளில் 70% ஐ கொள்வனவு செய்திருந்தது. இலங்கையின் வங்கித்துறையில் மேற்கொள்ளப்பட்ட மாபெரும் வெளிநாட்டு நேரடி முதலீடாக இது அமைந்திருந்தது. யூனியன் வங்கியின் புதிய வளர்ச்சிப் பயணமாக இது அமைந்திருந்தது. நிதி உறுதிப்பாட்டுடனான உறுதியான அடித்தளத்தைக் கொண்டும் சர்வதேச ஆற்றலுடன் யூனியன் வங்கி தற்போது முழுமையான சேவைகளை வழங்கும் வணிக வங்கியாக அமைந்துள்ளது. தனிநபர்களுக்கு, தொழில் முயற்சியாளர்களுக்கு மற்றும் கூட்டாண்மை நிறுவனங்களுக்கு நிதிசார் வலுவூட்டல்களை மேற்கொள்ளும் வகையில் பரிபூரண தீர்வுகளையும் சேவைகளையும் வழங்கி வருகின்றது. சிறிய, நடுத்தரளவு தொழிற்துறையை வலுவூட்டி உதவுவதில் வங்கி தொடர்ந்தும் கவனம் செலுத்துவதுடன், இந்த பிரிவுக்கு வலுச்சேர்ப்பதற்காக மாற்றியமைக்கப்பட்ட சேவை பங்குகளையும் கொண்டுள்ளது.

மூலதன வழங்கலை தொடர்ந்து, துரித வளர்ச்சி மற்றும் புத்தாக்கங்கள் மற்றும் அபிவிருத்திகளை தமது தீர்வுகளில் சேர்ப்பது, மனிதவளங்கள், தொழில்நுட்பம் மற்றும் சேவை வழங்கல் தொடர்பில் வங்கி கவனம் செலுத்தியிருந்தது. இதனூடாக வாடிக்கையாளர்களுக்கு முற்றிலும் மாறுபட்ட வங்கியியல் அனுபவத்தை ஏற்படுத்திக் கொடுப்பது வங்கியின் நோக்கமாக அமைந்திருந்தது. நாடளாவிய ரீதியில் காணப்படும் 67 கிளைகளினூடாகவும், பரந்தளவு ATM வலையமைப்பு மற்றும் டிஜிட்டல் வங்கிச் சேவைகளினூடாகவும் பெருமளவு வாடிக்கையாளர்களுக்கு சேவைகளை பெற்றுக் கொடுப்பது தொடர்பில் வங்கி கவனம் செலுத்துகின்றது.

யூனியன் வங்கியின் 25 வருட பூர்த்தி தொடர்பில், வங்கியின் பிரதம நிறைவேற்று அதிகாரி இந்திரஜித் விக்ரமசிங்க கருத்துத் தெரிவிக்கையில், ”யூனியன் வங்கியின் இந்த முக்கியத்துவம் வாய்ந்த மைல்கல்லை எய்தியுள்ளதையிட்டு நான் மிகவும் மகிழ்ச்சியடைகின்றேன். எமது ஊழியர்களின் அர்ப்பணிப்பான நடவடிக்கையினூடாக, வங்கியின் வெற்றிகரமான செயற்பாடு தங்கியுள்ளது. வங்கியின் செயற்பாடுகள் விரிவாக்கத்துடன், எமது அணி 1200 க்கும் அதிகமான ஊழியர்களை கொண்டு வளர்ச்சியடைந்துள்ளது. யூனியன் வங்கியின் எதிர்கால வெற்றிகரமான செயற்பாட்டை கட்டியெழுப்புவதில் இவர்கள் தூண்களாக அமைந்திருப்பார்கள். வருடம் முழுவதிலும் இந்த முக்கியத்துவம் வாய்ந்த வருடபூர்த்தியை குறிக்கும் நிகழ்வுகளை முன்னெடுக்க திட்டமிட்டுள்ளோம். அண்மையில் சமய அனுஷ்டானங்களுடன் இது ஆரமப்மாகியிருந்தது. யூனியன் வங்கியின் எதிர்காலம் என்பது விறுவிறுப்பானதாக அமைந்திருக்கும் என்பதுடன், வங்கியின் எதிர்கால வளர்ச்சியினூடாக பெருமளவு அனுகூலங்களை அனுபவிக்க எம்முடன் இணைந்து கொள்ளுமாறு சகல பங்காளர்களையும் அழைக்கின்றேன்.” என்றார்.
யூனியன் வங்கியின் 25 வருட பூர்த்தியை குறிக்கும் வைபவத்தின் முதல் அங்கம் யூனியன் வங்கியின் தலைமையகத்தில் இரவு பிரித் ஓதுதல் மற்றும் தானம் வழங்கும் நிகழ்வுடன் ஆரம்பமானது. வங்கியின் பிரதம நிறைவேற்று அதிகாரி இந்திரஜித் விக்ரமசிங்கவுடன் தலைமைத்துவ அணி, சிரேஷ்ட முகாமைத்துவம் மற்றும் சகல கிளைகளின் ஊழியர்கள், அவர்களின் குடும்பத்தார் என பலரும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர். இந்த பிரித் ஓதுதலை தொடர்ந்து, மூன்று மதங்களையும் குறிக்கும் விசேட சமய வழிபாடுகளும் இடம்பெற்றன. இதிலும் வங்கியின் நிர்வாகத்தினர் மற்றும் ஊழியர்கள் கலந்து கொண்டனர். யூனியன் வங்கியின் வாடிக்கையாளர்கள் மற்றும் ஊழியர்களுக்கும், நாட்டு மக்களுக்கும் நல்லாசி வேண்டி இந்த சமய வழிபாடுகள் இடம்பெற்றன. வங்கியின் 25 வருட பூர்த்தியை குறிக்கும் வாடிக்கையாளர்கள் மற்றும் ஊழியர்களுக்கான விசேட நிகழ்வுகள் மற்றும் சமூகத்துக்கு பங்களிப்பு வழங்கும் நிகழ்ச்சித் திட்டங்கள் போன்றன வருடம் முழுவதிலும் முன்னெடுக்கப்படும்.

