முறையான செலவு மற்றும் இலாகா முகாமைத்துவ மூலோபாயத் திட்டங்களில் யூனியன் வங்கி தொடர்ச்சியாக கவனம் செலுத்தி, நடப்பு ஆண்டின் மூன்றாம் காலாண்டில் உறுதியான நிதிப் பெறுபேறுகளைப் பதிவு செய்திருந்தது.
கொவிட்-19 தொற்றுப் பரவல் காரணமாக, நாட்டின் பொருளாதார சூழல் பெருமளவு பாதிக்கப்பட்டிருந்ததுடன், வியாபார செயற்பாடுகளும் பாதிக்கப்பட்டன. இவ்வாறான சவால்கள் நிறைந்த பொருளாதாரச் சூழலில், சராசரி பிரதான கடன் வழங்கல் வீதம் (AWPLR) வருடாந்த அடிப்படையில் 400bps களினால் வீழ்ச்சியடைந்ததுடன், திறைசேரி பத்திரங்களின் பெறுமதிகளும் மீளாய்வுக்குட்படுத்தப்பட்ட காலப்பகுதியில் வீழ்ச்சியை பதிவு செய்திருந்தன. இலங்கை மத்திய வங்கியின் வழிகாட்டல்களின் பிரகாரம், யூனியன் வங்கியினால் அதன் கடன் அட்டைகள் அடங்கலாக பல்வேறு நிதி வழங்கல் தீர்வுகளின் மீதான வட்டி வீதங்களில் குறைப்பு ஏற்படுத்தப்பட்டிருந்தது. சிறிய, நடுத்தரளவு தொழில்முயற்சிகள் மற்றும் ஏற்றுமதியாளர்களின் தொழிற்படு மூலதன தேவைகளை நிவர்த்தி செய்வதற்காக சகாயப் பெறுமதிகளில் கடன்களை வழங்கவும் நடவடிக்கை மேற்கொண்டிருந்ததுடன், இலங்கை மத்திய வங்கியின் கடன் திட்டங்களான சௌபாக்கியா கொவிட்-19 உதவி வசதியிலும் பங்கேற்றிருந்தது.
பொருளாதாரம், வியாபாரங்கள் மற்றும் நுகர்வோர் மீது கொவிட்-19 தொற்றுப் பரவல் காரணமாக எதிர்மறைத் தாக்கங்கள் பதிவாகியிருந்த நிலையில், வங்கியியல் துறையிலும் தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தது. இந்நிலையில், வங்கி தொடர்ச்சியாக கொவிட்-19 தொடர்பான அனுகூலத் திட்டங்களில் கவனம் செலுத்தி, நுகர்வோரின் நிதியியல் மீட்சிக்கு உதவும் வகையிலான திட்டங்களை வழங்கியிருந்தது. இதனூடாக வியாபாரச் செயற்பாடுகளை தொடர்ந்து முன்னெடுத்து, நிதிசார் மீட்சியை எய்தவும், வியாபார செயற்பாடுகளை சுகாதார பாதுகாப்பு விதிமுறைகளின் பிரகாரம் முன்னெடுத்து, ஊழியர்கள், வாடிக்கையாளர்கள் மற்றும் இதர பங்காளர்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும் முடிந்திருந்தது.
சவால்கள் நிறைந்த சூழல் அதிகரித்திருந்த நிலையில், யூனியன் வங்கியினால் திரள்வு இடைத்தடுப்புகள் அதிகரிக்கப்பட்டிருந்ததுடன், உறுதியான மேலதிக திரள்வு நிலையை பேண முடிந்திருந்தது. மீளாய்வுக்குட்படுத்திய இக்காலப்பகுதியில், சராசரி நிலையான வைப்புகள் உறுதியாகவும், சராசரி CASA பெறுமதி ரூ. 23,805 மில்லியனாக பதிவாகியிருந்தது. இது ஒப்பீட்டளவில் 18சதவீத அதிகரிப்பாகும்.
