யூனியன் வங்கி சமூக தொழில்முயற்சியாண்மை பாடசாலைத் திட்டத்தின் (UBSSE) அங்கமாக, மொரட்டுவ பல்கலைக்கழகம் மற்றம் தேசிய புத்தாக்க முகவர் அமைப்பு ஆகியவற்றுடன் யூனியன் வங்கி இணைந்து, சிறிய, நடுத்தரளவு தொழில்முயற்சியாளர்களுக்கு வலுவூட்டும் வகையில் முன்னெடுக்கப்படும் தேசிய தொழில்முயற்சியாண்மை விருத்தி நிகழ்ச்சத் திட்டத்தின் (NEDP) கீழ், வளர்ந்து வரும் தொழில்முயற்சியாளர் குழுவினர் அண்மையில் தமது பயிற்சிகளை வெற்றிகரமாக பூர்த்தி செய்து, சான்றிதழ்களைப் பெற்றுக் கொண்டனர்.
படம்:
யூனியன் வங்கி பிரதம வணிக அதிகாரி அசங்க ரன்ஹொட்டி, சந்தைப்படுத்தல் உப தலைவர் திஷானி திசாநாயக்க, மொரட்டுவ பல்கலைக்கழகத்தின் பீடாதிபதி பேராசிரியர் தினேஷ் சமரசிங்க மற்றும் வணிக பீடத்தின் தலைமை அதிகாரி கலாநிதி. காயத்ரி குருப்பு ஆகியோர் NEDP சான்றிதழ்களை கையளிக்கின்றனர்.

