
ட்ரெவின் பெர்னான்டோபுள்ளே – பிரதித் தவிசாளர்

ஏ. எஸ். இப்ரஹிம் – சுயாதீன, நிறைவேற்று அதிகாரமற்ற பணிப்பாளர்
யூனியன் வங்கியின் பிரதித் தவிசாளராக ட்ரெவின் பெர்னான்டோபுள்ளே, 2021 ஆகஸ்ட் 30 ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளதாக வங்கியின் பணிப்பாளர் சபை அறிவித்துள்ளது. வங்கியின் பணிப்பாளர் சபையில் 9 வருடங்களாக சேவையாற்றியிருந்ததைத் தொடர்ந்து, இலங்கை மத்திய வங்கியின் ஒழுங்குபடுத்தல் விதிமுறைகளின் பிரகாரம், 2021 ஆகஸ்ட் 29 ஆம் திகதி முதல் வங்கியின் தற்போதைய பிரதித் தவிசாளரான சப்ரி கௌஸ் ஓய்வு பெறவுள்ளதைத் தொடர்ந்து, அந்தப் பதவிக்கு பெர்னான்டோபுள்ளே நியமிக்கப்பட்டுள்ளார்.
2021 ஆகஸ்ட் 15 ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில், யூனியன் வங்கியின் பணிப்பாளர் சபையில் சுயாதீன, நிறைவேற்று அதிகாரமற்ற பணிப்பாளராக ஏ.எஸ். இப்ரஹிம் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் வங்கியின் பணிப்பாளர் சபை மேலும் அறிவித்துள்ளது.
பிரதி தவிசாளராக நியமிக்கப்பட்டுள்ள ட்ரெவின் ஃபெர்னான்டோபுள்ளே, 2017 ஆம் ஆண்டு முதல் யூனியன் வங்கியின் பணிப்பாளர் சபையில் சுயாதீன, நிறைவேற்று அதிகாரமற்ற பணிப்பாளராக பணியாற்றியுள்ளதுடன், வங்கியின் பல்வேறு அமைப்புகளில் சேவையாற்றியுள்ளார். வங்கியின் செயற்பாடுகளை முன்னெடுத்துச் செல்வதற்கு அவசியமான வழிகாட்டல்களை இவர் வழங்கியிருந்தார். நிதிச் சேவைகள் துறையில் 40 வருடங்களுக்கு மேலான அனுபவத்தைக் கொண்டுள்ள வங்கியாளராக இவர் திகழ்கின்றார். யூனியன் வங்கியின் பணிப்பாளர் சபையில் இணைந்து கொள்வதற்கு முன்னதாக, DFCC குழுமத்தின் பிரதம இடர் அதிகாரி/நிறைவேற்று உப தலைவர் – இடர் மற்றும் இலங்கை வங்கியின் பிரதம இடர் அதிகாரியாக பணியாற்றியிருந்தார். HSBC ஸ்ரீ லங்காவின் பிரதி பிரதம நிறைவேற்று அதிகாரியாக பணியாற்றியதுடன், 30 வருடங்களாக இந்நிறுவனத்தில் பணியாற்றிய பரந்த அறிவையும், சர்வதேச வங்கிச் சேவைகளுக்கான வெளிப்படுத்தல் மற்றும் இடர் முகாமைத்துவம் பற்றிய நுணுக்கங்களையும் அறிந்துள்ளார். இடர் முகாமைத்துவம், அந்நியச் செலாவணி மற்றும் திறைசேரி, சர்வதேச வியாபாரம், கூட்டாண்மை வங்கியியல் மற்றும் கொடுக்கல் வாங்கல் செயற்பாடுகள் போன்ற பலவற்றுக்கு தலைமைத்துவத்தை வழங்கியுள்ளார்.
AMW கெப்பிட்டல் லீசிங் அன்ட் ஃபினான்ஸ் பிஎல்சி (Al Futtaim Group Dubai உரிமையாண்மையில் இயங்கும் நிறுவனம்) தவிசாளராக ஃபெர்னான்டோபுள்ளே திகழ்வதுடன், ஜோசப் ஃபிரேசர் ஞாபகார்த்த வைத்தியசாலையின் பணிப்பாளர் சபை காப்பாளராகவும் திகழ்கின்றார். கொன்டினென்டல் இன்சூரன்ஸ் லங்கா லிமிடெட், என்டர்பிரைஸ் சிலோன் கெப்பிட்டல் (பிரைவட்) லிமிடெட் மற்றும் தேசிய காப்புறுதி நம்பிக்கை நிதியம் ஆகியவற்றின் பணிப்பாளர் சபை அங்கத்தவராகவும் இவர் திகழ்கின்றார். வங்கியியலாளர்களின் பட்டய கல்வியகத்தின் (இலங்கைக் கிளை) முன்னாள் தலைவர் என்பதுடன், இலங்கை வங்கியியல் இடர் நிபுணர்கள் சம்மேளனத்தின் ஸ்தாபக அங்கத்தவர் / முன்னாள் உப தலைவராகவும் திகழ்ந்தார். இம்பீரியல் கல்லூரி, லண்டன் பல்கலைக்கழகத்திடமிருந்து (கணிதம்) BSc. பட்டத்தை ஃபெர்னான்டோபுள்ளே பெற்றுள்ளதுடன், லண்டன் ஸ்கூல் ஒஃவ் இகொனமிக்ஸ் இல் MSc (Statistics) பட்டத்தையும் பெற்றுள்ளார். அத்துடன், லண்டன், வங்கியியலாளர்கள் பட்டய கல்வியகத்தின் அங்கத்தவராகவும் திகழ்கின்றார்.