இந்த நெருக்கடி நிறைந்த சூழலும் நுகர்வோருக்கு உதவும் வகையில் செயலாற்றியிருந்தமை மற்றும் வட்டி வீதங்களில் சரிவு பதிவாகியிருந்தமை காரணமாக தேறிய வட்டி எல்லைப் பெறுமதி 3.8% இலிருந்து 3.3% ஆக குறைந்திருந்தது.
தொற்றுப் பரவல் காரணமாக பாதிக்கப்பட்ட வாடிக்கையாளர்களுக்கு உதவும் நோக்கில், இலங்கை மத்திய வங்கியின் வழிகாட்டல்களின் பிரகாரம், காலம் கடந்த கொடுப்பனவு கட்டணம் மற்றும் இதர கட்டண விலக்கழிப்புகள் மற்றும் பொருளாதார செயற்பாடுகளில் சரிவு ஏற்பட்டிருந்தமை போன்ற காரணிகளால் இக்காலப்பகுதியில் ஒட்டுமொத்த கட்டண வருமானம் 25% இனால் வீழ்ச்சியடைந்திருந்தது.
மீளாய்வுக்குட்படுத்தப்பட்ட காலப்பகுதியில் திறைசேரி பிரிவு குறிப்பிடத்தக்களவு பெறுபேறுகளைப் பதிவு செய்திருந்ததுடன், வியாபார இலாபம்/மூலதன வருமதிகளை பதிவு செய்து வருடாந்த அடிப்படையில் 108% அதிகரிப்பை எய்தியிருந்தது. குறித்த காலப்பகுதியில் நாணப் பரிமாற்ற வீதம் வீழ்ச்சியடைந்தமை காரணமாக வங்கியின் இதர தொழிற்படு வருமானம் அதிகரிப்பை பதிவு செய்திருந்தது.
சவால்கள் நிறைந்த சூழலில், காலாண்டுக்கான வங்கியின் தொழிற்படு வருமானம் ரூ. 1,692 மில்லியனாக பதிவாகியிருந்தது. முன்னைய காலாண்டுடன் ஒப்பிடுகையில் 3% வீழ்ச்சியடைந்திருந்தது. வங்கியின் பரந்தளவு செலவு முகாமைத்துவ செயற்பாடுகளினூடாக மொத்த தொழிற்படு செலவுகள் குறைக்கப்பட்டிருந்ததுடன், முன்னைய காலாண்டுடன் ஒப்பிடுகையில் 5% இனால் குறைந்து ரூ. 941 மில்லியனாக பதிவாகியிருந்தது. அதுபோன்று, காலாண்டில் வங்கியின் வலுக்குறைப்பு இலாபம் ரூ. 751 மில்லியனாக பதிவாகியிருந்தது. ஒப்பீட்டு காலாண்டுப் பெறுமதிக்கு நிகரானதாக அமைந்திருந்தது. வங்கியின் கடன் இழப்புகள் குறைவாக பதிவாகியிருந்ததுடன், வலுக்குறைப்பு பெறுமதி முன்னைய காலாண்டுடன் ஒப்பிடுகையில் 31% அதிகரிப்பைப் பதிவு செய்திருந்தது. கொவிட்-19 கடன் சலுகைக் காலம் காரணமாக எழுந்த இழப்புகள், வலுக்குறைப்பு கட்டணத்தில் பதிவாகியிருந்ததுடன், இது Sri Lanka Accounting Standard – 9 (SLFRS 9) முறையின் பிரகாரம் பின்பற்றப்பட்டிருந்தது.