 

TPG பற்றி

TPG என்பது 1992 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட சர்வதேச தனியார் முதலீட்டு நிறுவனமாகும். தனது நிர்வாகத்தின் கீழ் 100 பில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு அதிகமான தொகையை கொண்டுள்ளதுடன், சென் பிரான்சிஸ்கோ, ஃபோர்ட் வோர்த், ஒஸ்டின், பீஜிங், ஹொங் கொங், ஹவுஸ்டன், லண்டன், லக்சம்பேர்க், மெல்பேர்ன், மொஸ்கோ, மும்பை, நியுயோர்க், சவோ போலோ, சியொல் மற்றும் சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் அலுவலகங்களையும் கொண்டுள்ளது. TPG ஆசியாவில் 1994 ஆம் ஆண்டு முதல் பிரசன்னத்தைக் கொண்டுள்ளதுடன், தற்போது ஆசியாவில் கவனம் செலுத்தப்படும் ஏழாவது நிதியத்தில் முதலீடுகளை மேற்கொண்ட வண்ணமுள்ளது, சர்வதேச பொது மற்றும் தனியார் முதலீடுகளில் TPG ஆழமான அனுபவத்தை கொண்டுள்ளதுடன், திட்டமிடப்பட்ட கொள்முதல்கள், மீள்மூலதனமிடல்கள், சுழற்சிகள், வளர்ச்சி முதலீடுகள், இணை நிறுவனங்கள் மற்றும் மீள்கட்டமைப்புகளினூடாக இவை மேற்கொள்ளப்படுகின்றன. நிறுவனத்தின் முதலீடுகள் நிதிச் சேவைகள், பிரயாணம் மற்றும் களியாட்டல், தொழில்நுட்பம், வலு, தொழிற்துறை, விற்பனை, நுகர்வோர், ரியல் எஸ்டேட், ஊடகம் மற்றும் தொடர்பாடல்கள் மற்றும் சுகாதார பராமரிப்பு போன்ற துறைகளில் காணப்படுகின்றன.

பண்டிகைக் காலத்தை முன்னிட்டு யூனியன் வங்கி கடன் அட்டைதாரர்களுக்கு 50% வரை சேமிப்பு

பண்டிகைக் காலத்தை முன்னிட்டு யூனியன் வங்கி கடன் அட்டைதாரர்களுக்கு 50% வரை சேமிப்பு

 

பண்டிகைக் காலத்தை முன்னிட்டு யூனியன் வங்கி தனது விசேட கடன் அட்டை விலைக்கழிவு திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. நாடு முழுவதிலும் காணப்படும் 100 க்கும் அதிகமான பங்காளர் விற்பனை நிலையங்களிலிருந்து 50% வரை விலைக்கழிவுகளை கடன் அட்டைதாரர்களுக்கு பெற்றுக் கொள்ள முடியும்.

பிரத்தியேகமான விலைக்கழிவுகளுடன், விறுவிறுப்பான மற்றும் சாகசங்களுடன் தொடர்புடைய செயற்பாடுகள் வழங்கப்படுகின்றமை துறையில் யூனியன் வங்கி கடன் அட்டைகளினால் அறிமுகம் செய்யப்பட்டுள்ள மற்றுமொரு விசேட சேவையாக அமைந்துள்ளது. இந்த பண்டிகை காலப்பகுதியில் கடன் அட்டைச் சலுகைகளினூடாக அட்டைதாரர்களுக்கு 50% வரை சேமிப்பை பெற்றுக் கொள்ள முடியும் என்பதுடன், உள்நாட்டு ஆகாய பயணம், hot air ballooning, camping, hiking, safari trips, ATV driving, rock pool kayaking மற்றும் பல சாகச விளையாட்டுக்களான Jet ski, speed boat rides போன்ற பல அனுபவங்களை பெற்றுக் கொள்ள முடியும். இந்தச் சலுகை இதர புகழ்பெற்ற விளையாட்டுக்களான உள்ளக கிரிக்கெட், indoor futsal, paintballing மற்றும் go karting போன்றவற்றுக்கும் வழங்கப்படுவதனூடாக, யூனியன் வங்கி கடன் அட்டை என்பது கொடுப்பனவுகளை மேற்கொள்வதற்கு சிறந்த தெரிவாகவும், குடும்பத்தாருடன் பண்டிகைக் கால விடுமுறை மகிழ்ச்சியுடன் அனுபவித்து மகிழ்வதற்கான தெரிவாகவும், அலுவலக நண்பர்களுடன் ஒன்று சேர்ந்து விடுமுறையை களிப்பதற்கான சிறந்த தெரிவாகவும் அமைந்துள்ளது. இந்த சலுகைகள் இலங்கையில் புகழ்பெற்ற நிறுவனங்களான Cinnamon Air, Sunrise Ballooning, Excel World, Sri Lanka Karting Circuit, Jet Water Sports, X Sports Arena, Crate Adventure Park, Predator Paintball மற்றும் Ecoteams.lk ஆகியவற்றில் வழங்கப்படுகின்றன.