பிரதானமாக கூட்டாண்மை வங்கியியல், திறைசேரி முகாமைத்துவம் மற்றும் இடர் முகாமைத்துவம் ஆகியவற்றில் 37 வருடங்களுக்கு மேலாக வங்கியியல் அனுபவத்தை ஏ.எஸ்.இப்ரஹிம் கொண்டுள்ளார். 2017 ஜுலை முதல் 2020 நவம்பர் மாதம் வரையில் பீப்பள்ஸ் லீசிங் அன்ட் ஃபினான்ஸ் பிஎல்சியின் பிரதம நிறைவேற்று அதிகாரியாக பணியாற்றியிருந்தார். உள்நாட்டிலும், வெளிநாடுகளிலும் பல சிரேஷ்ட பதவிகளை இப்ரஹிம் வகித்திருந்ததுடன், இவற்றில் சிரேஷ்ட பிரதி பொது முகாமையாளர், மொத்த வங்கியியல் மற்றும் சிரேஷ்ட பிரதி பொது முகாமையாளர், மக்கள் வங்கியின் இடர் முகாமைத்துவம், பிரதி பொது முகாமையாளர், திறைசேரி தலைமை அதிகாரி, கூட்டாண்மை வங்கியியல் மற்றும் வசூலிப்புகள், ஹற்றன் நஷனல் வங்கியின் பிரதம இடர் அதிகாரி மற்றும் பிரதம கடன் அதிகாரி மற்றும் ஸ்டான்டர்ட் சார்ட்டட் வங்கியின் கடன் வழங்கல் பிரிவு மற்றும் GSAM இன் தலைமை அதிகாரியாக பணியாற்றியுள்ளார்.
இப்ரஹிம், பீப்பள்ஸ் இன்சூரன்ஸ் பிஎல்சி, பீப்பள்ஸ் மேர்ச்சன்ட் ஃபினான்ஸ் பிஎல்சி, பீப்பள்ஸ் லீசிங் ஃபலீட் மனேஜ்மன்ட் லிமிடெட், பீப்பள்ஸ் லீசிங் ஹவ்லொக் புரொப்பர்டீஸ் லிமிடெட், பீப்பள்ஸ் மைக்குரோ கொமர்ஸ் லிமிடெட், பீப்பள்ஸ் லீசிங் புரொப்பர்டி டிவலப்மன்ட் லிமிடெட் மற்றும் பங்களாதேஷின் லங்கன் அலியான்ஸ் ஃபினான்ஸ் லிமிடெட் பணிப்பாளராக கடமையாற்றியிருந்ததுடன், தற்போது ஃபின்ட்ரெக்ஸ் ஃபினான்ஸ் லிமிடெட் பணிப்பாளர் சபையில் அங்கம் வகிக்கின்றார். கொழும்பு பல்கலைக்கழகத்திடமிருந்து Honours Degree (BSc) பட்டத்தைப் பெற்றுள்ளதுடன், Chartered Institute of Bankers – UK (FCIB)இன் அங்கத்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த நியமனங்களினூடாக யூனியன் வங்கியின் பணிப்பாளர் சபை மேலும் வலிமைப்படுத்தப்பட்டுள்ளதுடன், வங்கியின் தந்திரோபாய பயணத்துக்கு பெருமளவு பெறுமதி மற்றும் வழிகாட்டல்களை வழங்குவதாக அமைந்திருக்கும். கடந்த காலங்களில் வங்கியின் செயற்பாடுகளுக்கு பெறுமதி வாய்ந்த பங்காற்றி, பணியிலிருந்து ஓய்வு பெறும் பிரதி தவிசாளர் சப்ரி கௌஸுக்கு தமது நன்றி மற்றும் வாழ்த்துகளையும் பணிப்பாளர் சபை தெரிவித்துக் கொள்கின்றது.

