பொசொன் பௌர்ணமி தினத்தின் முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையில், பொசொன் பக்தி கீதம் இசைக்கும் நிகழ்வை யூனியன் வங்கி அண்மையில் முன்னெடுத்திருந்தது. வங்கியின் கிளைகள் மற்றும் தலைமையகத்தைச் சேர்ந்த அணி அங்கத்தவர்கள் பங்கேற்புடன் இந்த நிகழ்வு இடம்பெற்றது. வங்கியின் தலைமையகத்தில் இடம்பெற்ற இந்த நிகழ்வில், வங்கியின் ஊழியர்களின் குடும்பத்தாரும் பங்கேற்றிருந்தனர். வங்கியின் நாட்காட்டியில் நீண்ட காலமாக நடைபெறும் நிகழ்வாக இந்த பக்தி கீதம் இசைக்கும் நிகழ்வு அடங்கியிருப்பதுடன், யூனியன் வங்கி விளையாட்டு கழகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
படம்: யூனியன் வங்கி பக்தி கீத அணி அங்கத்தவர்களுடன் பணிப்பாளரும் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான இந்திரஜித் விக்ரமசிங்க காணப்படுகின்றார்.