அட்டைதாரர்களுக்கு தமது பருவகால சொப்பிங் அனுபவத்தின் போது சிறந்த பெறுமதியை சேர்க்கும் வகையில், புகழ்பெற்ற விற்பனை நிலையங்களான Fashion Bug, Cool Planet, Hameedia, Signature, Kelly Felder, House of Fashions, CIB மற்றும் பல விற்பனையகங்களில் 25% வரை சேமிப்பை வழங்க முன்வந்துள்ளது. அட்டைதாரர்களுக்கு மேலும் Kangaroo Cabs இல் 10% வரையான விலைக்கழிவையும் பெற்றுக் கொள்ள முடியும்.

நாடு முழுவதிலும் காணப்படும் விடுமுறையை களிக்கும் பிரதான பகுதிகளில் பெருமளவு சேமிப்பு வழங்கப்படுகின்றது. இதனூடாக யூனியன் வங்கி கடன் அட்டைதாரர்களுக்கு தமது குடும்பத்தார் மற்றும் நண்பர்களுடன் சொகுசான முறையில் விடுமுறையை களித்து மகிழ்வதற்கு சகாயமான விலையில் தங்குமிட வசதிகள் வழங்கப்படுகின்றன. Theme Resorts and Spas, Oak Ray Holdings, 98 Acres Resort and Spa, Secret Hotels (Ella and Kandy) மற்றும் பல நட்சத்திர அந்தஸ்துடைய ஹோட்டல்களில் 50% வரை சேமிப்பை வாடிக்கையாளர்களுக்கு பெற்றுக் கொள்ள முடியும்.

விலைக்கழிவுகளுடன், யூனியன் வங்கி கடன் அட்டைதாரர்களுக்கு 24 மாதங்கள் வரை 0% வட்டியில்லாத தவணை முறை மீளக் கொடுப்பனவில் பொருட்களை கொள்வனவு செய்ய முடியும். ஆபரணங்கள், இலத்திரனியல் சாதனங்கள், வெளிநாட்டு சுற்றுப் பயணங்கள் மற்றும் தளபாடங்கள் போன்றவற்றை இவ்வாறு கொள்வனவு செய்யலாம். Vogue, Mallika Hemachandra, Raja Jewellers, Muthukaruppan Chettiyar, Singer Homes, Singer Plus, Softlogic Max, Lifestyle Store, Abans, Browns, Arpico Furniture, Sri Lankan Airlines, findmyfare.com மற்றும் பல பங்காளர்களிடமிருந்து இலகு தவணை முறை கொடுப்பனவை அனுபவிக்கலாம். மேலும், வாடிக்கையாளர்களுக்கு 50000 ரூபாய்க்கு மேல் மேற்கொள்ளும் கல்வி, பிரயாணம் மற்றும் சுகாதாரம் தொடர்பான கொள்வனவுகளுக்கும் எவ்விதமான கையாளல் கட்டணங்களுமின்றி அவற்றை இலகு முறை மீளச் செலுத்தும் திட்டத்துக்கு மாற்றிக் கொள்ளக்கூடிய வசதியும் வழங்கப்படுகின்றது.

keep swiping, keep benefitting எனும் தனது உறுதிமொழிக்கமைய, யூனியன் வங்கி கடன் அட்டைச் சலுகைகளினூடாக வழங்கப்படும் விலைக்கழிவுகளுக்கு மேலதிகமாக, Loan-on-Card மற்றும் Balance Transfer வசதி போன்றன வழங்கப்படுகின்றன. யூனியன் வங்கி கடன் அட்டைதாரர்களுக்கு தமது அட்டை தொடர்பான தகவல்களை இலகுவாக ஒன்லைனில் பேணக்கூடிய வசதியும், வங்கியின் இணைய மற்றும் மொபைல் பாங்கிங் கட்டமைப்புகளினூடாக வழங்கப்படுகின்றன.

வங்கியின் நாடளாவிய ரீதியில் காணப்படும் கிளை வலையமைப்பில் கடன் அட்டைகளை கொள்வனவு செய்ய முடியும் என்பதுடன், கடன் அட்டைக்கு விண்ணப்பிக்கும் எந்தவொரு நபருக்கும் ஒன்லைன் ஊடாக அல்லது வங்கியின் அழைப்பு நிலையத்துடன் 011 5800 5800 எனும் ஹொட்லைன் இலக்கத்துடன் தொடர்பு கொள்வதனூடாக பெற்றுக் கொள்ள முடியும்.
யூனியன் வங்கியின் கடன் அட்டை தொடர்பான மேலதிக தகவல்களை வங்கியின் கூட்டாண்மை இணையத்தளமான www.unionb.com ஊடாக பெற்றுக் கொள்ளலாம்.

சரத் விக்ரமநாயக்க யூனியன் வங்கியின் பணிப்பாளர் சபைக்கு நியமனம்

சரத் விக்ரமநாயக்க யூனியன் வங்கியின் பணிப்பாளர் சபைக்கு நியமனம்

 

யூனியன் வங்கியின் நிறைவேற்று அதிகாரமற்ற பணிப்பாளராக சரத் விக்ரமநாயக்க நியமிக்கப்பட்டுள்ளதாக வங்கியின் பணிப்பாளர் சபை அறிவித்துள்ளது. ஜுன் மாதம் 21 ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளதாக மேலும் குறிப்பிட்டுள்ளது.