சவால்கள் நிறைந்த பாரிய-பொருளாதார பின்புலச்சூழலில், வங்கியின் செயற்பாடுகளினூடாக குறைந்தளவு பெறுபேறுகள் பதிவாகியிருந்தன. முன்னைய ஆண்டின் இதே காலாண்டுடன் ஒப்பிடுகையில் 12% இனால் வீழ்ச்சியடைந்து ரூ. 470 மில்லியனாக பதிவாகியிருந்தது. வங்கியின் துணை நிறுவனங்களான UB ஃபினான்ஸ் மற்றும் NAMAL ஆகியவற்றின் தொழிற்படு சூழலும் சவால்களுக்கு முகங்கொடுத்திருந்தது. வரி வீதங்களில் வீழ்ச்சி மற்றும் ஒதுக்கங்கள் தொடர்பான கவனமான நிர்வாகம் போன்றவற்றினால், வங்கியின் துணை நிறுவனங்களில் மீது கொண்டு பங்கு உரிமையாண்மைகளினூடாக வரிக்கு பிந்திய இலாபத்தை முன்னைய ஆண்டின் காலாண்டுப் பகுதியுடன் ஒப்பிடுகையில் அதே மட்டத்தில் பேண முடிந்தது.
வங்கியின் இதுவரையான தொழிற்படு வருமானம் ரூ. 4,643 மில்லியனாக பதிவாகியிருந்தது. இது முன்னைய ஆண்டின் இதே காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில் மாற்றமின்றி அமைந்திருந்தது. வங்கியின் கடுமையான செலவு நிர்வாக செயற்பாடுகளினூடாக மொத்த தொழிற்படு செலவீனங்கள் பேணப்பட்டிருந்ததுடன், முன்னைய ஆண்டின் இதே காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில் 4% இனால் குறைந்து ரூ. 2,855 மில்லியனாக பதிவாகியிருந்தது. அதுபோன்று, வங்கியின் வலுக்குறைப்புக்கு முன்னதான இலாபங்கள் ரூ. 1,787 மில்லியனாக பதிவாகியிருந்தது. கடந்த ஆண்டின் இதே காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில் 7% வளர்ச்சியை பதிவு செய்திருந்தது. வங்கியின் கடன் இழப்புகள் குறைந்த மட்டத்தில் காணப்பட்டதுடன், நிர்வாக நடவடிக்கைகளினூடாக, குறிப்பிடத்தக்களவு ஒதுக்கங்களை பேணியிருந்ததனூடாக, ஒப்பீட்டுக் காலப்பகுதியுடன் கருதும் போது வலுக்குறைப்பு கட்டணங்களில் 59% அதிகரிப்பை பதிவு செய்திருந்தது. கொவிட்-19 கடன் சலுகைக் காலம் காரணமாக எழுந்த இழப்புகள், வலுக்குறைப்பு கட்டணத்தில் பதிவாகியிருந்ததுடன், இது Sri Lanka Accounting Standard – 9 (SLFRS 9) முறையின் பிரகாரம் பின்பற்றப்பட்டிருந்தது.
தொடர்ச்சியாக சவால்கள் நிறைந்த பொருளாதார பின்புலத்தில், வங்கி தனது செயற்பாட்டு நடவடிக்கைகளினூடாக மந்தமான பெறுபேறுகளை பதிவு செய்திருந்தது. இதுவரையில் வங்கியின் செயற்பாட்டு நடவடிக்கைகளினூடாக வருமதி ரூ. 1,226 மில்லியனாக பதிவாகியிருந்தது. ஓப்பீட்டளவில் 7% வீழ்ச்சியாகும். வங்கியின் துணைநிறுவனங்களின் தொழிற்பாட்டு சூழலும், சவால்கள் நிறைந்ததாக அமைந்திருந்தது. துணைநிறுவனங்களில் வங்கி கொண்டிருந்த உரிமையாண்மை அடங்கலாக, வரி வீதங்களில் வீழ்ச்சி பதிவாகியிருந்தமை, ஒதுக்கங்களை கடுமையாக நிர்வகித்திருந்தமை போன்ற காரணிகளினூடாக முன்னைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் வரிக்கு பிந்திய இலாபம் 3% அதிகரிப்பை பதிவு செய்திருந்தது. வங்கியின் மொத்த பரிபூரண வருமானம் ரூ. 812 மில்லியனாக பதிவாகியிருந்தது.
