படம் – இடமிருந்து: கொழும்பு பங்குப்பரிவர்த்தனை பிரதம நிறைவேற்று அதிகாரி ரஜீவ பண்டாரநாயக்க, யூனியன் வங்கி பணிப்பாளர் தில்ஷானி விஜயவர்தன, யூனியன் வங்கி பணிப்பாளர் சரத் விக்ரமநாயக்க, யூனியன் வங்கி பணிப்பாளரும் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான இந்திரஜித் விக்ரமசிங்க, யூனியன் வங்கியின் சட்ட பிரிவின் தலைமை அதிகாரியும் கம்பனி செயலாளருமான இனோகா ஜயவர்தன, யூனியன் வங்கியின் மொத்த வங்கியின் உப தலைவர் ஹிரந்தி டி சில்வா மற்றும் கொழும்பு பங்குப்பரிவர்த்தனையின் பணிப்பாளர் தில்ஷான் வீரசேகர ஆகியோர் காணப்படுகின்றனர்.
கொழும்பு பங்குப்பரிவர்த்தனையின் வியாபார கொடுக்கல் வாங்கல்கள் ஆரம்பிக்கும் முன்னதாக ஒலிக்கப்படும் மணியை, யூனியன் வங்கி ஒலிக்கச் செய்திருந்தது. தனது 25 வருட பூர்த்தியை குறிக்கும் வகையில் யூனியன் வங்கி ஏற்பாடு செய்திருந்த பல்வேறு செயற்பாடுகளில் ஒரு அங்கமாக இந்த நடவடிக்கையை மேற்கொண்டிருந்தது.
கொழும்பு பங்குப் பரிவர்த்தனையின் கொடுக்கல் வாங்கல்கள் ஆரம்ப நிகழ்வு, பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களுக்கு தமது மைல்கல் சாதனைகளை குறிக்கும் வகையில் அமைந்திருப்பதுடன், வியாபார சமூகம், பொருளாதாரம் மற்றும் சமூகம் ஆகியவற்றின் அபிவிருத்திக்கு முக்கியத்துவம் வாய்ந்த செயற்பாடுகளை குறிக்கும் வகையிலும் அமைந்துள்ளது.
கொழும்பு பங்குப்பரிவர்த்தனையில் வங்கியை பட்டியலிடப்பட்டுள்ளதன் முக்கியத்துவம் பற்றி யூனியன் வங்கியின் பணிப்பாளரும் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான இந்திரஜித் விக்ரமசிங்க குறிப்பிடுகையில், 2011 ஆம் ஆண்டில் கொழும்பு பங்குப்பரிவர்த்தனையில் யூனியன் வங்கி பட்டியலிடப்பட்டமை, வங்கிக்கு பல்வேறு வழிகளில் அனுகூலங்களை பெற்றுக் கொடுத்திருந்தது என்றார்.
”யூனியன் வங்கியின் ஆரம்ப பொது பங்கு வழங்கலுக்கு 2011 ஆம் ஆண்டில் சாதனை மிகுந்த வரவேற்பு கிடைத்தது. வங்கியின் 25 வருட கால வரலாற்றில் முக்கியத்துவம் வாய்ந்த திருப்பு முனையாக அமைந்திருந்தது. வங்கியின் பரந்தளவு பொது உரிமையாண்மையுடன், கொழும்பு பங்குப்பரிவர்த்தனையில் பட்டியலிடப்பட்டுள்ளமையானது, வங்கிக்கு சிறந்த தோற்றத்தையும், வர்த்தக நாம பெறுமதியையும் சேர்த்திருந்ததுடன், வாடிக்கையாளர் இருப்பை விஸ்தரித்துக் கொள்ளவும் அதனூடாக வியாபார செயற்பாடுகளை வளர்ச்சி பெறச் செய்யவும் ஏதுவாக அமைந்திருந்தது. எம்மீது நம்பிக்கை கொண்டுள்ள எமது பங்காளர்களுக்கு நாம் நன்றி தெரிவிப்பதுடன், எமது வளர்ச்சிக்கு இது முக்கியமானதாக அமைந்திருந்தது. கொழும்பு பங்குப் பரிவர்த்தனையுடன் அண்மைக்காலங்களில் வங்கி உறுதியான உறவை பேணி வருவதுடன், மூலதனச் சந்தைக்கு யூனியன் வங்கி வழங்கும் பங்களிப்பு தொடர்பில் நாம் பெருமை கொள்கின்றோம். நாட்டுக்கு நீண்ட கால உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு மூலதனத்தை பெற்றுக் கொடுப்பதில் நாம் பங்களிப்பு வழங்குகின்றோம். இதில் முக்கியத்துவம் வாய்ந்த TPG கெப்பிட்டலின் முதலீடும் அடங்கியுள்ளது. 2018 ஆம் ஆண்டில் S&P SL 20சுட்டெண்ணில் யூனியன் வங்கி உள்வாங்கப்பட்ட போது, அதன் நிலை மேலும் உறுதியடைந்திருந்தது. இந்த சுட்டியில் பட்டியலிடப்பட்ட சில வங்கிகளில் ஒன்றாக இது அமைந்திருந்தது.” என்றார்.