வங்கியியல் துறையில் 16 வருட கால அனுபவத்தைக் கொண்டுள்ளதுடன், சிரேஷ்ட நிதியியல் நிறைவேற்று அதிகாரியாக 27 வருட காலம் கடமையாற்றிய அனுபவத்தைக் கொண்டுள்ளார். தேசிய அபிவிருத்தி வங்கி அடங்கலாக முன்னணி நிறுவனங்களின் பணிப்பாளர் சபையில் இவர் அங்கம் வகித்துள்ளார். யூனியன் அஷ்யூரன்ஸின் பிரதம நிறைவேற்று அதிகாரியாக 1999 முதல் 2003 வரையில் பதவி வகித்திருந்தார். இதற்கு முன்னதாக பேர்மியுடாவிலுள்ள வங்கியான பாங்க் ஒஃவ் பட்டர்ஃபீல்டில் 19 வருடங்கள் பணியாற்றியுள்ளார். அக்காலப்பகுதியில், நிறைவேற்று உப தலைவர் மற்றும் பிரதம நிறைவேற்று அதிகாரியாக இவர் பதவி வகித்திருந்தார். பிரத்தானியா, செனல் தீவுகள், ஹொங் கொங், சிங்கப்பூர் மற்றும் கேமன் தீவுகள் போன்றவற்றுக்கான செயற்பாடுகளை நிறைவேற்றும் பொறுப்பை கொண்டிருந்தார்.

இவர் AIA இன்சூரன்ஸ் லங்கா பிஎல்சி, NDB வெல்த் மனேஜ்மன்ட் லிமிடெட், NDB இன்வெஸ்ட்மன்ட் பாங்க் லிமிடெட், NDB கெப்பிட்டல் ஹோல்டிங்ஸ் லிமிடெட், NDB செபைர் பார்ட்னர்ஸ் லங்கா (பிரைவட்) லிமிடெட் மற்றும் NDB கெப்பிட்டல் லிமிடெட் (பங்களாதேஷ்) ஆகியவற்றில் பணிப்பாளராக செயலாற்றி வருகின்றார்.
1979 ஆம் ஆண்டு முதல் இலங்கை பட்டய கணக்காளர் நிறுவனத்தின் அங்கத்துவத்தை விக்ரமநாயக்க கொண்டுள்ளார்.

புதிய இரு நியமனங்களுடன் யூனியன் வங்கியின் தலைமைத்துவ அணிக்கு வலுவூட்டப்பட்டுள்ளது

புதிய இரு நியமனங்களுடன் யூனியன் வங்கியின் தலைமைத்துவ அணிக்கு வலுவூட்டப்பட்டுள்ளது

படங்கள்

  • அசங்க ரன்ஹொட்டி
  • நிசல கொடிப்பிலி

 

கடுமையான சூழல்நிலைகளில் மேம்படுத்தப்பட்ட வளர்ச்சி எதிர்பார்ப்புகளில் கவனம் செலுத்துகின்றது

யூனியன் வங்கி தனது தலைமைத்துவ அணியில் புதிதாக இரு அங்கத்தவர்களை இணைத்துள்ளதாக அறிவித்துள்ளது.

வங்கியின் பிரதம தகவல் அதிகாரியாக நிசல கொடிப்பிலி நியமிக்கப்பட்டுள்ளதுடன், சிறிய, நடுத்தரளவு தொழில்முயற்சியாளர் வங்கியியல் மற்றும் கொடுக்கல் வாங்கல் வங்கியில் பிரிவுகளின் உப தலைவராக வங்கியியல் துறையில் அனுபவம் வாய்ந்தவரான அசங்க ரன்ஹொட்டி நியமிக்கப்பட்டுள்ளார்.

நேஷன்ஸ் ட்ரஸ்ட் வங்கியின் பிரதம தகவல் அதிகாரியாக கொடிப்பிலி முன்னர் பதவி வகித்திருந்தார். 20 வருடங்களுக்கு மேலான துறைசார் அனுபவத்தைக் கொண்டுள்ள இவர், வங்கிகளில் தகவல் தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் புத்தாக்கங்களை முன்னெடுத்துச் செல்வதில் அதிகளவு பங்களிப்பை வழங்கியுள்ளார். இவர் மேற்கு அவுஸ்திரேலியாவின், எடித் கோவான் பல்கலை;கழகத்தில் வணிக நிர்வாக மாஸ்டர்ஸ் பட்டத்தை பெற்றுள்ளதுடன், பிரித்தானிய கணினி சமூகம் (MBCS) மற்றும் அவுஸ்திரேலிய கணினி சமூகம் ஆகியவற்றின் நிபுணத்துவ அங்கத்தவருமாவார். இலங்கை வங்கியியலாளர்களின் CIO அமர்வின் தலைவராக கொடிப்பில் செயலாற்றுவதுடன், FINCSIRT செயற்குழுவின் அங்கத்தவருமாவார். யூனியன் வங்கியின் வளர்ந்து வரும் டிஜிட்டல் வங்கியியல் மூலோபாயத்துக்கு நிசல கொடிப்பிலி தலைமைத்துவம் வழங்குவதுடன், வியாபார வளர்ச்சிக்கு, வங்கியின் தகவல் தொழில்நுட்ப செயற்பாட்டை பிரதான பங்களிப்பு வழங்கும் பிரிவாக வலிமைப்படுத்தும் நடவடிக்கைகளையும் முன்னெடுப்பார்.

