படங்கள்: சந்தித லியனகே (மாத்தறை கிளை), ரொஷான் விதானாரச்சி (செயற்பாடுகள்), கோலித டி சில்வா (OMS கிளை), காஞ்சன டி சில்வா (செயற்பாடுகள்), கிறிஸ்டெலா சிவபிரகாசம் (கொள்ளுப்பிட்டி கிளை), ரவி ஜயசேகர (உப தலைவர் மனித வளங்கள்), இந்தரஜித் விக்ரமசிங்க (பணிப்பாளர்/ பிரதம நிறைவேற்று அதிகாரி), ஸ்ரீ கணேந்திரன் (உப தலைவர் செயற்பாடுகள்), ஜமுனா ஜெகசோதி (கொட்டாஞ்சேனை கிளை), இந்திக கலஹிட்டியாவ (பிலிமத்தலாவை கிளை), சைலஜா நடராஜா (திறைசேரி), இரந்தி கருணாநாயக்க (கம்பளை கிளை) மற்றும் ஹிரான் டி சில்வா (மீட்புகள்).
யூனியன் வங்கியின் 20 வருட கால செயற்பாடுகளில் அர்ப்பணிப்புடன் நீண்ட காலமாக செயலாற்றிய ஊழியர்களுக்கு கௌரவிக்கும் நிகழ்வொன்றை யூனியன் வங்கி அண்மையில் ஏற்பாடு செய்திருந்தது. வோட்டர்ஸ் எட்ஜ் ஹோட்டலில் இடம்பெற்ற இந்நிகழ்வில் வங்கியில் நீண்ட காலமாக பணியாற்றிய பத்து ஊழியர்கள் கௌரவிக்கப்பட்டிருந்தனர்.
வங்கியின் செயற்பாடுகளில் இரண்டு தசாப்த காலமாக இந்த ஊழியர்கள் வழங்கிய பங்களிப்புக்கு கௌரவிப்பு மற்றும் வெகுமதிகள் போன்றன யூனியன் வங்கியின் பணிப்பாளரும் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான இந்திரஜித் விக்ரமசிங்கவினால் வழங்கப்பட்டிருந்தது.
இந்த விருதுகள் தொடர்பில் மனித வளங்கள் பிரிவின் உப தலைவர் ரவி ஜயசேகர கருத்துத் தெரிவிக்கையில், ‘வங்கியின் வெற்றிகரமான செயற்பாடுகளில் ஊழியர்கள் அர்ப்பணிப்பான செயற்பாடுகள் முக்கிய பங்களிப்பை வழங்குகின்றன. வங்கியுடன் 20 வருட கால சேவையை பூர்த்தி செய்யும் 10 ஊழியர்களுக்கு கௌரவிப்பை வழங்குவதையிட்டு நாம் பெரும் மகிழ்ச்சியடைகிறோம். நிறுவனம் எனும் வகையில், நீண்ட காலமாக பணியாற்றும் ஊழியர்களுக்கு மதிப்பை வழங்குவதையிட்டு நாம் பெருமையடைகிறோம்’ என்றார்.

