யூனியன் வங்கியின் பக்தி கீத குழுவினர் நிகழ்வில் பாடலிசைக்கின்றனர்
வெசாக் முழுமதி தினத்தினை கொண்டாடும் நோக்குடன், யூனியன் வங்கி அதன் தலைமை அலுவலகத்தில் பொது பக்தி கீத சரணம் 2018 (Bodu Bathi Gee Saraniya 2018) இசை நிகழ்ச்சியினை நடாத்தியது. வங்கியின் பணிப்பாளரும், பிரதம நிறைவேற்று அதிகாரியுமான திரு. இந்திரஜித் விக்கிரமசிங்க, கூட்டாண்மை மற்றும் சிரேஷ்ட வங்கி முகாமைத்துவத்தினர், பணியாளர்கள் மற்றும் அவர்களின் குடும்ப அங்கத்தவர்கள் ஆகியோர் இந்த நிகழ்வில் கலந்து சிறப்பித்தனர்.
யூனியன் வங்கியின் பொது பக்தி கீத சரணம் 2018 நிகழ்வானது, புகழ்பெற்ற இசையமைப்பாளர் நளின் அல்வில் அவர்களினால் நெறிப்படுத்தப்பட்டது. யூனியன் வங்கியின் பக்தி கீத குழுவில், கிஷானி சமரவிக்கிரம, ருமேஷ் வினோத், ரோஷன சம்பத், ஆன் ரொஷ்னி பெரேரா, சச்சிந்த தனுஷ்க குமார, நுவான் சத்துரங்க, வஜிர பெர்ணாண்டோ, பவன் அதுலுகம, சரளா குரே, ஷாலினி விஜேவர்த்தன, கலனி சந்தமாலி, கீத்தானி ரணவீர, யொஹான் ல்யூக், உமேஷா ஹெந்தஹேவ, ஹர்ஷிக்கா ஜயவர்த்தன, ஷாலினி பெரேரா, ஹசங்கி செனவிரட்ண, திலினி ஹேகொட, யதீஷா யுராந்தி, தினேஷி பொன்சேக்கா, ஸ்டெஃபானி பெர்ணாண்டோ, ப்ரவீன் பெரேரா, சச்சினி மதுஷிக்கா ஆகியோர் உள்ளடங்கியிருந்தனர். ரித்மா அபேசிங்க மற்றும் நுவன் திலக்கவர்த்தன ஆகியோர் நிகழ்வினை தொகுத்து வழங்கினர்.