வெளியக அழுத்தங்கள் மற்றும் மார்ச் மாதம் முதல் தொடர்ச்சியாக பின்னடைவை எதிர்நோக்கியி பொருளாதாரச் சூழல் காரணமாக, நிகர NPL விகிதம் 5.48% ஆக பதிவாகியிருந்தது. முன்னைய ஆண்டில் இதே காலப்பகுதியில் இப்பெறுமதி 5.03% ஆக பதிவாகியிருந்தது. வலுவிழந்த பொருளாதாரச் சூழலிலும், இலாகாக்களின் தரத்தை நிர்வகிப்பது தொடர்பான வங்கியின் கடுமையான வழிமுறைகளினூடாக NPL களை பேணுவதற்கு முடிந்திருந்தது.
வங்கியின் மொத்த சொத்துக்களின் பெறுமதி செப்டெம்பர் 30 ஆம் திகதியன்று ரூ. 122,291 மில்லியனாக பதிவாகியிருந்தது. வங்கியின் கடன்கள் மற்றும் கிடைப்பனவுகள் ஆகியன இதுவரையில் ரூ. 71,333 மில்லியனாக பதிவாகியிருந்தது. வைப்புகளின் இருப்பு ரூ. 81,958 மில்லியனாக பதிவாகியிருந்தது. இது இக்காலப்பகுதியில் 7% அதிகரித்திருந்தது.
ஒழுங்குபடுத்தல் தேவைப்பாடுகளை விட வங்கி தனது மூலதன போதுமை விகிதங்களை உயர்வாக பேணியிருந்ததுடன், துரித மூலதன போதுமை பெறுமதியை பதிவு செய்திருந்தது. அறிக்கை தயாரிப்பு திகதியன்று மொத்த மூலதன போதுமை விகிதம் 16.26% ஆக பதிவாகியிருந்தது.
யூனியன் வங்கியின் துரித திரள்வு நிலை மற்றும் உறுதித் தன்மை ஆகியன ஃபிட்ச் ரேட்டிங்ஸ் இனால் மேலும் உறுதி செய்யப்பட்டிருந்தது. 2020 இல் வெளியிடப்பட்டிருந்த பிந்திய தரப்படுத்தல்களில், வங்கியின் தற்போதைய தரப்படுத்தல் உறுதி செய்யப்பட்டிருந்தது.
வங்கி மற்றும் அதன் இரு துணை நிறுவனங்களைக் கொண்ட குழுமம், வரிக்கு முந்திய இலாபமாக ரூ. 1,306 மில்லியனை பதிவு செய்திருந்தன.
கடந்த ஆண்டின் இதே காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில், வரிக்கு பிந்திய இலாபம் 5% இனால் குறைந்திருந்தது. குழுமத்தின் மொத்த சொத்துக்கள் பெறுமதி ரூ. 129,008 மில்லியனாக பதிவாகியிருந்தது. இதில் 95% ஐ வங்கி பிரதிநிதித்துவப்படுத்தியிருந்தது. அறிக்கையிடல் திகதியன்று குழுமம் 16.41% எனும் ஆரோக்கியமான பிரதான மூலதன போதுமை விகிதத்தை பேணியிருந்தது.
2020 ஏப்ரல் முதல் செப்டெம்பர் 30 வரையான காலப்பகுதியில், இலங்கை மத்திய வங்கியினால் பரிந்துரைக்கப்பட்டிருந்த கடன் முதல் மற்றும் வட்டித் தொகையை மீளச் செலுத்துவதற்கான சலுகைக் காலத்தை வழங்கியிருந்தது. இந்த சவால்கள் நிறைந்த காலப்பகுதியை கடந்து செல்லும் நோக்கில், வாடிக்கையாளர்களுக்கு மீளச் செலுத்துவதற்கு சகாய காலப்பகுதியை வழங்கி, கடன் வசதிகள் வழங்கப்பட்டிருந்தன. கடன் மீளச் செலுத்தல் சலுகைக்காலத்தில் கவனம் செலுத்தப்பட்ட தீர்வுகளில் கடன்கள் மற்றும் குத்தகைகள், மேலதிகப் பற்றுகள், நகை அடகு மற்றும் வியாபார நிதி வசதிகள் போன்றன அடங்கியிருந்தன.