மேலும் குறிப்பிடுகையில், யூனியன் வங்க குழுமத்தின் அங்கமான நஷனல் அஸெட் மனேஜ்மன்ட் லிமிடெட் (NAMAL), நாட்டின் பங்குச் சந்தையை அபிவிருத்தி செய்வதில் முக்கிய பங்காற்றி வருகின்றது. குறிப்பாக பட்டியலிடப்பட்ட முதலாவது நம்பிக்கை அலகு நிறுவனமாக திகழ்வதுடன், பங்கு மற்றும் நிலையான வருமானமீட்டும் சந்தையில் முதலீடு செய்வதில் சிறந்த பெறுபேறுகளை பேணி வருகின்றது என்றார்.
தேசத்துக்கு இரண்டரை தசாப்த காலமாக வழங்கும் சேவையினூடாக, நிறுவனங்கள், சிறிய, நடுத்தரளவு தொழில் முயற்சிகள் மற்றும் இலங்கையர்களுக்கு 2020 ஆம் ஆண்டிலும் எதிர்காலத்திலும் மேம்படுத்தப்பட்ட சேவைகளை வழங்க தன்னை அர்ப்பணித்துள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.
இந்த நிகழ்வு தொடர்பில் கொழும்பு பங்குப்பரிவர்த்தனையின் பிரதம நிறைவேற்று அதிகாரி ரஜீவ பண்டாரநாயக்க கருத்துத் தெரிவிக்கையில், 1995 இல் ஸ்தாபிக்கப்பட்டது முதல் வங்கி சிறந்த முன்னேற்றத்தை பதிவு செய்துள்ளது, இந்த மைல்கல் சாதனையை கொண்டாடும் வகையில் கொழும்பு பங்குப்பரிவர்த்தனையின் வியாபார கொடுக்கல் வாங்கல்கலை உத்தியோகபூர்வமாக மணி ஒலித்து ஆரம்பித்தமைக்காக நிர்வாகத்துக்கு நன்றி தெரிவிக்கின்றேன். வங்கியியல் துறையில் தொடர்ச்சியாக ஆற்றி வரும் பங்களிப்பு மற்றும் எய்திய சாதனைகள் பெரிதும் பாராட்டத்தக்கன, வங்கியின் எதிர்கால வளர்ச்சிக்கு அதிகளவு வாய்ப்புகள் காணப்படுகின்றன.” என்றார்.
2020 ஆம் ஆண்டில் யூனியன் வங்கி தனது 25 வருட பூர்த்தியை கொண்டாடுகின்றது. 1995 ஆம் ஆண்டு ஸ்தாபிக்கப்பட்டது முதல், வெற்றிகரமாக முன்னெடுத்து வரும் பயணத்தை இது குறிக்கின்றது.
நிறுவனத்தின் நீண்ட வரலாற்றில், முன்னைய ஆண்டுகளில் பல்வேறு கட்ட வளர்ச்சியை வங்கி பதிவு செய்துள்ளது. இவற்றில் சவால்கள், வாய்ப்புகள் மற்றும் வளர்ச்சிகள் போன்றன அடங்கியுள்ளதுடன், இவற்றை எய்துவதற்கு வாடிக்கையாளர்கள், பங்காளர்கள், ஊழியர்கள் மற்றும் இதர பங்காளர்கள் போன்றவர்கள் முக்கிய பங்களிப்பை வழங்கியிருந்தனர்.
