இரத்துச் செய்வதற்கான வழிமுறை
- பிரதான அட்டை உரிமையாளர் தமது கடன் அட்டை அல்லது தமது மேலதிக கடன் அட்டை(களை) இரத்துச் செய்யுமாறு யூனியன் பாங்க் ஒஃவ் கொழும்பு பிஎல்சிக்கு எழுத்து மூலமாக அறிவிக்க வேண்டும்.
- அவ்வாறான கோரிக்கையை மேற்கொள்ளும் போது அட்டையையும் நான்கு துண்டுகளாக வெட்டி, காந்தப்புல / EMV சிப் பகுதியையும் வெட்டி இரத்துச் செய்வதை உறுதி செய்ய சமர்ப்பிக்க வேண்டும்.
- அவ்வாறான கோரிக்கை தமக்கு கிடைத்தவுடன் வங்கியின் கார்ட் சென்ரர் மூலமாக அட்டை தடை செய்யப்படுவதுடன், அட்டையை இரத்துச் செய்யுமாறு கோரிக்கை வழங்கப்பட்ட காலப்பகுதியினுள் அட்டையில் ஏதேனும் கொடுக்கல் வாங்கல்கள் பதியப்படாத நிலையில், அவற்றை பெற்றுக் கொள்வதற்காக 14 நாட்களுக்கு இவ்வாறு தடை செய்யப்பட்ட நிலையில் பேணும்.
- மேற்படி காலப்பகுதியில் அட்டை உரிமையாளர் சகல நிலுவைகளையும் செலுத்தத் தவறியிருந்தால், நிலுவையிலுள்ள முழுத் தொகையையும் பிரதான அட்டை உரிமையாளர் கட்டாயம் செலுத்த வேண்டும்.
- முழுமையான நிலுவைத் தொகை செலுத்தப்பட்டு, 14 தினங்கள் கடந்த பின்னர், குறித்த கடன் அட்டைக்கான கணக்கு நிலையான செயலிழக்கச் செய்யப்படும். அட்டை உரிமையாளர் மற்றும் யூனியன் பாங்க் ஒஃவ் கொழும்பு பிஎல்சி இடையே காணப்படும் உடன்படிக்கையும் இரத்துச் செய்யப்படும்.
- கடன் அட்டை இரத்துச் செய்யப்பட்டமையை உறுதி செய்து வாடிக்கையாளருக்கு வங்கி எழுத்து மூலம் அறிவித்தலை வழங்கும்.
பெருமளவான வங்கியியல் சௌகரியம்
தனிநபர் சேவைகள்
தொடர்புகளுக்கு
எங்களுடன் தொடர்புகொள்ள
0117 818181
மின்னஞ்சல்