யூனியன் வங்கியின் கூட்டாண்மை வங்கியியல் பிரிவின் வாடிக்கையாளர்களை வங்கி அணுகி, அவர்களுக்கு பொருத்தமான நிதித் தீர்வுகளை வழங்கி, அவர்களின் மூலோபாய செயற்பாடுகளுக்கு வங்கி பங்களிப்பு வழங்கியிருந்தது. வங்கியின் சிறிய, நடுத்தரளவு வங்கியியல் பிரிவினூடாக, தொற்றுப் பரவல் முடக்க நிலையால் பாதிக்கப்பட்ட வாடிக்கையாளர்களுக்கு உதவிகள் வழங்கப்பட்டிருந்தன. பொருளாதார மீட்சியை உறுதி செய்வதற்கு, தேசிய ரீதியில் இலங்கை மத்திய வங்கியினால் பரிந்துரைக்கப்பட்டிருந்த நிதி வழங்கும் திட்டங்களினூடாக, சிறிய, நடுத்தரளவு வியாபாரங்களுக்கும் வாழ்வாதாரங்களுக்கும் பங்களிப்பு வழங்கப்பட்டிருந்தன. மீளாய்வுக்குட்படுத்தப்பட்ட காலப்பகுதியில், வங்கியினால் 1.3 பில்லியன் ரூபாய் தொழிற்படு கடன்கள் மத்திய வங்கியின் சௌபாக்கியா கடன் திட்டத்தினூடாக பாதிக்கப்பட்ட வெவ்வேறு துறைகளைச் சேர்ந்த சிறிய, நடுத்தரளவு தொழில்முயற்சியாளர்களுக்கு வழங்கப்பட்டிருந்தன. பாதிக்கப்பட்ட வாடிக்கையாளர்களுக்கான நிவாரணத் திட்டங்களின் அங்கமாக, சுமார் 58% சிறிய, நடுத்தரளவு தொழில்முயற்சியாளர் இலாகா பெறுமதி வெவ்வேறு சகாய திட்டங்களில் உள்வாங்கப்பட்டிருந்தன. பாதிக்கப்பட்ட தொழில்முயற்சியாளர்களுக்கு இந்தத் திட்டங்கள் குறிப்பிடத்தக்களவு உதவிகளை வழங்கியிருந்ததுடன், மந்தமாக நிலவும் பொருளாதாரச் சூழலிலும் தமது வியாபார செயற்பாடுகளை மீள ஆரம்பிப்பதற்கு உதவியாக அமைந்திருந்தது.
யூனியன் வங்கியின் BizDirect இனூடாக வங்கியின் கூட்டாண்மை மற்றும் சிறிய, நடுத்தரளவு தொழில்முயற்சி வாடிக்கையாளர்களுக்கு அவசியமாக அமைந்திருந்த திரள்வு முகாமைத்துவ வினைத்திறன் வழங்கப்பட்டிருந்தது. இதனூடாக தமது நிறுவனங்களின் திரள்வு நிலைகளை மேம்படுத்தி, சௌகரியமான பண முகாமைத்துவ நிபுணத்துவ நடவடிக்கைகளுக்கு உதவிகள் வழங்கப்பட்டிருந்தன. பாரம்பரிய வங்கியியல் முறைகளுக்கு பதிலாக, டிஜிட்டல் தீர்வுகளுக்கான கேள்வி அதிகரித்த நிலையில், யூனியன் வங்கி BizDirect இல் பல புதிய கூட்டாண்மை மற்றும் சிறிய, நடுத்தரளவு தொழில்முயற்சி வாடிக்கையாளர்கள் இணைக்கப்பட்டனர்.
