படம்: 2018 ஆம் ஆண்டின் சிறந்த கிளைக்கான விருது பிலியந்தலை கிளைக்கு வழங்கப்பட்டிருந்தது. இந்த விருதை பிலியந்தலை கிளை முகாமையாளர் ஹசித விஜேரத்னவுக்கு, யூனியன் வங்கியின் பணிப்பாளர் சபை இயக்குநர் ட்ரெவின் பெர்னான்டோபுள்ளே, பணிப்பாளரும் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான இந்திரஜித் விக்ரமசிங்க வழங்குகின்றனர். அருகில் வாடிக்கையாளர் வங்கியியல் பிரிவில் உப தலைவர் சாயா ஜயவர்தன, மொத்த வங்கியியல் பிரிவின் உப தலைவர் ஹிரந்தி டி சில்வா மற்றும் கிளை வலையமைப்புக்கான உதவி உப தலைவர் மஹேந்திர இளங்கசிங்க ஆகியோர் காணப்படுகின்றனர்.
யூனியன் வங்கியின் வாடிக்கையாளர் மற்றும் SME வங்கியியல் பிரிவுகளில் கடந்த ஆண்டில் சிறப்பாக தமது திறமைகளை வெளிப்படுத்தியிருந்த ஊழியர்களை கௌரவிக்கும் விருதுகள் வழங்கும் நிகழ்வு அண்மையில் கொழும்பு மரினோ பீச் ஹோட்டலில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்நிகழ்வுக்கு ‘வெற்றிக்கான பந்தயம்’ (Race to Win) என பெயரிடப்பட்டிருந்தது.
இந்நிகழ்வின் போது கடந்த ஆண்டில் வங்கியின் வளர்ச்சிக்கு பங்களிப்பு வழங்கியிருந்த வங்கியின் சிறந்த கிளை மற்றும் விற்பனை ஊழியர்கள் கௌரவிக்கப்பட்டிருந்தனர்.
தொடர்ச்சியாக இரண்டாவது வருடமாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த விருதுகள் வழங்கும் நிகழ்வு, நாற்பத்து மூன்று பிரிவுகளில் விருதுகளை வழங்கியிருந்தது. யூனியன் வங்கியின் பணிப்பாளர் சபை இயக்குநர் ட்ரெவின் பெர்னான்டோபுள்ளே, பணிப்பாளரும் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான இந்திரஜித் விக்ரமசிங்க மற்றும் வங்கியின் பிரதான நிர்வாக உறுப்பினர்களும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.
யூனியன் வங்கியின் பணிப்பாளரும் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான இந்திரஜித் விக்ரமசிங்க இந்நிகழ்வின் பிரதான உரையை நிகழ்த்தியிருந்ததுடன், வெற்றியாளர்களுக்கு தமது வாழ்த்துக்களை தெரிவிக்கும் போது, ‘2018 இல் வங்கி எய்தியிருந்த சாதனைகளில், எமது முன்நிலை ஊழியர்கள் மற்றும் உதவி பிரிவுகளைச் சேர்ந்தவர்கள் வழங்கியிருந்த அர்ப்பணிப்பு, விடாமுயற்சி மற்றும் நிபுணத்துவம் போன்றன முக்கிய பங்களிப்பை வழங்கியிருந்தன. எமது வளர்ச்சிப் பயணத்தில் மையப்பகுதியில் நாம் இன்று காணப்படுகிறோம். வங்கியின் மூன்றாண்டு வளர்ச்சி திட்டத்தில் முதலாவது ஆண்டை நாம் வெற்றிகரமாக பூர்த்தி செய்துள்ளோம். இந்த ஆண்டும், அடுத்து வரும் ஆண்டிலும், நாம் தொடர்ந்து முன்னேற்றத்தை பதிவு செய்து, வர்த்தக நாமத்தை மேலும் உயர்ந்த ஸ்தானத்துக்கு கொண்டு செல்ல எண்ணியுள்ளோம். இதில் உங்கள் ஒவ்வொருவருக்கும் முக்கிய பங்கு காணப்படும், போட்டியை நாம் எதிர்கொண்டு நாட்டின் அதிகளவானோர் நாடும் வாடிக்கையாளர் மற்றும் SME வங்கியாக திகழ்வோம்.’ என்றார்.
இந்நிகழ்வில் வழங்கப்பட்டிருந்த மிகவும் பெருமைக்குரிய விருதுகளில், ஆண்டின் சிறந்த எலைட் வங்கியியல் உறவுகள் முகாமையாளர், சிறந்த அணித்தலைவர் – கடப்பாடு விற்பனைகள், சிறந்த அணித்தலைவர் – பிரத்தியேக கடன்கள்ஃவீட்டுக் கடன்கள், ஆண்டின் சிறந்த சேகரிப்பு முகவர், சிறந்த கொடுக்கல் வாங்கல் வங்கியியல் அதிகாரி, சிறந்த விற்பனை சாதனையாளர் – வலய அடிப்படையில், சிறந்த கிளை – வலய அடிப்படையில் மற்றும் 2018 ஆம் ஆண்டின் சிறந்த கிளை போன்றன அடங்கியிருந்தன.
வலயம் IA, வலயம் IB, வலயம் II, வலயம் III மற்றும் வலயம் IV ஆகியன முறையே பிலியந்தலை கிளை, பொரளை கிளை, இப்பாகமுவ கிளை, அகுரெஸ்ஸ கிளை மற்றும் மன்னார் கிளை ஆகியவற்றுக்கு வழங்கப்பட்டிருந்தன. 2018 ஆண்டின் சிறந்த கிளைக்கான விருதை பிலியந்தலை கிளை பெற்றுக் கொண்டது.

