பாங்கசூரன்ஸ் துறையில் யூனியன் அஷ்யூரன்ஸ் டயமன்ட் விருதுகள் என்பது மிகவும் உயர்ந்த கௌரவிப்பாக கருதப்படுவதுடன், இம்முறை ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்வில் யூனியன் வங்கியின் பாங்கசூரன்ஸ் அணியினர் உயர்ந்த கௌரவிப்பைப் பெற்றுக் கொண்டனர். ‘Unbreakable Brilliance’ (தகர்க்க முடியாத சிறப்பு) எனும் தொனிப்பொருளில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த நிகழ்வில், 85 க்கும் அதிகமான வெற்றியாளர்கள் கௌரவிக்கப்பட்டதுடன், பெறுமதி வாய்ந்த பணப்பரிசுகளும், வெளிநாட்டு சுற்றுப் பயண வாய்ப்புகளும் வழங்கப்பட்டிருந்தன.
டயமன்ட் விருது பெற்றுக் கொண்டவர்களில் லக்சிக ஹெதிகல்ல (பொரளை), சுமித் மன்னபெரும (குளியாப்பிட்டிய) மற்றும் ராஜன் சண்முகேஸ்வரன் (கொட்டாஞ்சேனை) ஆகியோர் அதிகளவு பரிந்துரைப்புகளை மேற்கொண்டு வருமானமீட்டியிருந்தமைக்காக அடங்கியிருந்தனர். CEO’s Lounge தனிநபர் விருதுகளை, லக்சிக ஹெதிகல்ல (பொரளை), சுமித் மன்னபெரும (குளியாப்பிட்டிய) மற்றும் டெவொன் ஜோசப் ரெபெர்ட் (கொள்ளுப்பிட்டி – எலைட் சேர்கிள்) ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.
சிறந்த வலய முகாமையாளருக்கான விருதை சமிந்த பெர்னான்டோ (Zone 1B) வென்றதுடன், வலய முகாமையாளர் பிரிவில், உயர் கட்டண வருமான உருவாக்கத்துக்கான விருதை கசுன் டி சில்வா (Zone 1A) பெற்றுக் கொண்டார். வருடாந்த ஷீல்ட் சம்பியன் விருதை, புறக்கோட்டை கிளை வெற்றியீட்டியது. டயமன்ட் க்ளப் விருதுகளின் உயர்ந்த வெகுமதிகளை, வரகாபொல, குளியாப்பிட்டிய, கொட்டாஞ்சேனை, மொரட்டுவ, நாவல மற்றும் பொரளை கிளைகள் தமக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்த ANBP இலக்குகளின் 150% க்கு அதிகமான பெறுமதிகளை எய்திய சாதனைகளுக்கேற்பவும், கட்டுப்பண தொடர்ச்சித்தன்மை மற்றும் காப்புறுதிகளின் எண்ணிக்கை போன்றவற்றுக்கமையவும் பெற்றுக் கொண்டன.