யூனியன் வங்கியுடன் இணைந்து கொள்ளும் முன்னர் ரன்ஹொட்டி, டொயிஷ் வங்கியின் பண முகாமைத்துவம் மற்றும் வியாபார நிதியியல் பிரிவின் உப தலைவராக செயலாற்றியுள்ளார். வங்கியியல் துறையில் 24 வருட கால அனுபவத்தை இவர் கொண்டுள்ளதுடன், சிறிய, நடுத்தரளவு தொழில்முயற்சியாளர்கள், வாடிக்கையாளர் வங்கியியல், கூட்டாண்மை வங்கியியல், கொடுக்கல் வாங்கல் வங்கியியல், வர்த்தக நிதியியல் மற்றும் கடன் இடர் ஆகிய பிரிவுகளில் உள்நாட்டு மற்றும் சர்வதேச வங்கிகளில் இவர் பணியாற்றிய அனுபவத்தைக் கொண்டுள்ளார். வங்கியியலாளர் பட்டய கல்வியகத்தின் (FCIB) அங்கத்தவராக ரன்ஹொட்டி திகழ்வதுடன், கொழும்பு பல்கலைக்கழகத்திலிருந்து MBA பட்டத்தையும் பெற்றுள்ளார். ஐக்கிய இராஜ்ஜியத்தின் மான்செஸ்ட்டர் பல்கலைக்கழகத்தின் விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் கல்வியகத்தில் நிதிச் சேவைகளில் விஞ்ஞான இளமானிப் பட்டத்தையும் பெற்றுள்ளார். இலங்கையின் நிபுணத்துவ வங்கியியலாளர் சம்மேளனத்தின் கடந்து செல்லும் தலைவராகவும் இவர் திகழ்கின்றார். யூனியன் வங்கியின் பண முகாமைத்துவம் மற்றும் கொடுக்கல் வாங்கல் வங்கியியல் செயற்பாடுகளை அசங்க ரன்ஹொட்டி நிர்வகிப்பதுடன், வங்கியின் சிறிய, நடுத்தரளவு தொழில்முயற்சியாளர் வங்கியியல் வியாபார செயற்பாடுகளை புதுப்பிக்கப்பட்ட மூலோபாயத்திட்டங்களுடன் முன்னெடுக்கவுள்ளார்.

வங்கி சிறந்த பெறுபேறுகளை பதிவு செய்திருந்த முக்கியமான தருணத்தில் இந்த இரு புதிய நியமனங்களும் வழங்கப்பட்டுள்ளன. துரித வளர்ச்சிக்கான மூன்றாண்டு கால மூலோபாய திட்டத்தின் இரண்டாவது ஆண்டில் வங்கி பயணித்த வண்ணமுள்ளது. வங்கியின் தொடர்ச்சியான வளர்ச்சியில் வருமானம் மற்றும் இலாபகரத்தன்மை ஆகியவற்றின் அதிகரிப்பு பங்களிப்பு வழங்கியிருந்தன. யூனியன் வங்கியின் தொடர்ச்சியான வளர்ச்சியை அண்மையில் ஃபிட்ச் ரேட்டிங் ஸ்ரீ லங்கா மேலும் உறுதி செய்து, நீண்ட கால தேசிய தரப்படுத்தலை மேம்படுத்தியிருந்தது.

புதிய நியமனங்களுடன், யூனியன் வங்கியின் தலைமைத்துவ அணியில், இந்திரஜித் விக்ரமசிங்க – நிறைவேற்று பணிப்பாளர்/பிரதம நிறைவேற்று அதிகாரி, ஹிரந்தி டி சில்வா – உப தலைவர் மொத்த வங்கியியல், விஜே தம்பவின்ன – உப தலைவர், திறைசேரி தலைமை அதிகாரி, எஸ். ஸ்ரீ கணேந்திரன் – உப தலைவர், செயற்பாடுகள், ரவி ஜயசேகர – உப தலைவர், மனித வளங்கள், சாயா ஜயவர்தன – உப தலைவர், வாடிக்கையாளர் வங்கியியல், இனோகா ஜயவர்தன – உதவி உப தலைவர் /சட்ட தலைமை அதிகாரி/கம்பனி செயலாளர், நிசல கொடிப்பிலி – பிரதம தகவல் அதிகாரி, அசங்க ரன்ஹொட்டி – உப தலைவர் சிறிய, நடுத்தரளவு வங்கியியல் மற்றும் கொடுக்கல் வாங்கல் வங்கியியல், மலிந்த சமரதுங்க – பிரதம நிதி அதிகாரி மற்றும் சுஹேன் வணிகசூரிய – பிரதம இடர் அதிகாரி ஆகியோர் அடங்கியுள்ளனர்.

இலங்கையின் அதிகளவு மூலதனவாக்கத்தைக் கொண்ட தனியார் வணிக வங்கியாக யூனியன் வங்கி தொடர்ந்தும் முன்னேற்றத்தைப் பதிவு செய்ய தன்னை நிலைப்படுத்தியுள்ளது. இதற்கு ஐக்கிய அமெரிக்காவை தளமாகக் கொண்டியங்கும் சர்வதேச முதலீட்டு நிறுவனமான TPG இன் 70 பில்லியன் அமெரிக்க டொலர்களுக்கும் அதிகமான தொகை மூலதனமாக வழங்கப்பட்டுள்ளமை பெரிதும் பக்கபலமாக அமைந்திருக்கும். TPG இன் முதலீட்டைத் தொடர்ந்து, வளர்ச்சியை நோக்கிய புதிய பயணத்தை யூனியன் வங்கி ஆரம்பித்துள்ளதுடன், சகல வசதிகளையும் கொண்ட வணிக வங்கியாக கூட்டாண்மை, சிறிய நடுத்தரளவு வணிகங்கள் மற்றும் சில்லறை வங்கியல் பிரிவுகளுக்கு சேவைகளை பெற்றுக் கொடுக்க முன்வந்துள்ளது. உறுதியான அடித்தளத்துடனான நிதியியல் உறுதிப்பாட்டுடனும் புதுப்பிக்கப்பட்ட வியாபார நோக்குடன் சர்வதேச அனுபவத்தைக் கொண்டு இயங்கும் யூனியன் வங்கி தற்போது இலங்கையில் வேகமாக வளர்ந்து வரும் வணிக வங்கிகளில் ஒன்றாக திகழ்கின்றது.

