யூனியன் வங்கி நீண்ட காலமாக வங்கியில் சேவையாற்றும் ஊழியர்களை இந்த ஆண்டின் ‘UB Port Paradise’ நிகழ்வில் கௌரவித்திருந்தது. 20 மற்றும் 25 வருட சேவைக் காலத்தை பூர்த்தி செய்திருந்த ஊழியர்களை கௌரவிக்கும் வகையில் இந்த நிகழ்வு முன்னெடுக்கப்பட்டிருந்தது. யூனியன் வங்கியின் பணிப்பாளர்/பிரதம நிறைவேற்று அதிகாரி தில்ஷான் ரொட்ரிகோவிடமிருந்து நீண்ட காலமாக சேவையாற்றுகின்றமைக்கான விருதை இந்த ஊ ழியர்கள் பெற்றுக் கொண்டனர். வங்கியின் தொடர்ச்சியான பயணத்தில் அவர்களின் அர்ப்பணிப்பு மற்றும் பங்களிப்பு ஆகியவற்றை கௌரவிக்கும் வகையில் இந்த விருது வழங்கப்பட்டிருந்தது.
சரித ராஜகருண (வசூலிப்புகள்), துலினி சரத்சந்திர (மனித வளங்கள்), திலக்ஷ பெர்னான்டோ (சிறிய நடுத்தரளவு தொழில்முயற்சியாண்மை மற்றும் பரிவர்த்தனை வங்கியியல்), வருண பொன்சேகா (வசூலிப்புகள்) மற்றும் ரொஷான் டி அல்விஸ் (செயற்பாடுகள்) ஆகியோர் 20 வருட காலமாக சேவையாற்றியமைக்கான விருதைப் பெற்றுக் கொண்டனர். பிமல் டி சொய்ஸா (கடன் நிர்வாகம்) மற்றும் வசந்த டி சில்வா (பிராந்திய அலுவலகம் – மத்திய பிராந்தியம்) ஆகியோர் 25 வருட கால சேவைக்கான விருதைப் பெற்றுக் கொண்டனர். அவர்களின் நீண்ட கால சேவையினூடாக சேவைச் சிறப்பை முன்னெடுத்துச் செல்வதற்கும், வங்கியின் கலாசாரத்தை பேணுவதிலும் காண்பிக்கும் உண்மைத்தன்மை, நிபுணத்துவம் மற்றும் தொடர்ச்சியான அர்ப்பணிப்பு ஆகியன வெளிப்படுத்தப்பட்டுள்ளது. நிகழ்வின் போது, வங்கியின் சார்பாக விளையாட்டுப் பிரிவில் சிறப்பாக சாதனைகளை பதிவு செய்திருந்தமைக்காக மொஹமட் பசால் (கடன் செயற்பாடுகள்) விசேட கௌரவிப்பைப் பெற்றமையும் குறிப்பிடத்தக்கது.
படம்: தில்ஷான் ரொட்ரிகோ, பணிப்பாளர்/பிரதம நிறைவேற்று அதிகாரி, ஜயந்த அமரசிங்க, பிரதம மக்கள் மற்றும் மாற்றியமைப்பு அதிகாரி மற்றும் அசங்க ரன்ஹொட்டி, பிரதம வணிக அதிகாரி ஆகியோர் விருதுகளைப் பெற்றவர்களுடன் காணப்படுகின்றனர்.

