சிறிய நடுத்தரளவு தொழில்முயற்சியாளர்களின் திறனை மேம்படுத்துவதற்காக முன்னெடுக்கப்படும் தேசிய தொழில்முயற்சியாண்மை அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்டத்துக்கு (NEDP) வலுவூட்ட யூனியன் வங்கி முன்வந்துள்ளது. மொரட்டுவ பல்கலைக்கழகம் மற்றும் தேசிய புத்தாக்க முகவர் நிறுவனம் (NIA) ஆகியன இணைந்து இந்தத் திட்டத்தை முன்னெடுக்கின்றன. இந்தத் திட்டத்தை பூர்த்தி செய்த முதல் தொகுதி மாணவர்களுக்கு, மொரட்டுவ பல்கலைக்கழகத்தில் சான்றிதழ் வழங்கும் வைபவம் அண்மையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
தொழில்முயற்சியாண்மை கல்வி, திறன் விருத்தி மற்றும் ஆலோசனை வழங்கல் போன்றவற்றினூடாக சமூகங்களுக்கு வலுவூட்டும் வங்கியின் நடவடிக்கைகளுக்கு யூனியன் வங்கி சமூக தொழில்முயற்சியாண்மை பாடசாலை (UBSSE) தொடர்ந்தும் முக்கிய பங்காற்றி வருகிறது.