யூனியன் வங்கியின் நீண்ட கால தரப்படுத்தல்களை ஃபிட்ச் மெருகேற்றியுள்ளது

யூனியன் வங்கியின் நீண்ட கால தரப்படுத்தல்களை ஃபிட்ச் மெருகேற்றியுள்ளது

 

24 மே 2019 : யூனியன் வங்கியின் நீண்ட கால தரப்படுத்தலை உறுதியான எதிர்கால நோக்குடன் ‘BB+(lka)’ இலிருந்து ‘BBB-(lka)’ ஆக ஃபிட்ச் ரேட்டிங்ஸ் லங்கா மெருகேற்றியுள்ளது.

யூனியன் வங்கியின் மெருகேற்றப்பட்ட தரப்படுத்தலினூடாக, அதிகளவு பன்முகப்படுத்தப்பட்ட கடன் புத்தகத்தினூடாக, சிறந்த இடர் கோவை பிரதிபலிக்கப்பட்டுள்ளதுடன், இதர தரப்படுத்தல் செலுத்துநர்களுடன் ஒப்பிடுகையில் அதிகரித்த இலாபம் மற்றும் சராசரியை விட உயர்வான மூலதனவாக்கம் போன்றன பிரதிபலிக்கப்பட்டுள்ளன.

2018 ஆம் ஆண்டின் நிறைவில் கூட்டாண்மை, சிறிய நடுத்தரளவு தொழில் முயற்சிகள் மற்றும் சில்லறை கடன்கள் அடங்கலாக பன்முகப்படுத்தப்பட்ட கடன் திரட்டு முறையே 48%, 33% மற்றும் 19% ஆக வெற்றிகரமாக பதிவாகியிருந்தமை இந்த தரப்படுத்தல்களினூடாக பிரதிபலிக்கப்பட்டிருந்தது. 2018 ஆம் ஆண்டின் நிறைவில் வங்கியின் நிகர தொழிற்படா கடன் விகிதம் 3.7% ஆக பதிவாகியிருந்தமையை இந்த தரப்படுத்தல் கவனத்தில் கொண்டிருந்ததுடன், மத்திய கால அடிப்படையில் கடன் வளர்ச்சி மேலும் விரிவடையும் என அது நம்பிக்கை கொண்டுள்ளது.

யூனியன் வங்கியின் வளர்ந்துவரும் வணிக வங்கியியல் வர்த்தக நாம அடையாளம் மற்றும் தொடர்ச்சியாக மேம்பட்டுவரும் இலாபகரத்தன்மை போன்றவற்றில் இந்த தரப்படுத்தல் மெருகேற்றம் உறுதிப்பாட்டை வெளிப்படுத்தியுள்ளது. 2018 ஆம் ஆண்டில் வங்கியின் வரிக்கு முந்திய இலாபம் 1 பில்லியன் ரூபாயை விட அதிகமாக பதிவாகியிருந்தது. இது 49% அதிகரிப்பாகும். இதில் பிரதான வங்கியியல் வருமான வளர்ச்சி பங்களிப்பு வழங்கியிருந்தது.

2018 ஆம் ஆண்டில் வங்கியின் தேறிய வட்டி வருமானம் ரூ. 3,652 மில்லியனாக பதிவாகியிருந்தது. இது 19.9% வரை அதிகரிப்பாகும். கட்டணங்கள் மற்றும் தரகு வருமானம் ஆகியவற்றை மேம்படுத்துவது தொடர்பில் கவனம் செலுத்தியிருந்தமை காரணமாக, பிரதானமாக வைப்புகளுடன் தொடர்புடைய கட்டணங்கள், வர்த்தகம் மற்றும் பண அனுப்புகைகள், கடன்கள், அட்டைகள் மற்றும் இதர கட்டணங்களைக் கொண்ட வங்கியின் கூலி மற்றும் தரகு வருமானம் முன்னைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் 23.6% வளர்ச்சியை பதிவு செய்திருந்தது.

யூனியன் வங்கியின் தொழிற்படு இலாபம்/இடர் உடன் தொடர்புடைய சொத்துக்கள் 2018 இல் 1.5% வரை அதிகரிப்புடன், இலாபகர குறிகாட்டிகள் 2018 இல் அதிகரித்திருந்ததாக தெரிவித்திருந்தது. இதில் சிறந்த தேறிய வட்டி எல்லைப் பெறுமதிகள் உயர் பங்களிப்பை வழங்கியிருந்ததுடன், உயர் வலுக்குறைப்பு செலவீனங்களை நிவர்த்தி செய்யவும் பங்களிப்பு வழங்கியிருந்தது என ஃபிட்ச் ரேட்டிங்ஸ் கொழும்பு அலுவலகம் அறிவித்திருந்தது. 2019 ஆம் ஆண்டிலும் சவால்கள் நிறைந்த சூழல் காணப்பட்ட போதிலும், இந்த முன்னேற்றகரமான நிலை தொடரும் என நாம் எதிர்பார்ப்பதாக குறிப்பிட்டுள்ளது.