CASA ஆரம்பிப்புகள், வைப்பு பரவலாக்கம் மற்றும் கடன் அட்டை இலாகா விஸ்தரிப்பு ஆகியவற்றினூடாக நுகர்வோர் வங்கியியல் பிரிவு வளர்ச்சியை பதிவு செய்திருந்தது. பொருத்தமான வாழ்க்கைமுறை சலுகைகளினூடாக அட்டைதாரர்களுக்கு உயர் பெறுமதியை வங்கி வழங்கியிருந்ததுடன், ஹோட்டல் தங்கியிருத்தல்கள், உணவருந்தல் மற்றும் சொப்பிங் ஆகியவற்றில் விலைக்கழிவுகளை வழங்கியிருந்ததுடன், 0% வட்டியில்லாத தவணை முறை கொடுப்பனவு திட்டங்களையும் வழங்கியிருந்தது. யூனியன் வங்கியின் டிஜிட்டல் வங்கியியல் நாளிகைகளினூடாக வாடிக்கையாளர்களுக்கு தொடர்ச்சியாக தொடுகை இல்லாத பாதுகாப்பான வங்கியியல் அனுபவம் வழங்கப்பட்டிருந்தது.
சுகாதார அதிகார அமைப்புகளின் வழிகாட்டல்களின் பிரகாரம், வங்கியின் செயற்பாடுகளில் வாடிக்கையாளர்கள் மற்றும் ஊழியர்களின் பாதுகாப்பை முன்னுரிமை அடிப்படையில் பாதுகாக்கும் திட்டங்கள் அமுல்ப்படுத்தப்பட்டிருந்தன. இதனூடாக கிளை வலையமைப்பிலும் தலைமை அலுவலக வளாகத்திலும் கடுமையான தூய்மை மற்றும் பாதுகாப்பு செயன்முறைகள் பின்பற்றப்பட்டிருந்தன. வங்கியின் ATM வலையமைப்பு, ஒன்லைன்/மொபைல் வங்கியியல் கட்டமைப்புகளை அணுகுவது மற்றும் 24 மணி நேர தொடர்பாடல் நிலையம் ஆகியவற்றை சௌகரியமாக அணுகும் வாய்ப்பும் வழங்கப்பட்டிருந்தது.
நிதிப் பெறுபேறுகள் தொடர்பில் யூனியன் வங்கியின் பணிப்பாளரும்/பிரதம நிறைவேற்று அதிகாரியுமான இந்திரஜித் விக்ரமசிங்க கருத்துத் தெரிவிக்கையில், “இந்த சிக்கல்கள் நிறைந் காலப்பகுதியை கடந்து செல்வதற்காக நாம் ஆரோக்கியமான திரள்வு நிலையை பேணியுள்ளதுடன், எமது வாடிக்கையாளர்களுடன் தொடர்பை பேணி, அவர்களுக்கு அவசியமான உதவிகளை வழங்குகின்றோம். சவால்கள் நிறைந்த சூழலிலிருந்து வங்கி மீண்டெழுவதை உணர்த்துவதாக 3ஆம் காலாண்டு நிதிப் பெறுபேறுகள் அமைந்துள்ளன. சமகாலத்தில் புதிய வழமையாக அமைந்துள்ள பாரிய நெருக்கடி நிறைந்த சூழலுக்கேற்ற வகையில், எமது செயற்பாடுகளை நாம் மாற்றியமைத்து இயங்கி வருவதுடன், வாடிக்கையாளர்களுடனான ஈடுபாட்டை தொடர்ச்சியாக பேணவும், அவர்களின் பிரத்தியேகமான நிதித் தேவைகளை நிவர்த்தி செய்யக்கூடிய நிதித் தீர்வுகளை வழங்கவும் திட்டமிட்டுள்ளோம். எமது ஊழியர்கள் மற்றும் வாடிக்கையாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையிலான நடவடிக்கைகளை எப்போதும் முன்னெடுக்கின்றோம். ஆரோக்கியமான திரளவு நிலையை பேணுவதுடன், இலாபகரத்தன்மையை முன்னெடுத்து, இலாகா வளர்ச்சியை பதிவு செய்வதில் ஆண்டின் எஞ்சிய காலப்பகுதியில் அதிகளவு கவனம் செலுத்தப்படும்.” என்றார்.