உலகின் மாபெரும் முதலீட்டு நிறுவனங்களில் ஒன்றான TPG இனால் 2014 ஆம் ஆண்டில் யூனியன் வங்கிக்கு 117 மில்லியன் அமெரிக்க டொலர்கள் முதலீடு செய்யப்பட்டு, 70 சதவீதமான பங்குகள் கொள்வனவு செய்யப்பட்டிருந்தது. இது வங்கிக்கும், நாட்டின் வங்கித் துறைக்கும் மிகவும் முக்கியமான தருணமாக அமைந்திருந்தது. இலங்கையில் மேற்கொள்ளப்பட்ட மாபெரும் வெளிநாட்டு நேரடி முதலீடுகளில் ஒன்றாக இது அமைந்திருந்தது. யூனியன் வங்கியின் வளர்ச்சியில் புதிய அத்தியாயமாக இது அமைந்திருந்தது. உறுதியான அடித்தளத்துடன், நிதி உறுதிப்பாட்டுடன் யூனியன் வங்கி முழுச் சேவைகளை வழங்கி வருகின்றது. இலங்கையின் தனிநபர்கள், வியாபாரங்கள் மற்றும் தொழில் முயற்சியாளர்களுக்கு பரிபூரண நிதிச் சேவைகளை வழங்குகின்றது.
மூலதன பாய்ச்சலை தொடர்ந்து, வங்கி வளர்ச்சியை நோக்கிய பயணத்தை தன்னை ஈடுபடுத்தியுள்ளது. தீர்வுகள், மனித மூலதனம், தொழில்நுட்ப மேம்படுத்தல்கள் மற்றும் சேவை வழங்கல் கட்டமைப்புகள் போன்றவற்றில் மேம்படுத்தல்களை ஏற்படுத்தி, அதனூடாக வாடிக்கையாளர்களுக்கு மாறுபட்ட வங்கியியல் அனுபவத்தை வங்கி வழங்குகின்றது. தனது 67 கிளை வலையமைப்பு, பரந்த ATM வலையமைப்பு மற்றும் டிஜிட்டல் வங்கித் தீர்வுகளினூடாக தனது சேவைகளை மேம்படுத்தியுள்ளது. செயற்பாடுகளை மூலோபாய அடிப்படையில் மீளக்கட்டமைத்திருந்ததனூடாக, வங்கி அண்மைய ஆண்டுகளில் சிறந்த நிதிப் பெறுபேறுகளையும் பதிவு செய்திருந்தது. 2019 ஆம் ஆண்டுக்கான நிதிப் பெறுபேறுகளில் இது மேலும் உறுதி செய்யப்பட்டிருந்தது.
தனது 25 ஆம் ஆண்டிலும், எதிர்காலத்திலும், யூனியன் வங்கி தனது சில்லறை, கூட்டாண்மை, சிறிய நடுத்தரளவு தொழில் முயற்சி மற்றும் திறைசேரி வியாபாரகளை மேலும் வலுப்படுத்துவதுடன், நிலைபேறான வளர்ச்சியை பதிவு செய்வதற்காக தெளிவான போட்டிகர அனுகூலங்களை பயன்படுத்தும். கூட்டாண்மை நிறுவனங்கள் மற்றும் சிறிய நடுத்தரளவு தொழில் முயற்சிகளின் வளர்ச்சிக்காக கைகோர்ப்பதில் வங்கி தொடர்ந்தும் தன்னை அர்ப்பணித்திருக்கும். சிறிய, நடுத்தரளவு தொழில்முயற்சியாண்மை துறை என்பது, பொருளாதாரத்தின் வளர்ச்சியில் முக்கிய பங்காற்றும் துறையாக இனங்காணப்பட்டுள்ளது. வங்கியின் எதிர்கால நிகழ்ச்சிநிரலில் இந்த துறை முக்கிய அங்கத்தை கொண்டுள்ளது. பரந்தளவு சென்றடைவு மற்றும் பரிபூரண தீர்வுகளுடனான வாடிக்கையாளர் வங்கியியல் செயற்பாடுகள் வேகமாக வளர்ச்சியடையும் என எதிர்பார்க்கப்படுகின்றது. டிஜிட்டல் மயப்படுத்தப்பட்ட தீர்வுகளை பெற்றுக் கொடுப்பதில் அதிகளவு கவனம் செலுத்தப்படும்.
”யூனியன் வங்கியின் எதிர்காலம் விறுவிறுப்பானதாக அமைந்துள்ளதுடன், வங்கியின் வளர்ச்சியில் சகல பங்காளர்களையும் கைகோர்த்து அனுகூலம் பெற வருமாறு அழைக்கின்றோம்.” என விக்ரமசிங்க நிகழ்வில் இறுதியாக குறிப்பிட்டார்.