2018 ஆம் ஆண்டின் நேர்த்தியான வளர்ச்சி உத்வேகத்தை முன்னெடுத்து, 2019 ஆம் ஆண்டின் முதலாவது காலாண்டில் ஆரோக்கியமான நிதிப் பெறுபேறுகளை பதிவு செய்துள்ளது. வங்கி தனது பிரதான வங்கியியல் செயற்பாடுகளில் குறிப்பிடத்தக்களவு வளர்ச்சியை பதிவு செய்திருந்ததுடன், முன்னைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் தொழிற்பாட்டு செயற்பாடுகளினூடாக இலாபத்தில் 62% அதிகரிப்பை பதிவு செய்திருந்தது. 2019 மார்ச் மாதத்துடன் நிறைவடைந்த காலப்பகுதியில் வரிக்கு முன்னைய இலாப அதிகரிப்பில் முன்னைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் 49% வளர்ச்சியை பதிவு செய்திருந்தது. வியாபார செயற்பாடுகளில் தொடர்ச்சியான கவனம் செலுத்துகையினூடாக தேறிய வட்டி வருமானத்தில் முன்னைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் 2019 மார்ச் 31 ஆம் திகதியுடன் நிறைவடைந்த முதல் காலாண்டில் 19% அதிகரிப்பு பதிவாகி ரூ. 1,013 மில்லியனாக காணப்பட்டது. தரகு மற்றும் கூலி கட்டண வருமானம் முதல் காலாண்டில் 19% அதிகரிப்பை பதிவு செய்திருந்தது.

இலங்கையின் அதிகளவு மூலதனவாக்கத்தைக் கொண்ட தனியார் வணிக வங்கியாக யூனியன் வங்கி தொடர்ந்தும் முன்னேற்றத்தைப் பதிவு செய்ய தன்னை நிலைப்படுத்தியுள்ளது. இதற்கு ஐக்கிய அமெரிக்காவை தளமாகக் கொண்டியங்கும் சர்வதேச முதலீட்டு நிறுவனமான TPG இன் 70 பில்லியன் அமெரிக்க டொலர்களுக்கும் அதிகமான தொகை மூலதனமாக வழங்கப்பட்டுள்ளமை பெரிதும் பக்கபலமாக அமைந்திருக்கும். TPG இன் முதலீட்டைத் தொடர்ந்து, வளர்ச்சியை நோக்கிய புதிய பயணத்தை யூனியன் வங்கி ஆரம்பித்துள்ளதுடன், சகல வசதிகளையும் கொண்ட வணிக வங்கியாக கூட்டாண்மை, சிறிய நடுத்தரளவு வணிகங்கள் மற்றும் சில்லறை வங்கியல் பிரிவுகளுக்கு சேவைகளை பெற்றுக் கொடுக்க முன்வந்துள்ளது. உறுதியான அடித்தளத்துடனான நிதியியல் உறுதிப்பாட்டுடனும் புதுப்பிக்கப்பட்ட வியாபார நோக்குடன் சர்வதேச அனுபவத்தைக் கொண்டு இயங்கும் யூனியன் வங்கி தற்போது இலங்கையில் வேகமாக வளர்ந்து வரும் வணிக வங்கிகளில் ஒன்றாக திகழ்கின்றது.

வங்கியின் மூலதன நிலையை பற்றி ஃபிட்ச் ரேட்டிங் குறிப்பிடுகையில், ‘2018 ஆம் ஆண்டின் நிறைவில் ஃபிட்ச் பிரதான மூலதன விகிதத்தின் பிரகாரம் யூனியன் வங்கியின் மூலதன நிலை என்பது 15.4% ஆக காணப்பட்டது. இதே வகையான தரப்படுத்தலைக் கொண்ட ஏனைய நிறுவனங்களுடன் ஒப்பிடுகையில் இது உறுதியானதாக அமைந்திருந்தது. யூனியன் வங்கியினால் சௌகரியமான மூலதன இடைதாங்கல்களை பேண முடியும் என்பதில் நாம் நம்பிக்கை கொண்டுள்ளதுடன், ஒழுங்குபடுத்தலின் ஆகக்குறைந்த மூலதன தேவைப்பாட்டை நிவர்த்தி செய்யக்கூடியதாக அமைந்திருக்கும். தேவையெனில் பற்றாணைகளினூடாக பிரதான பங்காளரிடமிருந்து மூலதனத்தை அணுகக்கூடிய வசதியையும் கொண்டுள்ளது.’ என பதிவாகியிருந்தது

யூனியன் வங்கியின் வாடிக்கையாளர் மற்றும் SME வங்கியியல் விருதுகள் வழங்கும் நிகழ்வில் சிறந்த செயற்பாட்டாளர்களுக்கு கௌரவிப்பு

யூனியன் வங்கியின் வாடிக்கையாளர் மற்றும் SME வங்கியியல் விருதுகள் வழங்கும் நிகழ்வில் சிறந்த செயற்பாட்டாளர்களுக்கு கௌரவிப்பு

படம்: 2018 ஆம் ஆண்டின் சிறந்த கிளைக்கான விருது பிலியந்தலை கிளைக்கு வழங்கப்பட்டிருந்தது. இந்த விருதை பிலியந்தலை கிளை முகாமையாளர் ஹசித விஜேரத்னவுக்கு, யூனியன் வங்கியின் பணிப்பாளர் சபை இயக்குநர் ட்ரெவின் பெர்னான்டோபுள்ளே, பணிப்பாளரும் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான இந்திரஜித் விக்ரமசிங்க வழங்குகின்றனர். அருகில் வாடிக்கையாளர் வங்கியியல் பிரிவில் உப தலைவர் சாயா ஜயவர்தன, மொத்த வங்கியியல் பிரிவின் உப தலைவர் ஹிரந்தி டி சில்வா மற்றும் கிளை வலையமைப்புக்கான உதவி உப தலைவர் மஹேந்திர இளங்கசிங்க ஆகியோர் காணப்படுகின்றனர்.

