உலகின் நான்காவது மாபெரும் தெங்கு உற்பத்தி நாடாகத் திகழும் இலங்கையின் தெங்கு உற்பத்தித்துறையினூடாக, நாட்டின் பொருளாதாரத்துக்கு முக்கிய பங்களிப்பு வழங்கப்படுகின்றது.
சிறிய மற்றும் நடுத்தரளவு தொழில்முயற்சியாளர்களை (SME) கட்டியெழுப்புவது மற்றும் நிலைபேறான வியாபாரங்களை கட்டியெழுப்பும் முயற்சிகளின் அங்கமாக, கப்ருக்க ஆயோஜன கடன் திட்டம் முன்னெடுக்கப்படுகின்றது. இதனூடாக, தென்னை பயிர்ச் செய்கையாளர்களுக்கு ஆதரவளித்து கைகொடுக்கப்படுவதுடன், நிதியளிப்புடன் ஆலோசனை வழங்கல்களும் மேற்கொள்ளப்படுகின்றன. இந்தத் திட்டத்தினூடாக சிறிய நடுத்தரளவு தொழில்முயற்சியாளர்கள்/தென்னை பயிர்ச் செய்கையாளர்களுக்கு பல்வேறு அபிவிருத்திச் செயற்பாடுகளுக்காக ரூ. 3.0 மில்லியன் வரை கடன்களைப் பெற்றுக் கொள்ள முடியும்.
யூனியன் வங்கியின் நிதியளிப்பு அபிவிருத்தி மற்றும் வியாபார மீட்சி/மறுசீரமைப்பு பிரதம முகாமையாளர் ஜனக எதிரிசிங்க கருத்துத் தெரிவிக்கையில், “தென்னைச் செய்கை என்பது பல்நோக்குடைய நீண்ட கால செய்கையாகும். விவசாயிகளுக்கு முறையான விளைச்சலைப் பெறுவதற்கு ஆகக்குறைந்தது ஐந்து முதல் ஏழு வருடங்கள் வரை காத்திருக்க வேண்டும். எனவே, இந்த பயிர்ச்செய்கைக்காக கடன்களைப் பெற்றுக் கொள்வதில் விவசாயிகள் தயக்கம் காண்பிக்கின்றனர். எனவே, கப்ருக்க ஆயோஜன கடன் திட்டத்தினூடாக, விவசாயிகளுக்கு ரூ. 3.0 மில்லியன் வரை கடன்களை கவர்ச்சிகரமான நிரந்தர வருடாந்த வட்டியான 8% இல்பெற்றுக் கொள்ள முடியும்.” என்றார்.
கப்ருக்க கடன் திட்டத்தினூடாக நிதிசார் வழிகாட்டல் வழங்கப்படுவதுடன், காணியின் தன்மைக்கமைய தயாரிக்கப்பட்ட திட்டமிடலினூடாக, காணியில் காணப்படும் வளங்களைப் பயன்படுத்தி உச்ச பயனை பெற்றுக் கொள்வது, அதனூடாக நிலையான வருமானமீட்டுவது, உயர் உற்பத்தித் திறனைக் கொண்டிருப்பது போன்றனவும் வழங்கப்படுகின்றன.
தென்னந்தோப்புகளில் பல அபிவிருத்தி செயற்பாடுகளுக்காக வங்கியிடமிருந்து கடன்கள் வழங்கப்படுகின்றன. அவற்றில், புதிய பயிரிடல், மீள்பயிரிடல் மற்றும் மறுசீரமைப்பு, இடையீட்டு செய்கை, விலங்கு வேளாண்மைத் திட்டங்கள் மற்றும் இயந்திர/சாதனங்கள் கொள்வனவு போன்றன அடங்குகின்றன. கடன்களை மீளச் செலுத்துவதற்கு ஐந்து வருட கால அவகாசம் வழங்கப்படுவதுடன், இதில் 12 மாதங்கள் சலுகைக் காலமும் அடங்கியுள்ளது. மேலும், தென்னைப் பயிர்ச் செய்கையில் ஈடுபடுவோருக்கு, பகுதியளவு வட்டி மீளளிப்பை தென்னை பயிர்ச்செய்கை சபையிடமிருந்து பெற்றுக் கொள்ளும் வசதி காணப்படுவதால், அவர்களின் நிதிச் செலவுகள் மேலும் குறைவடையும்.
25 வருடங்களுக்கு மேலாக யூனியன் வங்கி நாட்டின் சிறிய நடுத்தரளவு தொழில்முயற்சியாண்மை வியாபாரங்களின் வளர்ச்சிக்கு ஆதரவளிப்பதுடன், நிதியளிப்பு மற்றும் சிறு தோட்ட தேயிலை செய்கையாளர்களுக்கான கடன் வசதி (TSHCL) மற்றும் பெண் தொழில்முயற்சியாளர்களுக்கான விசேட கடன் திட்டங்கள் அடங்கலாக விசேட மானியத் திட்டங்களையும் வழங்குகின்றது.

