தேசிய தொழில்முயற்சியாண்மை விருத்தி நிகழ்ச்சித் திட்டத்தை (NEDP) முன்னெடுப்பதற்காக மொரட்டுவ பல்கலைக்கழகம் மற்றும் தேசிய புத்தாக்க முகவர் அமைப்பு ஆகியவற்றுடன் யூனியன் வங்கி புரிந்துணர்வு உடன்படிக்கையில் கைச்சாத்திட்டுள்ளதாக அறிவித்துள்ளது. அதனூடாக, இலங்கையின் தொழில்முயற்சியாளர்களாக திகழும் நோக்கில் செயலாற்றும், சிறிய நடுத்தரளவு தொழில் முயற்சியாண்மைகள் மற்றும் இளைஞர்களுக்கு வலுவூட்டுவதற்கு எதிர்பார்க்கப்படுகின்றது. யூனியன் வங்கியின் தவிசாளர் நிர்வாணா சௌத்ரி, பணிப்பாளர் மற்றும் பிரதம நிறைவேற்று அதிகாரி தில்ஷான் ரொட்ரிகோ மற்றும் மொரட்டுவ பல்கலைக்கழகத்தின் சார்பாக உப வேந்தர் சிரேஷ்ட பேராசிரியர். என். டி. குணவர்தன ஆகியோரின் முன்னிலையில் இந்த உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டது.
சமூக தொழில் முயற்சியாளர்களுக்கு நிதி வசதிகளுக்கு அத்தியாவசிய அணுகலை வழங்கி, கட்டியெழுப்பல், ஆதரவளித்தல் மற்றும் ஊக்குவிக்கும், யூனியன் வங்கியின் சமூக தொழில்முயற்சியாண்மை பாடசாலையின் (UBSSE) நோக்கத்துடன் பொருந்தும் வகையில் இந்தத் திட்டம் அமைந்துள்ளது. இந்த மூலோபாய பங்காண்மை என்பது, நேபாளத்தின் மாபெரும் தனியார் வணிக வங்கியான CG Corp Global Group இன் நபில் வங்கியின் புகழ்பெற்ற தொழில்முயற்சியாண்மை விருத்தி நிகழ்ச்சித்திட்டமான NabilSSE இன் எதிர்பார்ப்புகளுக்கமைவானதாக அமைந்துள்ளது. யூனியன் வங்கியின் பிரதான பங்குதாரராக CG Corp Global Group திகழ்கின்றமை குறிப்பிடத்தக்கது.
NEDP சான்றிதழ் கற்கையினூடாக, பங்கேற்பவர்களுக்கு தமது சமூக நிறுவனங்களை அறிமுகம் செய்து கட்டியெழுப்பிக் கொள்வதற்கு அவசியமான அறிவு மற்றும் திறன்களை வழங்குவதாக அமைந்துள்ளது. இலங்கையின் 18 வயதுக்கு மேற்பட்ட குடியுரிமை பெற்றவர்களுக்கு இந்த திட்டத்தில் பங்கேற்க முடியும். சமூக தொழில்முயற்சியாண்மை சிந்தனைகளை கட்டியெழுப்பி, அதனூடாக மாற்றத்தை ஏற்படுத்த எதிர்பார்க்கும் ஆர்வலர்களுக்கு இந்தத் திட்டம் உகந்ததாக அமைந்திருக்கும். இந்த கற்கைகளை வழங்குவதற்கு மொரட்டுவ பல்கலைக்கழகம் முன்வந்துள்ளதுடன், யூனியன் வங்கி மற்றும் தேசிய புத்தாக்க முகவரமைப்பு ஆகியவற்றுடன் இணைந்து முன்னெடுக்கும். இந்தப் பங்காண்மையானது, இலங்கையில் தொழில்முயற்சியாண்மை மற்றும் புத்தாக்கம் ஆகியவற்றை ஊக்குவிப்பதற்கான யூனியன் வங்கியின் அர்ப்பணிப்பை உறுதி செய்வதாக அமைந்துள்ளது.
யூனியன் வங்கியின் சந்தைப்படுத்தல் உப தலைவி திஷானி திசாநாயக்க கருத்துத் தெரிவிக்கையில், “இந்தத் திட்டத்தில் கைகோர்ப்பதையிட்டு நாம் பெருமை கொள்கின்றோம், தொழில்முயற்சியாண்மையை கட்டியெழுப்புவதில் நாம் கொண்டுள்ள அர்ப்பணிப்பை பிரதிபலிப்பதாக அமைந்துள்ளது. இந்த நிகழ்ச்சியின் பல்வேறு பிரிவுகளுக்கு யூனியன் வங்கி ஆதரவளிக்கும். அதில் தொழிற்பாட்டு செலவுகள், நிபுணர் செலவுகள் மற்றும் வசதிகள் மேம்படுத்தல் போன்றன அடங்கியுள்ளன. மேலும், எமது நாடளாவிய ரீதியில் காணப்படும் கிளை வலையமைப்பினூடாக, நாடு முழுவதையும் சேர்ந்த விண்ணப்பதாரிகளை சென்றடைவதற்கு எதிர்பார்ப்பதுடன், அதனூடாக இந்த நிகழ்ச்சித் திட்டத்தின் பரந்த அணுகலை உறுதி செய்யக்கூடியதாக இருக்கும். மூலோபாய பங்காண்மைகள் மற்றும் பரிபூரண ஆதரவு போன்றவற்றினூடாக, எதிர்கால தொழில்முயற்சியாளர்களின் விருத்திக்கு பங்களிப்பு வழங்க நாம் எம்மை அர்ப்பணித்துள்ளோம்.” என்றார்.
UBSSE நிகழ்ச்சித் திட்டமானது, இலங்கையின் தொழில்முயற்சியாண்மை சூழல் கட்டமைப்பை மேம்படுத்துவதில் முக்கிய படியை ஏற்படுத்தவும், எதிர்பார்ப்புகள் நிறைந்த தொழில்முயற்சியாளர்களுக்கு தமது இலக்குகளை எய்தவும் வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுக்கும்.
படம்
யூனியன் வங்கியின் தவிசாளர் நிர்வாணா சௌத்ரி, பணிப்பாளர்/பிரதம நிறைவேற்று அதிகாரி தில்ஷான் ரொட்ரிகோ, சந்தைப்படுத்தல் உப தலைவி திஷானி திசாநாயக்க மற்றும் கூட்டாண்மை மற்றும் டிஜிட்டல் தொடர்பாடல்கள் முகாமையாளர் நிலுஷா வனசிங்க.
மொரட்டுவ பல்கலைக்கழகத்தின் உப வேந்தர் சிரேஷ்ட பேராசிரியர் என்.டி. குணவர்தன, வணிக பீடத்தின் பீடாதிபதி பேராசிரியர். ஜி.டி. சமரசிங்க, தொழிற்துறை முகாமைத்துவ திணைக்களத்தின் தலைமை அதிகாரி கலாநிதி. காயத்ரி குருப்பு, நிகழ்ச்சி ஒழுங்கிணைப்பாளர் பேராசிரியர். ரொஹான் முனசிங்க மற்றும் தேசிய புத்தாக்க முகவரமைப்பின் பிரதம புத்தாக்க அதிகாரி பேராசிரியர். அஜித் டி அல்விஸ்.