யூனியன் வங்கியின் வாடிக்கையாளர் மற்றும் SME வங்கியியல் பிரிவுகளில் கடந்த ஆண்டில் சிறப்பாக தமது திறமைகளை வெளிப்படுத்தியிருந்த ஊழியர்களை கௌரவிக்கும் விருதுகள் வழங்கும் நிகழ்வு அண்மையில் கொழும்பு மரினோ பீச் ஹோட்டலில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்நிகழ்வுக்கு ‘வெற்றிக்கான பந்தயம்’ (Race to Win) என பெயரிடப்பட்டிருந்தது.

இந்நிகழ்வின் போது கடந்த ஆண்டில் வங்கியின் வளர்ச்சிக்கு பங்களிப்பு வழங்கியிருந்த வங்கியின் சிறந்த கிளை மற்றும் விற்பனை ஊழியர்கள் கௌரவிக்கப்பட்டிருந்தனர்.

தொடர்ச்சியாக இரண்டாவது வருடமாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த விருதுகள் வழங்கும் நிகழ்வு, நாற்பத்து மூன்று பிரிவுகளில் விருதுகளை வழங்கியிருந்தது. யூனியன் வங்கியின் பணிப்பாளர் சபை இயக்குநர் ட்ரெவின் பெர்னான்டோபுள்ளே, பணிப்பாளரும் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான இந்திரஜித் விக்ரமசிங்க மற்றும் வங்கியின் பிரதான நிர்வாக உறுப்பினர்களும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

யூனியன் வங்கியின் பணிப்பாளரும் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான இந்திரஜித் விக்ரமசிங்க இந்நிகழ்வின் பிரதான உரையை நிகழ்த்தியிருந்ததுடன், வெற்றியாளர்களுக்கு தமது வாழ்த்துக்களை தெரிவிக்கும் போது, ‘2018 இல் வங்கி எய்தியிருந்த சாதனைகளில், எமது முன்நிலை ஊழியர்கள் மற்றும் உதவி பிரிவுகளைச் சேர்ந்தவர்கள் வழங்கியிருந்த அர்ப்பணிப்பு, விடாமுயற்சி மற்றும் நிபுணத்துவம் போன்றன முக்கிய பங்களிப்பை வழங்கியிருந்தன. எமது வளர்ச்சிப் பயணத்தில் மையப்பகுதியில் நாம் இன்று காணப்படுகிறோம். வங்கியின் மூன்றாண்டு வளர்ச்சி திட்டத்தில் முதலாவது ஆண்டை நாம் வெற்றிகரமாக பூர்த்தி செய்துள்ளோம். இந்த ஆண்டும், அடுத்து வரும் ஆண்டிலும், நாம் தொடர்ந்து முன்னேற்றத்தை பதிவு செய்து, வர்த்தக நாமத்தை மேலும் உயர்ந்த ஸ்தானத்துக்கு கொண்டு செல்ல எண்ணியுள்ளோம். இதில் உங்கள் ஒவ்வொருவருக்கும் முக்கிய பங்கு காணப்படும், போட்டியை நாம் எதிர்கொண்டு நாட்டின் அதிகளவானோர் நாடும் வாடிக்கையாளர் மற்றும் SME வங்கியாக திகழ்வோம்.’ என்றார்.

இந்நிகழ்வில் வழங்கப்பட்டிருந்த மிகவும் பெருமைக்குரிய விருதுகளில், ஆண்டின் சிறந்த எலைட் வங்கியியல் உறவுகள் முகாமையாளர், சிறந்த அணித்தலைவர் – கடப்பாடு விற்பனைகள், சிறந்த அணித்தலைவர் – பிரத்தியேக கடன்கள்ஃவீட்டுக் கடன்கள், ஆண்டின் சிறந்த சேகரிப்பு முகவர், சிறந்த கொடுக்கல் வாங்கல் வங்கியியல் அதிகாரி, சிறந்த விற்பனை சாதனையாளர் – வலய அடிப்படையில், சிறந்த கிளை – வலய அடிப்படையில் மற்றும் 2018 ஆம் ஆண்டின் சிறந்த கிளை போன்றன அடங்கியிருந்தன.

வலயம் IA, வலயம் IB, வலயம் II, வலயம் III மற்றும் வலயம் IV ஆகியன முறையே பிலியந்தலை கிளை, பொரளை கிளை, இப்பாகமுவ கிளை, அகுரெஸ்ஸ கிளை மற்றும் மன்னார் கிளை ஆகியவற்றுக்கு வழங்கப்பட்டிருந்தன. 2018 ஆண்டின் சிறந்த கிளைக்கான விருதை பிலியந்தலை கிளை பெற்றுக் கொண்டது.

வங்கிகள்

  • Amana Bank PLC
  • Bank of Ceylon
  • Cargills Bank Ltd
  • Citibank
  • Commercial Bank of Ceylon PLC
  • DFCC Bank
  • Hatton National Bank PLC
  • HDFC Bank
  • HSBC Ltd
  • National Development Bank PLC
  • Nations Trust Bank
  • Pan Asia Banking Corporation
  • People’s Bank
  • Public Bank Berhard
  • Sampath Bank PLC
  • Seylan Bank PLC
  • Standard Chartered Bank

நிறுவனங்கள்

  • Merchant Bank of Sri Lanka Finance
  • Central Finance PLC
  • Commercial Leasing and Finance PLC
  • HNB Finance
  • LB Finance PLC
  • People’s Leasing and Finance PLC
  • Softlogic Finance Plc
  • Singer Finance (Lanka) PLC